<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"><tbody><tr><td class="blue_color"><div align="center"></div></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">கூட்டணியும் அன்புமணியும்!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>க</strong>ழுகார் வரும்போதே, ''எனக்குத் தெரிந்த வட்டாரத்தில் சிலர் கருத்தை அப்படியே சொல்கிறேன்... கேட்க முடியாத விஷயங்களை கேட்கத் தருவதும், </p><table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>பார்க்க முடியாததை பார்க்கக் கொடுப்பதும் ஜூ.வி-யின் ஸ்பெஷலாச்சே! நித்தியானந்தா விவகாரத்தில் ஏன் ஜூ.வி. கடந்த இதழில் அடக்கி வாசித்தார்கள்?' என்பதுதான் அந்தக் கருத்து!'' என்றார். </p><p>நாம் சிரித்தபடியே, ''பார்க்கவேண்டிய சமாசாரமா அது? நாட்டில் எத்தனை முகச்சுளிப்பு தெரியுமா? இதோ, அருவருப்பு அலை ஓய்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதிரடித் தகவல்களை 'கவர் ஸ்டோரி'யாகக் கொடுக்கிறோம். எடுத்துப் படியும்!'' என்றோம்.</p> <p>''வெரிகுட்!'' என்றபடி ஆசிரம அதிரடிகளை வேகமாகப் படித்து முடித்த கழுகார்,</p> <p>''பெண்ணாசை நியூஸ் இருக்கட்டும். நான் பென்னாகர செய்தி சொல்கிறேன். அங்குள்ள அதியமான் அரண்மனை ஹோட்டலில்தான் தி.மு.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கி இருக்கிறார்கள். அன்றாடம் பிரசார களத்தில் அனல் பறக்க மோதிக் கொள்பவர்கள் இரவு திரும்பும்போது, ஹோட்டலுக்குள் எதிர்பட்டால் சகஜமாக நலம் விசாரித்துக் கொள்கிறார்களாம்...''</p> <p>''வறண்டு போன அரசியலில் ஓர் ஆறுதல் காட்சி!'' என்றோம்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>''திருச்சியில் நடந்த கலைஞர் வீட்டு வசதித் திட்ட தொடக்க விழாவில் பா.ம.க-வின் சார்பில் ஜி.கே.மணி கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து, பென்னாகரம் பிரசாரத்தில் இருந்தவரை அனுப்பி வைத்தது அன்புமணிதான். இதுவே, 'மீண்டும் கூட்டணியா?' என்று கொக்கி போட வைத்தது. ஆனால், பா.ம.க-வின் நாடியைப் பிடித்துப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. தி.மு.க-வுக்கு எதிராக ஆவேசம் அதிகமாகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள்.''</p> <p>''அதெப்படி?''</p> <p>''சமீபத்தில் நடந்த சென்னை மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவுக்கும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையிலோ... தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையிலோ அழைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்ததாம். அழைக்கவில்லை! ஆனால் விழுப்புரம் விழாவுக்கு பா.ம.க-வின் மற்ற எம்.எல்.ஏ-க்கள் பெயரெல்லாம் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. அங்கும் அன்புமணியை அழைக்காதது பா.ம.க-வினருக்கு வருத்தம்தான். சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டட தொடக்க விழாவுக்கு அன்புமணியை அழைத்திருக்க வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கருத்தாம். அக்கல்லூரியில் படித்துவந்து, மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்த பெருமை கொண்டவர் அன்புமணி! அவர் அமைச்சராக இருந்தபோது இந்தக் கல்லூரிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியதையும் சொல்கிறார்கள்.''