டெல்லியில் 53 கோயில்களை இடிக்க மதக்குழுவுக்கு (Religious Committee) மத்திய அரசு அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங், "டெல்லியில் கோயில்களை இடிக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. நாடு முழுவதும் மதத்தின் பெயரால் நாடகம் ஆடுகிறார்கள், வெறுப்பைப் பரப்புகிறார்கள். ஆனால் இப்போது மோடி அரசு தலைநகர் டெல்லியில் 53 கோயில்களை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக 53 கோயில்களை இடிக்க அனுமதி கோரி டெல்லி அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. இந்தப் பட்டியலில் பழைமையான ஸ்ரீராமர் கோயில், கிருஷ்ணர் கோயில், துர்கா கோயில், மகாதேவ் கோயில், சாய்பாபா கோயில் மற்றும் குருத்வாரா ஆகியவை அடங்கும்.
கஸ்தூரிபா நகர், ஸ்ரீனிவாஸ்புரி, முகமதுபூர், சரோஜினி நகர் ஆகிய இடங்களில் மொத்தம் 53 கோயில்களை இடிக்க அனுமதி கோரப்பட்டிருக்கிற. டெல்லி அரசுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்கிறது. அது குறித்து விரைவில் முடிவெடுப்போம்" என்று சஞ்சய் சிங் கூறியிருக்கிறார்.
