<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">மலை மேல் மாளாத யுத்தம்...</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">அடித்தாரா அமைச்சர்?</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>சி</strong>ல மாதங்களுக்கு முன்பு, கடும் நிலச்சரிவில் சிக்கியிருந்த நீலகிரி மாவட்டம் எப்படியோ மெள்ள மெள்ள மீண்டு நிமிர்ந்துவிட்டது. ஆனால், அம்மாவட்ட தி.மு.க-வோ கோஷ்டி பிரச்னைகளால் பெரும் சரிவை நோக்கி நகர் வதாக கூக்குரல் எழுந்திருக்கிறது! </p><p>கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், கதர் வாரியத் துறை அமைச்சருமான இளித்துறை ராமச்சந்திரன் ஒரு கோஷ்டியாகவும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் முபாரக் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதாக பலமான பேச்சுண்டு. இந்நிலையில், தி.மு.க. கிளைச்செயலாளர் ஒருவரை அமைச்சர் ராமச்சந்திரன் அடித்துவிட்டதாக ஒரு பரபரப்பு கிளம்ப, தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக விவகாரங்களை ஊதிவிடுவதே முபாரக்தான் என்று எதிர் குற்றச்சாட்டு எழ... நீலகிரி இப்போ செம ஹாட்! </p> <p>இளித்துறை ராமச்சந்திரனால் தாக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நஞ்சநாடு </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>அருகிலுள்ள 'ரெட்ஹில்- இந்திரா நகர்' தி.மு.க. கிளைச்செயலாளர் மனோகரனை சந்தித்தபோது, ''சில மாசங்களுக்கு முன்னாடி இங்கே பெய்ஞ்ச பேய் மழையில ரோடு வீடெல்லாம் நாசமா போன கொடுமை உங்களுக்கே தெரியும். இதை சரிபண்ண அரசாங்கம் ஒதுக்குன நிதியில பல இடங்களில் புனரமைப்புப் பணி நடந்து முடிஞ்சுடுச்சு. ஆனா, எங்க ஏரியாவுல சுமார் எட்டு கிலோமீட்டருக்கு சிதைஞ்சுபோன சாலையை மட்டும் சரிபண்ணவே இல்லை. ஸ்கூல் புள்ளைங்க பாவம், அந்த முரட்டுப்பாதையில கால் நோக நடந்தே போயிட்டு இருக்குதுங்க. பிரசவம், நெஞ்சு வலின்னு எந்த அவசரத்துக்கும் கார் கொண்டுபோக முடியல. இதை சரிபண்ணச் சொல்லி மக்கள் என்னைப் போட்டுத் துளைச்சு எடுக்கிறதாலே பலதடவை அமைச்சர் ராமச்சந்திரன்கிட்ட முறையிட்டேன். எந்த பிரயோசனமும் இல்ல. இதனால, போன மாசம் 9-ம் தேதி மதியம் ஊட்டியில இருக்கிற கலைஞர் அறிவாலயத்துல அமைச்சரை நேரில் சந்திச்சுப் பேசினேன். 'எங்க பிரச் னையை பலதடவை உங்ககிட்ட சொல்லிட்டேன். உங்க சொந்த ஏரியாவுல இப்படி இருந்தா </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>இத்தனை மாசம் கண்டுக்காம இருப்பீங்களா?'ன்னு கேட்டேன். உடனே கடுமையா டென்ஷனானவர், 'எதையும் சொல்ல முடியாது. வெளியிலே போடா நாயே...'ன்னு என் சாதி பெயரைச் சொல்லி கேவலமா திட்டினார். சட்டுன்னு என் இடது கன்னத்துலயும் அறைஞ்சு கீழே தள்ளிட்டார். அந்த நேரத்துல அங்கே இருந்தவங்க அத்தனை பேரும் இதைப் பார்த்தாங்க. அமைச்சர் பக்கத்துல இருந்தவங்க என்னை வெளியில தள்ளிட்டு வந்துட்டதால, என்னால அவர்கிட்ட நியாயம் கேட்க முடியல. அதனால, என் பிரச்னையை விளக்கி, 'கலைஞரின் நல்ல ஆட்சியில் இப்படி ஓர் அமைச்சரா?'