</p> <p>''ஓ!''</p> <p>''இன்னும் கேளும், 108 ஆம்புலன்ஸ் சேவையை இங்கே தி.மு.க. அரசு ஜம்மென்று நடத்தி வந்தாலும், அதை இந்திய அளவில் அறிமுகப்படுத்தியது அன்புமணி அமைச்சராக இருந்தபோதுதானாம். இதற்காக தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் 'நாடு பூராவும் பயன்படுகிற மாதிரி ஒரே தொலைபேசி எண் வேண்டும்' என்று கேட்டு வாங்கியதும் அவர்தானாம்! இதையெல்லாம் கருணாநிதி நினைவில் வைத்து தன்னை விழாவுக்கு அழைப்பார் என்று எதிர்பார்த்த அன்புமணிக்கு ஏமாற்றம்! இதெல்லாம் டாக்டரின் உள்ளத்தையும் குத்திவிட்டதால்தான், 'தி.மு.க. எதிர்ப்பு பலமாகவே இருக்கும்' என்கிறார்கள் பா.ம.க. சர்க்கிளில்!''</p> <p>''பென்னாகரத்தில் அ.தி.மு.க. என்ன செய்கிறது?''</p> <p>''பூத்துக்கு ஒரு எம்.எல்.ஏ. என பொறுப்பாக நியமித்திருக்கும் அ.தி.மு.க. தலைமை, ஐந்து லட்ச ரூபாய் செலவையும் அவர்கள் செய்யவேண்டுமென கூறியுள்ளதாம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும், 'நாங்க செலவு பண்றோம். கூடவே, தலைமையும் பல்க் அமவுன்ட் இறக்கினால்தான் சமாளிக்க முடியும்' என தோட்டத்துக்கு துணிச்சலாக தகவல் சொன்னாராம். 'அதற்கெல் </p> <p>லாம் வாய்ப்பே இல்லை' என வந்ததாம் பதில்!''</p> <p> இஞ்சி டீயை எடுத்து நீட்டினோம். </p> <p>''மதுரையில் பிரபல நிறுவனமான லக்கி டிரா வல்ஸை திடீரென ரவுண்ட் கட்டி, அங்கிருந்த பட்டாக் கத்திகளையும் 13 லட்ச ரூபாய் பணத்தையும் பறி முதல் செய்திருக்கிறது போலீஸ். கூடவே அந்த நிறுவனத்தின் உரிமையாளரான முகமது அலி ஜின்னாவையும் கைது செய்திருக்கிறது. லக்கி டிராவல்ஸில் வெடி குண்டுகளும் துப்பாக்கி மற்றும் தோட்டாக் களும் பதுக்கப்பட்டிருப்பதாக உதவி கமிஷனர் வெள்ளைதுரைக்கு ஒரு கடிதம் வந்ததாம். அதன் பின்னணியில்தான் இந்த நடவடிக்கையாம். இன்னும் சிலரோ, மதுரையில் இருக்கும் பல டிராவல்ஸ்களில் ஹவாலா பணம் புழங்குவதாக போலீஸுக்கு தகவல் போயிருக்கிறது. அடுத்தடுத்து தேடல் தொடரும் என்கிறார்கள்!'' </p> <p>அலகைத் தட்டி அழகாக யோசித்த கழுகார், அடுத்து வந்தது விழுப்புரம் விழாவுக்கு!</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>''அடுத்தது எல்லாமே ஸ்டாலின்தான் என்பதை அறிவிக்கும் களமாக விழுப்புரம் விழாவும் அமைந்து விட்டது. 'கலைஞர் அறிவாலயம்' மற்றும் அரசு மருத்துவக் கல்லு£ரியை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய கருணாநிதி, 'இங்கே பேசியவர்கள் எல்லாம் எனக்கு 86 வயதாவதை சுட்டிக் காட்டினார்கள். அதைக் கேட்பதால் எனக்கு சோர்வு ஏற்படாதா? எனது மனைவி இதை கேள்விப்பட்டால் எவ்வளவு வேதனையடைவார்? 86 வயதிலும் நான் உழைக்கிறேன்... அது இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும்' என ஜாலியும் சீரியஸுமாகக் கலந்து சொல்லிவிட்டு ஸ்டாலின் பக்கம் பார்த்தார். கூடவே 'ஸ்டாலினை முன்னிறுத்தித்தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், கான்கிரீட் வீடுகள் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. நான் கலந்து கொள்கிற கூட்டங்களைப் போல தம்பி ஸ்டாலினுக்கும் கூட்டம் கூடுகிறது. அந்தளவுக்கு மக்களுடைய ஆதரவு, செல்வாக்கு...' என்று புகழாரம் சூட்ட... அங்கே எழுந்த ஆரவாரம் பல அர்த்தங்கள் சொன்னது!'' </p> <p>''ம்...''