ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?


அரசியல்
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
 
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

த்திய அரியணையில் அடுத்ததாக அமரப்போவது யார்... மீண்டும் காங்கிரஸா அல்லது பாரதிய ஜனதாவா என்பதற்கான பதில் 6 மாநில மக்களின் கைகளில் இருக்கிறது.

டெல்லி, காஷ்மீர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 6 மாநிலங்களில் நடக்கும் தேர்தல் முடிவுகள்தான் அடுத்த மத்திய அரசுக்கான டிரெய்லர் என்பதால், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸூக்கு இப்போதே உள் காய்ச்சல். ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. டெல்லி, காங்கிரஸின் கைகளில் இருக்கிறது. தேசிய முன்னணியின் வசம் மிசோரம் இருக்கிறது. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இதுதான் 6 மாநில ஆட்சி நிலைமை. டெல்லியைக் குறிவைத்து காய் நகர்த்துகிறது பாரதிய ஜனதா. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தை டார்கெட் பண்ணுகிறது காங்கிரஸ். இந்தப் பதற்றத்தில் காஷ்மீர், மிசோரமை இரண்டு தேசியக் கட்சிகளுமே கண்டுகொள்ளவில்லை. காரணம், அங்கே மகா பலத்தோடு காத்திருக்கின்றன மாநிலக் கட்சிகள். அவர்களோடு முட்டி மோதி கட்டுப் போட்டுக்கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை.

டிசம்பர் 8-ம் தேதி இந்த 6 மாநிலத் தேர்தல் முடிவுகளும் வரும்போது, விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிடும். காஷ்மீர் தவிர, 5 மாநிலங்களில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் எக்ஸ்ட்ரா இனிமாவாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் நிற்கிறது. இந்த 6 மாநிலங்களிலும் அவர் வாங்கும் வாக்குகள்தான் மூன்றாவது அணிக்கான முதல் புள்ளி. இப்படி எல்லா வகைகளிலும் லைம் லைட்டில் இருக்கும் 6 மாநிலத் தேர்தல் பற்றிய அலசல் இது...

டெல்லி: மூன்றாம் முறை வெல்வாரா ஷீலா?

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

லைநகரத்தைக் கைப்பற்றுவது காங்கிரஸ் - பாரதிய ஜனதா இரண்டுக்குமே மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். இரண்டு தடவையாகத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் என் கனவு நிறைவேறவில்லை. மூன்றாவது தடவையாக வந்ததும் நிறைவேற்றுவேன்!' என்று முதல்வர் ஷீலா தீட்சித் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். தான் சொல்வதை மக்கள் நம்ப, அவர் ஒதுக்கியிருக்கும் விளம்பர பட்ஜெட் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய். 11 விளம்பர ஏஜென்ஸிகளின் கைங்கர்யத்தில் டெல்லி முழுக்க 'டெல்லி மாறுகிறது' என்கிற விளம்பரம் கண்ணில் அறைகிறது.

டெல்லியின் மத்திய தரவர்க்கத்தினர்தான் இதுவரை அவரை அதிகமாக மதித்தார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் பலரின் இருப் பிடங்களும், வாழ்க்கையும் பறிபோனதில் ஷீலா மீது அவர்களுக்குச் செம கோபம். தண்ணீர், மின்கட்டணத்தை அதிகப்படுத்தி நிதி திரட்டியதால் எக்ஸ்ட்ரா அதிருப்தி. சமீபத்தில் சோனியா பேசிய கூட்டத்தில் விவசாயிகள் புகுந்து கலாட்டா செய்ய, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்து விரட்டும் அளவுக்கு மோசமான சூழ்நிலை.