ன்னு தலைப்புல பிட் நோட்டீஸ் அடிச்சு வெளியிட்டேன். போஸ்டர் அடிச்சேன். ஆனா, அமைச்சர் அந்த நோட்டீஸ்களை கிழித்தெறிய உத்தரவு போட்டுட்டாரு. இந்த மாவட்டத்துல எனக்கு நீதி கிடைக்காதுன்னு சொல்லித்தான் தளபதி பிறந்த நாளன்னிக்கு அவரை சென்னையில நேர்ல சந்திச்சு, மினிஸ்டர் மேலே புகார் மனு கொடுத்திருக்கேன். தாழ்த்தப்பட்டவனான எனக்கு ஏற்பட்ட அவமானத்தை தலைவரும், தளபதியும் துடைப்பாங்கன்னு முழுசா நம்புறேன்...'' என்றார் நம்பிக் கையாக.</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>'மனோகரன் விவகாரத்தை எக்கச்சக்கமாகத் தூண்டி விடுவதே முபாரக் கோஷ்டிதான்' என்று சொல்லும் லோக்கல் தி.மு.க-வினர் சிலர் நம்மிடம், ''ராமச்சந்திரனை அமைச்சர் பொறுப்புல இருந்து தூக்கி வீசுறதுக்கு முபாரக் டீம் பகீரதப் பிரயத்தனம் பண்ணிக்கிட்டிருக்கு. ஏற்கெனவே, கோத்தகிரியில படுகர் இனத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை வெச்சு அமைச்சரை கவிழ்க்கப் பார்த்தாங்க. ஆனா, தளபதி அந்த விவகாரம் குறித்து முழுசா </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>விசாரிச்சு, அமைச்சர் மேலே எந்த தப்பும் இல்லைனு புரிஞ்சுக்கிட்டாரு. இப்போ மனோகரன் விவகாரத்தை முபாரக் ஆட்கள் கையில எடுத்திருக்காங்க. நோட்டீஸ் அடிக்கவும், தளபதியை சந்திச்சு புகார் கொடுக்கவும் மனோகரனை தூண்டிவிடுறதே இந்த கோஷ்டிதான். ஆக மொத்தத்துல நீலகிரியில தி.மு.க. நிலைமை அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்கு...'' என்றார்கள் அவர்கள். </p> <p>முபாரக்கிடம் பேசிய போது, ''யாரையும் கவிழ்த்து இந்தக் கட்சியில வளர்ந்தவன் நான் இல்லை. எம்.ஜி.ஆர். காலத்துலேயே கஷ்டப்பட்டு இங்கே நான் கட்சி வளர்த்தது தலைவருக்கும், தளபதிக்கும் தெரியும். அமைச்சர் ராமச்சந்திரன் தன்னை அடிச்சுட்டதா அந்தக் கிளைச்செயலாளர் மனோகரன், தலைமைக்கு கொடுத்த புகாரின் நகல் எனக்கும் வந்துச்சு. அவரை நான் பொறுமை காக்கச் சொல்லியிருக்கேன். தலைமைக் கழகம்தான் இந்த விஷயத்துல விசாரணை நடத்தி முடிவெடுக்கணும். ராமச்சந்திரன் ஒருவேளை மனோகரனை அடிச்சிருந்தார்னா... அப்படியரு கோபம் வரும்வகையில் அடிபட்டவர் என்ன செய்தார் என்பதும் விசாரணையில் தெரியவரும். இந்த சம்பவம் நடந்ததா சொல்லும் வேளையில நான் அங்கே இல்லை. எங்க கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரான பாண்டியராஜன் அங்கே இருந்திருக்கார். அவர்தான் அதைப் பார்த்ததாகவும் சொன்னார். இப்படியரு சம்பவம் நடந்தது உண்மை என்றால்... அது ரொம்ப வருத்தத்துக்கு உரிய விஷயம்!'' என்றார். </p> <p>இளித்துறை ராமச்சந்திரனிடம் பேசிய போது, ''தலைவர் கலைஞர் காட்டிய பாதை யில் பயணிக்கிறோம். இங்கே கட்சியில் எந்த கோஷ்டியும் இல்லை. நிலச்சரிவுக்குப் பிறகு சோறு தண்ணியை மறந்து காடு மேடா நான் அலைஞ்சு புனரமைப்புப் பணியை போர்க்கால அடிப்படையில நடத்தினது எல்லாருக்கும் தெரியும். மனோகரன் ஏரியாவை மட்டும் எதுக்கு நான் புறக்கணிக்கப் போறேன்? அவரை அடிக்கவும் இல்ல, சாதிப்பெயர் சொல்லி திட்டவும் இல்ல. ஏதோ எண்ணத்துல இப்படியரு பிரச்னையை வளர்த்து வர்றாங்க. என் நியாயத்தை எங்க தலைமை புரிந்து கொள்ளும்!'' என்றார் அவர் பொறுமையாக! </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- எஸ்.ஷக்தி<br /> படங்கள் தி.விஜய்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> ramachandran manokaran mubarak </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">மலை மேல் மாளாத யுத்தம்...