</p> <p>''விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் பொன்முடி, கருணாநிதிக்கு தங்கத் தகடு ஒன்றைப் பரிசளிக்க... அதுவரை புன்னகையோடு இருந்த கருணாநிதி 'எதற்கு இதெல்லாம்' என்பதுபோல் சட்டென இறுக்கமானார். 'இந்த தங்கத் தகட்டில் பெரியார், அண்ணா உருவம் பொறிக்கப்பட்டிருப்பதாலேயே இதனை ஏற்றுக் கொள்கிறேன்' என்பதை, 'தங்கத்தைக் கொடுத்து என்னைக் குளிர வைக்க யாரும் முயல வேண்டாம்' என்கிற பொருள்படும்படியாக இறுக்கமாகச் சொன்னார். அதோடு பொன்முடி கொடுத்த அந்த தங்கப் பரிசை தான் வைத்துக் கொள்ளாமல், வழக்கம்போல கட்சியின் கருவூலத்துக்கு வழங்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். இதேபோல் ஏற்கெனவே தென் மாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர் 'தங்க' தகராறில் சிக்கி முதல்வரிடம் வறுபட்டதும் நினைவுக்கு வருகிறது!'' என்றபடியே இஞ்சி டீயின் கடைசி மிடறை விழுங்கிய கழுகார்...</p> <p>''தி.மு.க-வில் படுபவரோடு வளைய வந்த மூத்த புள்ளிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள்கூட அவரை வந்து பார்ப்பதில்லையாம். 'அவரே மெதுவா மறந்துக்கிட்டிருக்காரு. இப்ப அவர் எதிரில் போய் நின்னா, கொடுத்து வச்சது ஞாபகம் வந்து கரெக்டா திருப்பிக் கேட்பாரு. அவர் கண்ணுல படாமல் இருந்தா கணிசமா லாபம்' என்பதுதான் அந்த நெருக்கமானவர்கள் தலைகாட்டாமல் இருக்கும் மர்மமாம்!.'' என்றவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்து முடித்தார்.</p> <p>''தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால்தான் மரணம் சம்பவித்தது என்று </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>உறுதியாகச் சொல்லி கோப்பை மூடியிருக்கிறது மாநகர போலீஸ். உடலில் காணப்பட்ட காயங்கள் பற்றி நிருபர்கள் விளக்கம்கேட்டபோது, 'பல அடி உயரத்திலிருந்து இருபது அடி ஆழமுள்ள தண்ணீருக்குள் குதிக்கும் போது ஆங்காங்கே காயங்கள் படத்தான் செய்யும்' என்று விளக்கம் சொல்லியிருக்கிறது போலீஸ். தோழர் மரணம் இனி மெள்ள மறக்கப்படும்'' என்றபடியே வானில் எழும்பிய கழுகார்,</p> <p>''நித்தியானந்தா கலாட்டா ஊரை உலுக்கும் அதேசமயம், புகழ்பெற்ற வேறொரு மடத்தைச் சேர்ந்த சாது ஒருவரும் வீடியோ வளையத்தில் பதிவாகியிருக்கிறாராம். அதை தன் வசம் ஒரு பத்திரிகையாளர் வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ரகசிய போலீஸ், நிருபரைத் தேடியது. உடல்நலமின்றி அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க... ஆஸ்பத்திரிக்குள்ளேயே புகுந்து அவருடைய லேப்-டாப்பையும் செல்போனையும் சோ தனைக்காக கொண்டு போயிருக்கிறார்களாம்!''</p> <p>''அதற்குப் பிரதி வெளியில் உலாத்தாமலா இருக்கும்?'' என்று நாம் கேட்க...</p> <p>''ஏன்... அடுத்து ஒருமுறை மக்கள் கூச்சப்பட்டு கண்ணைப் பொத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடியே விர்ர்ரிட்டார் கழுகார். </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> anbumani w.r.varadharajan vizhupuram meeting karunanithi </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"><tbody><tr><td class="blue_color"><div align="center"></div></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">கூட்டணியும் அன்புமணியும்!