ஸ்பெஷல் -1
Published:Updated:

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்


"மாஜி நடிகையும் கால்ஷுட் போன நடிகனும்!" - பரிதி இளம்வழுதி
கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்
கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்
"கருணாநிதியின் சாதனை அல்வா" - நாஞ்சில் சம்பத்
ப.திருமாவேலன்
கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

'கழக அரசை வீழ்த்த நினைக்கும் வீணர்காள்... கேளீர்!' என்ற தலைப்பிட்டு, முதல்வர்

கருணாநிதி வெளியிட்டு இருக்கும் விளம்பரம், இன்று தமிழக அரசியலில் தேர்தல் பிரசாரச் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தனது கட்சியின் 6-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என்று சொன்னதற்குப் பதிலாக தி.மு.க. தலைமைக் கழகம் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறது.

அந்த ஒரு பக்க விளம்பரத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுகிறார்கள், தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதியும் ம.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தும்!

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

பரிதி இளம்வழுதி

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

"பிள்ளைப் பிராயத்தில் அரசியல் ஆர்வம் வந்து, பள்ளியில் படிக்கும்போதே சமூகத்தைப் படித்து, இளைஞராக இருந்தபோது விமர்சகராக மாறி, மத்திய வயதில் நிர்வாக அனுபவம் பெற்று, பெரியாரிடம் பாடமும் அண்ணாவின் அரவணைப்பும்கொண்டு, இதுவரை நடந்த 11 தேர்தல்களிலும் வெற்றியைத் தவிர வேறு எதையும் அடையாது, ஐந்து முறை முதலமைச்சராக இன்று வரை இருக்கும் தலைவர் கலைஞர்தான், ஆறாவது முறையும் அரியணையில் ஏறப்போகிறார். மாஜி நடிகை நினைத்தாலும், கால்ஷீட் போன நடிகன் நினைத்தாலும் இந்தக் கனவு நிறைவேறாது.

'இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும், கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்' என்கிற அம்மையார் அதற்கு உதவாத காரணங்களைத்தானே சொல்கிறார். அவரைப்போல அரசாங்க ஊழியர் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பினோமா? பத்திரிகையாளர்களை ரோட்டில்விட்டு அடித்தோமா? வேலைவாய்ப்பு அலுவலகத்தை பூட்டு போட்டுப் பூட்டினோமா? தலைமைத் தேர்தல் அதிகாரியையே விமான நிலையத்தில் இறங்கவிடாமல் விரட்டி னோமா? சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களை 'சாமிக் குத்தம்' என்று சொல்லி, ரகசிய ட்ரீட்மென்ட் செய்தோமா? இம் என்றால் தடா, இல்லையென்றால் பொடா போட்டோமா? இதை எல்லாம் செய்தவர் ஜெயலலிதா. அவர் சொல்லலாமா... நாங்கள் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்று!