</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">அடித்தாரா அமைச்சர்?</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>சி</strong>ல மாதங்களுக்கு முன்பு, கடும் நிலச்சரிவில் சிக்கியிருந்த நீலகிரி மாவட்டம் எப்படியோ மெள்ள மெள்ள மீண்டு நிமிர்ந்துவிட்டது. ஆனால், அம்மாவட்ட தி.மு.க-வோ கோஷ்டி பிரச்னைகளால் பெரும் சரிவை நோக்கி நகர் வதாக கூக்குரல் எழுந்திருக்கிறது! </p><p>கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், கதர் வாரியத் துறை அமைச்சருமான இளித்துறை ராமச்சந்திரன் ஒரு கோஷ்டியாகவும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் முபாரக் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதாக பலமான பேச்சுண்டு. இந்நிலையில், தி.மு.க. கிளைச்செயலாளர் ஒருவரை அமைச்சர் ராமச்சந்திரன் அடித்துவிட்டதாக ஒரு பரபரப்பு கிளம்ப, தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக விவகாரங்களை ஊதிவிடுவதே முபாரக்தான் என்று எதிர் குற்றச்சாட்டு எழ... நீலகிரி இப்போ செம ஹாட்! </p> <p>இளித்துறை ராமச்சந்திரனால் தாக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நஞ்சநாடு </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>அருகிலுள்ள 'ரெட்ஹில்- இந்திரா நகர்' தி.மு.க. கிளைச்செயலாளர் மனோகரனை சந்தித்தபோது, ''சில மாசங்களுக்கு முன்னாடி இங்கே பெய்ஞ்ச பேய் மழையில ரோடு வீடெல்லாம் நாசமா போன கொடுமை உங்களுக்கே தெரியும். இதை சரிபண்ண அரசாங்கம் ஒதுக்குன நிதியில பல இடங்களில் புனரமைப்புப் பணி நடந்து முடிஞ்சுடுச்சு. ஆனா, எங்க ஏரியாவுல சுமார் எட்டு கிலோமீட்டருக்கு சிதைஞ்சுபோன சாலையை மட்டும் சரிபண்ணவே இல்லை. ஸ்கூல் புள்ளைங்க பாவம், அந்த முரட்டுப்பாதையில கால் நோக நடந்தே போயிட்டு இருக்குதுங்க. பிரசவம், நெஞ்சு வலின்னு எந்த அவசரத்துக்கும் கார் கொண்டுபோக முடியல. இதை சரிபண்ணச் சொல்லி மக்கள் என்னைப் போட்டுத் துளைச்சு எடுக்கிறதாலே பலதடவை அமைச்சர் ராமச்சந்திரன்கிட்ட முறையிட்டேன். எந்த பிரயோசனமும் இல்ல. இதனால, போன மாசம் 9-ம் தேதி மதியம் ஊட்டியில இருக்கிற கலைஞர் அறிவாலயத்துல அமைச்சரை நேரில் சந்திச்சுப் பேசினேன். 'எங்க பிரச் னையை பலதடவை உங்ககிட்ட சொல்லிட்டேன். உங்க சொந்த ஏரியாவுல இப்படி இருந்தா </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>இத்தனை மாசம் கண்டுக்காம இருப்பீங்களா?'ன்னு கேட்டேன். உடனே கடுமையா டென்ஷனானவர், 'எதையும் சொல்ல முடியாது. வெளியிலே போடா நாயே...'ன்னு என் சாதி பெயரைச் சொல்லி கேவலமா திட்டினார். சட்டுன்னு என் இடது கன்னத்துலயும் அறைஞ்சு கீழே தள்ளிட்டார். அந்த நேரத்துல அங்கே இருந்தவங்க அத்தனை பேரும் இதைப் பார்த்தாங்க. அமைச்சர் பக்கத்துல இருந்தவங்க என்னை வெளியில தள்ளிட்டு வந்துட்டதால, என்னால அவர்கிட்ட நியாயம் கேட்க முடியல. அதனால, என் பிரச்னையை விளக்கி, 'கலைஞரின் நல்ல ஆட்சியில் இப்படி ஓர் அமைச்சரா?'