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>க</strong>ழுகார் வரும்போதே, ''எனக்குத் தெரிந்த வட்டாரத்தில் சிலர் கருத்தை அப்படியே சொல்கிறேன்... கேட்க முடியாத விஷயங்களை கேட்கத் தருவதும், </p><table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>பார்க்க முடியாததை பார்க்கக் கொடுப்பதும் ஜூ.வி-யின் ஸ்பெஷலாச்சே! நித்தியானந்தா விவகாரத்தில் ஏன் ஜூ.வி. கடந்த இதழில் அடக்கி வாசித்தார்கள்?' என்பதுதான் அந்தக் கருத்து!'' என்றார். </p><p>நாம் சிரித்தபடியே, ''பார்க்கவேண்டிய சமாசாரமா அது? நாட்டில் எத்தனை முகச்சுளிப்பு தெரியுமா? இதோ, அருவருப்பு அலை ஓய்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதிரடித் தகவல்களை 'கவர் ஸ்டோரி'யாகக் கொடுக்கிறோம். எடுத்துப் படியும்!'' என்றோம்.</p> <p>''வெரிகுட்!'' என்றபடி ஆசிரம அதிரடிகளை வேகமாகப் படித்து முடித்த கழுகார்,</p> <p>''பெண்ணாசை நியூஸ் இருக்கட்டும். நான் பென்னாகர செய்தி சொல்கிறேன். அங்குள்ள அதியமான் அரண்மனை ஹோட்டலில்தான் தி.மு.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கி இருக்கிறார்கள். அன்றாடம் பிரசார களத்தில் அனல் பறக்க மோதிக் கொள்பவர்கள் இரவு திரும்பும்போது, ஹோட்டலுக்குள் எதிர்பட்டால் சகஜமாக நலம் விசாரித்துக் கொள்கிறார்களாம்...''</p> <p>''வறண்டு போன அரசியலில் ஓர் ஆறுதல் காட்சி!'' என்றோம்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>''திருச்சியில் நடந்த கலைஞர் வீட்டு வசதித் திட்ட தொடக்க விழாவில் பா.ம.க-வின் சார்பில் ஜி.கே.மணி கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து, பென்னாகரம் பிரசாரத்தில் இருந்தவரை அனுப்பி வைத்தது அன்புமணிதான். இதுவே, 'மீண்டும் கூட்டணியா?' என்று கொக்கி போட வைத்தது. ஆனால், பா.ம.க-வின் நாடியைப் பிடித்துப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. தி.மு.க-வுக்கு எதிராக ஆவேசம் அதிகமாகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள்.''</p> <p>''அதெப்படி?''</p> <p>''சமீபத்தில் நடந்த சென்னை மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவுக்கும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையிலோ... தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையிலோ அழைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்ததாம். அழைக்கவில்லை! ஆனால் விழுப்புரம் விழாவுக்கு பா.ம.க-வின் மற்ற எம்.எல்.ஏ-க்கள் பெயரெல்லாம் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. அங்கும் அன்புமணியை அழைக்காதது பா.ம.க-வினருக்கு வருத்தம்தான். சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டட தொடக்க விழாவுக்கு அன்புமணியை அழைத்திருக்க வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கருத்தாம். அக்கல்லூரியில் படித்துவந்து, மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்த பெருமை கொண்டவர் அன்புமணி! அவர் அமைச்சராக இருந்தபோது இந்தக் கல்லூரிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியதையும் சொல்கிறார்கள்.''