கலைஞர் தலைமையிலான இந்த அரசாங்கம் செய்திருக்கும் சாதனைகளைச் சொன்னால், உங்கள் பத்திரிகையின் பக்கங்கள் பத்தாது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் மோட்டாரும், 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூட்டுறவுக் கடன் ரத்து, சத்துணவில் வாரம் ஐந்து நாட்கள் முட்டை. அதோடு வாழைப் பழமும். அமைப்பு சாராத் தொழிலாளர் களுக்கு என்று 32 நல வாரியங்கள், நிலமற்ற விவசாயிகளுக்கு இலவச நிலம் என்று எத்தனையோ திட்டங்களைப் போட்டவர். பதவி ஏற்ற மேடையிலேயே திட்டங்களுக்குக் கையெழுத்துப் போட்டவர் இன்று வரையிலும் நித்தமும் அதைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரது திட்டங்களில் ஏதாவது ஒன்றின் நேரடிப் பயனையாவது ஆறு கோடித் தமிழர்களும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து இருப்பர். டி.வி. வாங்கி இருப்பார்கள், நிலம் வாங்கி இருப்பார்கள், இலவசக் காப்பீடு பெற்று இருப்பார்கள், வீட்டுமனைப் பட்டா கிடைத்திருக்கும், திருமண உதவி கிடைத்து இருக்கும். இதை எல்லாம் ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரே ஓர் உதாரணம் சொல்கிறேன்... கலெக்டர்கள் மாநாடு நடந்த போது கன்னியாகுமரி கலெக்டர் ஜோதிநிர்மலா, 'திருமணமாகாத முதிர் கன்னிகள் எங்கள் மாவட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்க யாரும் இல்லை. ஏதாவது திட்டம் கொண்டுவந்தால் நல்லது' என்றார். சில நிமிடங்கள் கழித்து அந்த கலெக்டரை அழைத்துப் பேசினார் முதல்வர். உடனே, நிதித் துறைச் செயலாளரிடம் ஏதோ கேட்டார். மேடைக்கு வந்த தலைவர், 'கவனிப்பார் அற்ற முதிர் கன்னிகளுக்கு மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்' என்று அறிவித்தார். இதைவிடத் துரிதமாக முடிவெடுக்கும் முதல்வர், எந்த மாநிலத்திலாவது உண்டா? இரண்டு அடி, இரண்டரை அடியில் இருப்பவர்களை உடல் ஊனமுற்றோர் பிரிவில் சேர்க்க மாட்டார்கள். ஆனால், அவர்களையும் உடல் ஊனமுற்றோராகக் கணக்கில்கொள்ளவைத்தவர் கலைஞர். யாருக்கெல்லாம் குரல் கொடுக்க ஆள் இல்லையோ, யாருக்கெல்லாம் அமைப்பு கிடையாதோ அவர்களுக்கு எல்லாம் ஆதரவாக கலைஞர் இருப்பது தவறா?

இதை எல்லாம் குறையாகச் சொல்ல

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

முடியாத ஜெயலலிதாவும் மற்றவர்களும், 'குடும்ப ஆட்சி' நடப்பதாகக் குறை சொல்கிறார்கள். என் மகன், நான் சார்ந்த கறுப்பு, சிவப்புக் கொடியைத்தான் பிடிப்பான். பிடித்தால்தான், அவன் என் மகன். தலைவரது குடும்பம் இந்தக் கட்சிக்காக அடி, உதைபட்டதுதான். தலைவர் மட்டுமல்ல, ஸ்டாலினும், அழகிரியும், தமிழரசுவும் சிறையில் இருந்தவர்கள்தான். தயாளு அம்மாளின் பாட்டியே இந்திப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான். தலைவரின் அம்மா அஞ்சுகம், கட்சி முன்னணியினர் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு ஈடுபாடு காட்டியவர். கட்சியின் வளர்ச்சிக்கு அவர்களது குடும்பம் பாடுபட்டதும் அதிகம். இழந்ததும் அதிகம். நேருவில் ஆரம்பித்து ராகுல் வரை... ஷேக் அப்துல்லாவில் தொடங்கி என்.டி.ஆர். வரை குடும்பங்கள் அரசியல் ஆர்வம்கொண்டுதான் இயங்கியிருக்கின்றன. குடும்பம் இருப்பவர்களுக் குத் துணையாகக் குடும்பம்தான் இருக்கும். நாங்கள் நடத்துவது குடும்ப அரசியல் என்றால், அவர் நடத்தும் அரசியலை நான் சொன்னால், உங்களால் பிரசுரம் பண்ண முடியாது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைச் சட்டம் ஆக்கினார் கலைஞர். அனைத் துத் தர மக்களும் சமச்சீரான கல்வியைப் பெறச் சட்டம் போட்டார். செம்மொழி மரியாதையைத் தமிழுக்கு வாங்கிக்கொடுத்தார். அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார். காலனி மக்களையும் மாடியில் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தார். இப்படி காலனி முதல் கர்ப்பக்கிரகம் வரை கொள்கைப் புரட்சியையும் தனக்குக் கிடைத்த முதலமைச்சர் பதவியைவைத்துச் செய்து காண்பித்தார். கலைஞரை வீழ்த்த நினைத்தவர் வீழ்ந்ததுதான் தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால சரித்திரம். இந்தத் தேர்தலிலும், அந்த வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தையும் கலைஞரே எழுதப் போகிறார். நீங்களும் நானும் பார்க்கப் போகிறோம்!"