ன்னு தலைப்புல பிட் நோட்டீஸ் அடிச்சு வெளியிட்டேன். போஸ்டர் அடிச்சேன். ஆனா, அமைச்சர் அந்த நோட்டீஸ்களை கிழித்தெறிய உத்தரவு போட்டுட்டாரு. இந்த மாவட்டத்துல எனக்கு நீதி கிடைக்காதுன்னு சொல்லித்தான் தளபதி பிறந்த நாளன்னிக்கு அவரை சென்னையில நேர்ல சந்திச்சு, மினிஸ்டர் மேலே புகார் மனு கொடுத்திருக்கேன். தாழ்த்தப்பட்டவனான எனக்கு ஏற்பட்ட அவமானத்தை தலைவரும், தளபதியும் துடைப்பாங்கன்னு முழுசா நம்புறேன்...'' என்றார் நம்பிக் கையாக.</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>'மனோகரன் விவகாரத்தை எக்கச்சக்கமாகத் தூண்டி விடுவதே முபாரக் கோஷ்டிதான்' என்று சொல்லும் லோக்கல் தி.மு.க-வினர் சிலர் நம்மிடம், ''ராமச்சந்திரனை அமைச்சர் பொறுப்புல இருந்து தூக்கி வீசுறதுக்கு முபாரக் டீம் பகீரதப் பிரயத்தனம் பண்ணிக்கிட்டிருக்கு. ஏற்கெனவே, கோத்தகிரியில படுகர் இனத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை வெச்சு அமைச்சரை கவிழ்க்கப் பார்த்தாங்க. ஆனா, தளபதி அந்த விவகாரம் குறித்து முழுசா </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>விசாரிச்சு, அமைச்சர் மேலே எந்த தப்பும் இல்லைனு புரிஞ்சுக்கிட்டாரு. இப்போ மனோகரன் விவகாரத்தை முபாரக் ஆட்கள் கையில எடுத்திருக்காங்க. நோட்டீஸ் அடிக்கவும், தளபதியை சந்திச்சு புகார் கொடுக்கவும் மனோகரனை தூண்டிவிடுறதே இந்த கோஷ்டிதான். ஆக மொத்தத்துல நீலகிரியில தி.மு.க. நிலைமை அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்கு...'' என்றார்கள் அவர்கள். </p> <p>முபாரக்கிடம் பேசிய போது, ''யாரையும் கவிழ்த்து இந்தக் கட்சியில வளர்ந்தவன் நான் இல்லை. எம்.ஜி.ஆர். காலத்துலேயே கஷ்டப்பட்டு இங்கே நான் கட்சி வளர்த்தது தலைவருக்கும், தளபதிக்கும் தெரியும். அமைச்சர் ராமச்சந்திரன் தன்னை அடிச்சுட்டதா அந்தக் கிளைச்செயலாளர் மனோகரன், தலைமைக்கு கொடுத்த புகாரின் நகல் எனக்கும் வந்துச்சு. அவரை நான் பொறுமை காக்கச் சொல்லியிருக்கேன். தலைமைக் கழகம்தான் இந்த விஷயத்துல விசாரணை நடத்தி முடிவெடுக்கணும். ராமச்சந்திரன் ஒருவேளை மனோகரனை அடிச்சிருந்தார்னா... அப்படியரு கோபம் வரும்வகையில் அடிபட்டவர் என்ன செய்தார் என்பதும் விசாரணையில் தெரியவரும். இந்த சம்பவம் நடந்ததா சொல்லும் வேளையில நான் அங்கே இல்லை. எங்க கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரான பாண்டியராஜன் அங்கே இருந்திருக்கார். அவர்தான் அதைப் பார்த்ததாகவும் சொன்னார். இப்படியரு சம்பவம் நடந்தது உண்மை என்றால்... அது ரொம்ப வருத்தத்துக்கு உரிய விஷயம்!'' என்றார். </p> <p>இளித்துறை ராமச்சந்திரனிடம் பேசிய போது, ''தலைவர் கலைஞர் காட்டிய பாதை யில் பயணிக்கிறோம். இங்கே கட்சியில் எந்த கோஷ்டியும் இல்லை. நிலச்சரிவுக்குப் பிறகு சோறு தண்ணியை மறந்து காடு மேடா நான் அலைஞ்சு புனரமைப்புப் பணியை போர்க்கால அடிப்படையில நடத்தினது எல்லாருக்கும் தெரியும். மனோகரன் ஏரியாவை மட்டும் எதுக்கு நான் புறக்கணிக்கப் போறேன்? அவரை அடிக்கவும் இல்ல, சாதிப்பெயர் சொல்லி திட்டவும் இல்ல. ஏதோ எண்ணத்துல இப்படியரு பிரச்னையை வளர்த்து வர்றாங்க. என் நியாயத்தை எங்க தலைமை புரிந்து கொள்ளும்!'' என்றார் அவர் பொறுமையாக! </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- எஸ்.ஷக்தி<br /> படங்கள் தி.விஜய்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> ramachandran manokaran mubarak </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>