</p> <p>''ஓ!''</p> <p>''இன்னும் கேளும், 108 ஆம்புலன்ஸ் சேவையை இங்கே தி.மு.க. அரசு ஜம்மென்று நடத்தி வந்தாலும், அதை இந்திய அளவில் அறிமுகப்படுத்தியது அன்புமணி அமைச்சராக இருந்தபோதுதானாம். இதற்காக தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் 'நாடு பூராவும் பயன்படுகிற மாதிரி ஒரே தொலைபேசி எண் வேண்டும்' என்று கேட்டு வாங்கியதும் அவர்தானாம்! இதையெல்லாம் கருணாநிதி நினைவில் வைத்து தன்னை விழாவுக்கு அழைப்பார் என்று எதிர்பார்த்த அன்புமணிக்கு ஏமாற்றம்! இதெல்லாம் டாக்டரின் உள்ளத்தையும் குத்திவிட்டதால்தான், 'தி.மு.க. எதிர்ப்பு பலமாகவே இருக்கும்' என்கிறார்கள் பா.ம.க. சர்க்கிளில்!''</p> <p>''பென்னாகரத்தில் அ.தி.மு.க. என்ன செய்கிறது?''</p> <p>''பூத்துக்கு ஒரு எம்.எல்.ஏ. என பொறுப்பாக நியமித்திருக்கும் அ.தி.மு.க. தலைமை, ஐந்து லட்ச ரூபாய் செலவையும் அவர்கள் செய்யவேண்டுமென கூறியுள்ளதாம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும், 'நாங்க செலவு பண்றோம். கூடவே, தலைமையும் பல்க் அமவுன்ட் இறக்கினால்தான் சமாளிக்க முடியும்' என தோட்டத்துக்கு துணிச்சலாக தகவல் சொன்னாராம். 'அதற்கெல் </p> <p>லாம் வாய்ப்பே இல்லை' என வந்ததாம் பதில்!''</p> <p> இஞ்சி டீயை எடுத்து நீட்டினோம். </p> <p>''மதுரையில் பிரபல நிறுவனமான லக்கி டிரா வல்ஸை திடீரென ரவுண்ட் கட்டி, அங்கிருந்த பட்டாக் கத்திகளையும் 13 லட்ச ரூபாய் பணத்தையும் பறி முதல் செய்திருக்கிறது போலீஸ். கூடவே அந்த நிறுவனத்தின் உரிமையாளரான முகமது அலி ஜின்னாவையும் கைது செய்திருக்கிறது. லக்கி டிராவல்ஸில் வெடி குண்டுகளும் துப்பாக்கி மற்றும் தோட்டாக் களும் பதுக்கப்பட்டிருப்பதாக உதவி கமிஷனர் வெள்ளைதுரைக்கு ஒரு கடிதம் வந்ததாம். அதன் பின்னணியில்தான் இந்த நடவடிக்கையாம். இன்னும் சிலரோ, மதுரையில் இருக்கும் பல டிராவல்ஸ்களில் ஹவாலா பணம் புழங்குவதாக போலீஸுக்கு தகவல் போயிருக்கிறது. அடுத்தடுத்து தேடல் தொடரும் என்கிறார்கள்!'' </p> <p>அலகைத் தட்டி அழகாக யோசித்த கழுகார், அடுத்து வந்தது விழுப்புரம் விழாவுக்கு!</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>''அடுத்தது எல்லாமே ஸ்டாலின்தான் என்பதை அறிவிக்கும் களமாக விழுப்புரம் விழாவும் அமைந்து விட்டது. 'கலைஞர் அறிவாலயம்' மற்றும் அரசு மருத்துவக் கல்லு£ரியை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய கருணாநிதி, 'இங்கே பேசியவர்கள் எல்லாம் எனக்கு 86 வயதாவதை சுட்டிக் காட்டினார்கள். அதைக் கேட்பதால் எனக்கு சோர்வு ஏற்படாதா? எனது மனைவி இதை கேள்விப்பட்டால் எவ்வளவு வேதனையடைவார்? 86 வயதிலும் நான் உழைக்கிறேன்... அது இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும்' என ஜாலியும் சீரியஸுமாகக் கலந்து சொல்லிவிட்டு ஸ்டாலின் பக்கம் பார்த்தார். கூடவே 'ஸ்டாலினை முன்னிறுத்தித்தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், கான்கிரீட் வீடுகள் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. நான் கலந்து கொள்கிற கூட்டங்களைப் போல தம்பி ஸ்டாலினுக்கும் கூட்டம் கூடுகிறது. அந்தளவுக்கு மக்களுடைய ஆதரவு, செல்வாக்கு...' என்று புகழாரம் சூட்ட... அங்கே எழுந்த ஆரவாரம் பல அர்த்தங்கள் சொன்னது!'' </p> <p>''ம்...''