நாஞ்சில் சம்பத்

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

"தி.மு.க. அரசை வீழ்த்துவதற்கு மக்கள் மன்றத்தில் நாங்கள் வெறிக் கூச்சல் இடவில்லை. பேசத்தான் செய்கிறோம். எங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து, அவருக்குத்தான் வெறி கிளம்பி இருக்கிறது.

நாங்கள் வீழ்த்த நினைப்பது... கருணாநிதியின் குடும்ப ஆட்சியை. இப்போது நடப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி. சம்பத்தின் மகன் ம.தி.மு.க-வில்தான் இருப்பான். தவறு ஏதும் இல்லை. ஆனால், கருணாநிதியின் வயதையத்த பெரியவரை மேலாதிக்கம் செய்து, அதிகாரம் செலுத்தும் விசித்திரம் தி.மு.க-வில் இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காகத் தகுதி இல்லாதவர் மந்திரி ஆக்கப்பட்டால், அது என்ன ஆதிக்கம்? அறம் சார்ந்த அரசியலுக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர், தனது இன்னொரு மகனுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்பதற்காக, அவரைச் சமாதானப்படுத்த ஒரு பரந்த அரசாங் கத்தின் பல்லாயிரம் கோடி புழங்கும் துறை தரப்படுமானால், அது குடும்ப அரசியலா... கொள்கை அரசியலா? தனது குடும்பத்தில் யாருக்கு என்ன பதவி, எந்தத் தகுதிக்காகத் தரப்பட்டது என்பதை நேர்மை இருக்குமானால், 'நெஞ்சுக்கு நீதி'யில் கருணாநிதி எழுதட்டும். ஆறு பேர் பவர் சென்டராக இருந்து தமிழ்நாட்டின் பவரைச் சூறையாடுகிறார்களே அதற்காகத்தான் இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.

நேயர் விருப்பத்தில் கேட்ட பாட்டையே திரும்பத் திரும்பப் போடுவது மாதிரி, முட்டை போட்டேன், டி.வி. கொடுத்தேன், அரிசி கொடுத்தேன், ஆம்புலன்ஸ் விட்டேன் என்று கருணாநிதி தனது சாதனையாகச் சொல்கிறார். இவை எல்லாம் திட்டங்கள்... சாதனைகள் அல்ல. திட்டம் வேறு... சாதனை வேறு. மேற்கு வங்காளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இருந்த ஃபராக்கி அணை பிரச்னையை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு இன்னொரு நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து, அதில் நம்முடைய பிரதமர் தேவகவுடாவைக் கையெழுத்துப் போடவைத்தார்.அதுதான் சாதனை. கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தனை முல்லைப் பெரியாறுக்காக, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை காவிரிக்காக இவர் எத்தனை தடவை பார்த்தார். இதுவரை பிரச்னையை முடிக்க முடிந்ததா கருணாநிதியால்? எமர்ஜென்சி வந்தபோது பயப்படாமல் எதிர்த்த கருணாநிதியால், இப்போது ஏன் முடியவில்லை? தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தன்னுடைய குடும்பத்தினரது சொத்துக்கள் குவிந்துவிட்டன. பார்த்தார், மாநில நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்துவிட்டார். நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்ததாக இருந்தால், அது சாதனையாகும். ஆளுக்கு அரைக் கிலோ அல்வா என்று அறிவிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன். இதெல்லாம் சாதனையா?

