Published:Updated:

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

Published:Updated:

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னிலையில், நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்!

"அகண்ட நாகாலாந்து' என்ற தனி நாடு கோரிக்கையுடன் கடந்த 70 ஆண்டுகளாக வன்முறைப் பாதையில் போராடி வந்த தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுடன் (என்.எஸ்.சி.என்.-ஐஎம்) மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தனி நாடு கோரி வந்த ஆயுதக் குழுவின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், சுதந்திரம் பெற்றதில் இருந்தே, அதாவது 70 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதம் தலைவிரித்தாடி வருகிறது. நாகாலாந்து தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே 1997 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், முக்கிய தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலின் (ஐ.எம்.பிரிவு) சில நிபந்தனைகளால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

மத்தியில், கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பின் சமாதான நடவடிக்கையில் தீவிரம் காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. டெல்லியில், பிரதமர் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிகாரி ஆர்.என்.ரவி, மத்திய அரசு சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் சார்பில் அதன் பொதுச்செயலாளர் துயிங்கலங் முய்வா கையெழுத்திட்டார். அதன்பின் அவர், பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நாகாலாந்து சட்டையையும், கருப்பு–சிவப்பு சால்வையையும் பரிசளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ''இது, பிரச்னையின் முடிவு மட்டுமல்ல, புதிய எதிர்காலத்தின் தொடக்கமும் ஆகும். சமத்துவம், மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றை கடைபிடித்தால், என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கு இதுவே உதாரணம். நாகாலாந்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நான் முன்னுரிமை அளிப்பேன்.

ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால், நாகாலாந்து தீவிரவாத பிரச்னை இத்தனை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பலர் பலி வாங்கப்பட்டு விட்டனர். இதற்கு முடிவு கட்டும்வகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. அமைதி முயற்சிகளுக்கு அபரிமிதமான ஆதரவு அளித்த நாகா மக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

இங்கு கையெழுத்திட்ட முய்வா, அறிவுக்கூர்மையையும், துணிச்சலையும் காண்பித்துள்ளார். தீவிரவாதம் முடிவுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தவறான பாதையில் சென்றவர்கள், சரியான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.