''உ.பி, பீகார் மாநிலங் களில் இருந்து இங்கு குடி யேறியவர்களால்தான் டெல்லியில் பல பிரச் னைகள்!'' என்று ஷீலா சொன்னதை காங்கிரஸ் காரர்களே ரசிக்கவில்லை. கிழக்கு டெல்லியில் பெரும்பாலும் உ.பி, பீகார் மாநில மக்கள் இருப்பதால் ஷீலாவுக்கு எதிர்ப்பு கிளம்ப, மன்னிப்பு கேட்டார். கிழக்கு டெல்லியின் வாக்குகள் பெரும்பாலும் மாயாவதிக்குச் செல்லும் வாய்ப்புகளே அதிகம். தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நடந்த என்கவுன்ட்டர்கள் காரணமாக காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு கட்சிகள் மீதும் முஸ்லிம்கள் கோபமாக இருக்கிறார்கள். இந்த ஓட்டுக்களை அப்படியே அள்ள நினைக்கிறார் மாயாவதி. அவரது அணியில் நிற்பவர்கள் மொத்தமும் பண முதலைகள் என்பதால், டெல்லியில் கரன்சி விளையாட்டுதான். தவிர முலயாம் சிங், பஸ்வான் கட்சிகள் தனித்து நிற்கின்றன. 'காங்கிரஸூக்குப் போக வேண்டிய ஓட்டுகள் மாயாவதி, முலயாம், பஸ்வான் என திசை மாறிப் பிரிவது நமக்கு வசதி' என்று பாரதிய ஜனதா காத்திருக்கிறது. அதுதான் நடக்குமோ!

ராஜஸ்தான்: ராஜ்யம் இழக்கும் மகாராணி!

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

பாரதிய ஜனதாவின் வசுந்தரா ராஜே சிந்தியா, ராஜ குடும்பத்து மகாராணி என்பதால், வசீகரம் அதிகம். அதே அளவு எதிர்ப்பும் கூடுதல். இவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. 'நான் கொடுத்து வழங்கும் குடும்பத்தில் பிறந்தவள். எடுத்துப் பழக்கம் இல்லை' என்று வசுந்தரா பதில் சொல்கிறார். நெசவாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கிரண் மஜும்தார் என்ற தொழிலதிபருக்கு லிப் கிஸ் கொடுத்து, அதிரடி பண்ணினார் வசுந்தரா ராஜே. எதிர்ப்பு பலமாகக் கிளம்ப, 'நான் என்ன ஃபேஷன் ஷோவில் கேட்வாக் செய்தேனா என்ன?' என்று திருப்பிக் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார். இவருக்கு எதிராக குஜ்ஜார் மக்கள் கம்புகளைத் தூக்கிக்கொண்டு நடத்திய வன்முறைப் போராட்டம், இந்தியா முழுக்கப் பிரபலம். ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பில் 63 பேர் பலியானது, சதிமாதா கோயில் கட்டியது, ஜெய்ப்பூரில் முஸ்லிம்களால் வீடு வாங்க முடியாத நிலைமை, கிராமங்களில் சங்பரிவார் ஆட்சிதான் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு, இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவில் வசுந்தரா ராஜே ஹெலிகாப்டர், விமானம் வாங்கியது என இவரது ஆட்சிக்கு ஆப்புவைக்கும் விஷயங்களின் லிஸ்ட் கொஞ்சம் நீளமானது.

இவ்வளவு பலவீனங்கள் இருந்தாலும், அதை வலுவாகச் சொல்லி பிரசாரம் செய்ய காங்கிரஸால் முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் என்பது காங்கிரஸ்காரர்களுக்கே தெரியவில்லை. அசோக் கெலாட் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், கட்சிக்குள் அவருக்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலைத் திரும்பப் பெற்று புதிய வேட்பாளர் பட்டியலை மீண்டும் அறிவிக்கும் அளவுக்குக் காங்கிரஸில் குழப்பம் கபடி ஆடுகிறது. மாயாவதியின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றலாம் என்பது நிலவரம்!

மத்தியபிரதேசம்: உதற வைக்கும் உமாபாரதி!

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

பாரதிய ஜனதா சார்பில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கிறார். முதலில் உமாபாரதிதான் இங்கு முதல்வர். அவர் மீது கர்நாடகாவில் வழக்கு வந்ததும், பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்கள் சிறையில் இருந்ததால், கட்சியில் முக்கியத்துவம் பெற்றார். மறுமாதமே வாஜ்பாய், அத்வானி முன்பாகத் தகராறு செய்ததாகக் கட்சியைவிட்டு கட்டம் கட்டப்பட்டார். இப்போது பாரதிய ஜனசக்தி என்ற புதிய பேனரில் வலம் வருகிறார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய் என்ற அறிவிப்புகளும், சிவராஜ் சவுகானுக்கு இருக்கும் நல்ல பெயரும் பாரதிய ஜனதாவுக்கு பாஸிட்டிவ் முதலீடுகள். அதே வாக்குறுதிகளை காங்கிரஸூம் சொல்லி குடைச்சல் கொடுக்கிறது. இவர்களது வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் மாயாவதி மும்முரமாகக் களம் இறங்கியிருக்கிறார்.