கருணாநிதி ஆட்சியில்தான் அளவு சாப்பாடு 72 ரூபாய் ஆகி இருக்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தர வேண்டாம். இரண்டு இட்லியை கருணாநிதியால் இலவசமாகத் தர முடியுமா? அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு... என்று வார்த்தை ஜாலம் சொல்லி, தமிழ கத்தை இருட்டாக்கியதுதான் மிச்சம். மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் அனைத்துமே முடக்கப் பட்டுவிட்டன. 'கருணாநிதி நடத்தும் மாநாட்டுக்கு சிவத்தம்பி வரலாம், செந்தமிழ்த் தாய் வர மாட்டாள்' என்று எழுதியதற்காகவே பழ.கருப்பையா கையை பட்டப் பகலில் அடியாட்கள் முறுக்கி உடைத்திருக் கிறார்கள். தா.பாண்டியன் காரை உடைக்கிறார்கள், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்படுகிறது, பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அடிக்கிறார், சப்-கலெக்டர் ஜனார்த்தனனை மந்திரியின் ஆட்கள் சாதியைச் சொல்லி திட்டி மிரட்டு கிறார்கள், குடியாத்தம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. அனுப வித்த சித்ரவதைகள் எத்தனை, உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஸைப் பந்தாடுகிறார்கள், சீமான் எப்போது வெளியே வருவார் என்றே தெரியவில்லை, வைகோ மீது வழக்குகள், என் மீது எல்லா ஊரிலும் வழக்குகள்... இப்படி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்ட இந்த ஆட்சியை எதற்கு வைத்திருக்க வேண்டும்?

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

தனக்குப் பாராட்டு விழா நடந்தால் போதும் என்று நினைக்கும் முதலமைச்சர், ஏக இந்தியாவில் இவர் ஒருவர்தான். பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே ஒருவர், அவரது தியாகத்தைப் புகழ்ந்து பேசினார். 'இவரது பேச்சை இவ்வளவு நேரம் கேட்டதுதான் என்னுடைய தியாகம்' என்று அவர் சொன்னார். நல்ல தலைவர்கள், தங்களை யாராவது புகழ்ந்தால் நாணித் தலை குனிந்தார்கள். ஆனால் இவரோ, சினிமாக் காரர்கள் தனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தூக்கிக் கொடுக்கிறார். ஆசாட பூபதிகளும் பஃபூன்களும் உட்கார்ந்துகொண்டு அதிகாரத்தில் உள்ளவர் களுக்கு ஆராதனை பாடுவது மன்னர் காலத்தில்

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்

மக்கிப்போனவை. அதை மறுபடியும் கருணாநிதி அரங்கேற்றுவது சரித்திர விசித்திரம்!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்பேன் என்று முழக்கமிட்டார் கருணாநிதி. 115 பள்ளிகளில் இந்தி வருகிறது என்பதை எதிர்த்து மாணவர் போராடினார் கள். ஆனால், இன்று லட்சக்கணக்கான பள்ளிகளில் ஆங்கிலம் இருக் கிறதே... இது யாருடைய தவறு? தமிழில் படிக்கத் தமிழர்களே தயார் இல்லை என்ற மனோபாவம் உருவானதற்கு கருணாநிதி காரணம் அல்லவா?

கொள்கையைக் காவு கொடுத்து, லட்சியத்தை அடகுவைத்து, நிலத்தையும் கடலையும் வானத்தையும் வளைத்துப்போட்ட பிறகு, இன்னும் என்ன வேண்டுமாம்?

இது முடிக்கப்பட வேண்டிய ஆட்சிதான்... முடியாவிட்டால், நாடு முடிந்துபோகும்!"

கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்
கருணாநிதியின் சாதனை அல்வா!-நாஞ்சில் சம்பத்