</p> <p>''விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் பொன்முடி, கருணாநிதிக்கு தங்கத் தகடு ஒன்றைப் பரிசளிக்க... அதுவரை புன்னகையோடு இருந்த கருணாநிதி 'எதற்கு இதெல்லாம்' என்பதுபோல் சட்டென இறுக்கமானார். 'இந்த தங்கத் தகட்டில் பெரியார், அண்ணா உருவம் பொறிக்கப்பட்டிருப்பதாலேயே இதனை ஏற்றுக் கொள்கிறேன்' என்பதை, 'தங்கத்தைக் கொடுத்து என்னைக் குளிர வைக்க யாரும் முயல வேண்டாம்' என்கிற பொருள்படும்படியாக இறுக்கமாகச் சொன்னார். அதோடு பொன்முடி கொடுத்த அந்த தங்கப் பரிசை தான் வைத்துக் கொள்ளாமல், வழக்கம்போல கட்சியின் கருவூலத்துக்கு வழங்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். இதேபோல் ஏற்கெனவே தென் மாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர் 'தங்க' தகராறில் சிக்கி முதல்வரிடம் வறுபட்டதும் நினைவுக்கு வருகிறது!'' என்றபடியே இஞ்சி டீயின் கடைசி மிடறை விழுங்கிய கழுகார்...</p> <p>''தி.மு.க-வில் படுபவரோடு வளைய வந்த மூத்த புள்ளிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள்கூட அவரை வந்து பார்ப்பதில்லையாம். 'அவரே மெதுவா மறந்துக்கிட்டிருக்காரு. இப்ப அவர் எதிரில் போய் நின்னா, கொடுத்து வச்சது ஞாபகம் வந்து கரெக்டா திருப்பிக் கேட்பாரு. அவர் கண்ணுல படாமல் இருந்தா கணிசமா லாபம்' என்பதுதான் அந்த நெருக்கமானவர்கள் தலைகாட்டாமல் இருக்கும் மர்மமாம்!.'' என்றவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்து முடித்தார்.</p> <p>''தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால்தான் மரணம் சம்பவித்தது என்று </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>உறுதியாகச் சொல்லி கோப்பை மூடியிருக்கிறது மாநகர போலீஸ். உடலில் காணப்பட்ட காயங்கள் பற்றி நிருபர்கள் விளக்கம்கேட்டபோது, 'பல அடி உயரத்திலிருந்து இருபது அடி ஆழமுள்ள தண்ணீருக்குள் குதிக்கும் போது ஆங்காங்கே காயங்கள் படத்தான் செய்யும்' என்று விளக்கம் சொல்லியிருக்கிறது போலீஸ். தோழர் மரணம் இனி மெள்ள மறக்கப்படும்'' என்றபடியே வானில் எழும்பிய கழுகார்,</p> <p>''நித்தியானந்தா கலாட்டா ஊரை உலுக்கும் அதேசமயம், புகழ்பெற்ற வேறொரு மடத்தைச் சேர்ந்த சாது ஒருவரும் வீடியோ வளையத்தில் பதிவாகியிருக்கிறாராம். அதை தன் வசம் ஒரு பத்திரிகையாளர் வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ரகசிய போலீஸ், நிருபரைத் தேடியது. உடல்நலமின்றி அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க... ஆஸ்பத்திரிக்குள்ளேயே புகுந்து அவருடைய லேப்-டாப்பையும் செல்போனையும் சோ தனைக்காக கொண்டு போயிருக்கிறார்களாம்!''</p> <p>''அதற்குப் பிரதி வெளியில் உலாத்தாமலா இருக்கும்?'' என்று நாம் கேட்க...</p> <p>''ஏன்... அடுத்து ஒருமுறை மக்கள் கூச்சப்பட்டு கண்ணைப் பொத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடியே விர்ர்ரிட்டார் கழுகார். </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> anbumani w.r.varadharajan vizhupuram meeting karunanithi </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>