சுரேஷ் பச்சோரியை முன்னிறுத்துகிறது காங்கிரஸ். அர்ஜுன் சிங் உடல்நிலையைக் காரணமாகக் காட்டி ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். மாதவ ராவ் சிந்தியா மகனும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிட்டார். மத்திய அமைச்சர் கமல்நாத் மட்டும் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார். முக்கியஸ்தர்கள் ஒதுங்கிஇருப்பதும் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காததும் காங்கிரஸின் பலவீனங்கள். உ.பி-யின் பார்டரில் இருக்கும் மாநிலம் என்பதால், மாயாவதி அனல் காற்று இங்கும் வீசுகிறது. பிராமணர், தலித் ஆகிய இரண்டு பிரிவினர் அதிகம் உள்ள மாநிலம் இது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டு கட்சிகளும் அந்த வாக்காளர்களைக் குறிவைத்துள்ளன. ஆனால், ஆட்சிக்கு பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லாததால், மீண்டும் பாரதிய ஜனதா வெற்றிபெறும் நிலைமை!

சட்டீஸ்கர்: சல்வார் ஜூடும் சர்ச்சை!

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் போட்டியிடுகிற முக்கியமான வேட்பாளர்களில் 49 பேர் கோடீஸ்வரர்கள். 53 பேர் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள். இப்போது ஆள்வது பாரதிய ஜனதாவின் ராமன் சிங். விலைவாசி உயர்வு, ஊழல், தீவிரவாதம் என்று ராமன் சிங்குக்கும் சட்டீஸ்கர் மக்களுக்கும் பல சங்கடங்கள். நக்சலைட்டுகள் தொல்லையும் அதிகம். அவர்களை ஒழிக்க ராமன் சிங் எடுத்த முடிவு விசித்திரமானது. பழங்குடியினர் ஆதரவு பெற்ற நக்சலைட்டுகளை ஒழிக்க, பழங்குடியில் ஒரு பிரிவினரை உருவாக்கி, துப்பாக்கி கொடுத்து 'சல்வார் ஜூடும்' என்று பெயரிட்டார். இதை மனித உரிமை ஆர்வலர்கள் காட்டமாக எதிர்த்தார்கள். கிலோ அரிசி மூன்று ரூபாய் என்று இவர் செய்துள்ள அறிவிப்பு சட்டீஸ்கரில் பரபரப்பு கிளப்பியது. பார்த்தார் காங்கிரஸின் அஜித் ஜோகி. கிலோ அரிசி இரண்டு ரூபாய், இலவச நிலத் திட்டம் என்று தி.மு.க-வைக் காப்பியடித்தார். இதற்கும் சட்டீஸ்கர் பரபரப்பானது. விபத்தால் பாதிக்கப்பட்ட அஜித் ஜோகி வீல் சேரில் சட்டீஸ்கர் முழுவதும் சுற்றி வருகிறார். அவரது மனைவி ரேணு ஜோகியும் உடன் வருகிறார். காங்கிரஸ் ஜெயித்தால் ரேணு முதல்வர் ஆகலாம் என்று பேச்சு.

செல்வாக்கு இல்லாதவர்கள், மக்கள் அதிருப்தியைப் பெற்றவர்கள் என்று லிஸ்ட் எடுத்து, இருப்பவர்களில் 20 எம்.எல்.ஏ-க்களுக்குக் கல்தா கொடுத்தது பாரதிய ஜனதா. இதற்கு 'குஜராத் பாணி' என்று பெயர். 'கெட்ட பேர் வாங்கிய சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 50 பேருக்கு சீட் கிடையாது' என்று அறிவித்ததால்தான் குஜராத்தில் நரேந்திரமோடி வெற்றி பெற்றார். அதே முறையை ராமன் சிங்கும் பின்பற்றியதால் இங்கு மீண்டும் பாரதிய ஜனதா வர வாய்ப்பு உண்டு!

