நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையைச் சுற்றியுள்ள தோட்டிகாடு, விளாரிகாடு, துவரப்பள்ளம், பள்ளகுழிபட்டி போன்ற மலைவாழ் கிராமங்களில், காதலித்தாலோ, கள்ள உறவு வைத்தாலோ ஊர்ப் பஞ்சாயத்து கூடும். மறு நாள் காலை தவறு செய்தவர், கேப்பை மாவில் களி செய்து, பன்றிக்கறியோடு பட்டைச் சாராயம் வாங்கி ஊருக்கே விருந்துவைக்க வேண்டும். அத்துடன் 101 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். விருந்து கொடுத்தால், பஞ்சாயத்து மன்னிப்பு கொடுக்கும். இல்லையென்றால், ஊரைவிட்டு விலக்கிவைத்துவிடுவார்கள்!
|