மிசோரம்: மாநில கட்சிக்கு ஜே!

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

40 தொகுதிகள் மட்டுமேகொண்ட இந்த மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி ஆட்சி சோரன் தங்கா தலைமையில் நடக்கிறது. 'வளர்ச்சித் திட்டங்கள் தொடர எங்களுக்கு வாக்களியுங்கள்' என்கிறார் இவர். ஆனால், 'இவர் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அரசாங்கப் பணத்தைத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்துகிறார்' என்று காங்கிரஸ் லால் தன்ஹலா சொல்கிறார். இதற்கு மத்தியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணி களத்தில் குதித்துள்ளது. மூன்று கட்சிகள்கொண்ட இந்தக் கூட்டணிக்கு விவசாயிகள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பது மற்ற கட்சிகளுக்கான கெட்ட செய்தி. இந்தக் கூட்டணி சார்பில் 84 வயது பிரிகேடியர் செய்லோ போட்டியிடுகிறார். இப்படி மிசோரமில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இங்கு பாரதிய ஜனதா பெயர் அடிபடவே இல்லை.

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் மரியாதை அதிகம். எஸ்.எம்.எஸ். மூலமாக ஓட்டு கேட்கும் பழக்கத்தை யாரோ ஆரம்பித்துவைக்க, அங்கு ஒவ்வொரு வேட்பாளரும் சுமார் 20 சிம் கார்டுகளை வாங்கிவைத்து விரல்கள் வலிக்க எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் மிசோரம் தேசிய முன்னணியே ஆட்சிக்கு வரும் என்கிறார்கள்!

காஷ்மீர்: அமைதியாக தேர்தல் நடக்குமா?

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

'யார் வெற்றி பெறுவது என்பதைவிட தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும்' என்பதுதான் அத்தனை கட்சிகளின் பிரார்த்தனையும். 87 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்த வேண்டிய அளவுக்கு தீவிரவாதப் பயம்!

காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான

அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?

நகர் - முசபராபாத் சாலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு லாரி போக்குவரத்து தொடங்கியதும், பாரமுல்லா - உதம்பூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியதும் காஷ்மீர் மக்களின் சமீபத்திய சந்தோஷங்கள். ஆனால், அதைக் கொண்டாட முடியாத அளவுக்குப் பிரிவினைவாதக் கட்சிகள் பந்த் நடத்த, ஊர் வெறிச்சோடியது. 'காஷ்மீரைத் தன்னாட்சிகொண்ட பிரதேசமாக ஆக்குவோம்' என்று ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும், முப்தி முகமது சையத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் மாறி மாறிச் சொல்கின்றன. ஃபரூக் - உமர், முப்தி - மெகபூபா ஆகிய இரண்டு குடும்பத்தினர் சொல்வதைக் கேட்பதற்குக்கூட சாலையில் மக்கள் கூடுவதில்லை. இதற்கு மத்தியில் காங்கிரஸ் 'அமைதி'க்கான பிரசாரத்தில் இறங்கியுள்ளது. பாரதிய ஜனதாவுக்குப் பிரச்னையே இல்லை. ஜம்முவின் சில பகுதியில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு 'நமக்கேன் வம்பு' என்று வேடிக்கை பார்க்கிறது.

முப்தி முகமதுவும் காங்கிரஸூம் இணைந்து கடந்த முறை செய்த காமெடிகளை மக்கள் ரசிக்கவில்லை என்பதால் இம்முறை ஃபரூக் பக்கம் மக்கள் கவனம் திரும்பலாம். முதல்கட்ட வாக்குப்பதிவில் 65 சதம் பதிவானது ஆச்சர் யமானது. இவ்வளவு சதம் பதிவானது,ஜனநாயகத்தின் மீது காஷ்மீரிகளுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது!

 
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?
அடுத்த பி.எம். யாரு? சொல்லுமா இந்த ஆறு?