உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அபிநந்தன் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பார்ப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் சாயலிலேயே இருப்பார். இதனால் அரசியலில் களத்தில் கவனம்பெற்றவர்.

அபிநந்தன் பேசுகையில், ``லக்னோவில் பாஜக சார்பில் போட்டியிட பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நான் கடிதம் எழுதினேன், ஆனால் அவர்கள் எனது கடிதங்களுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் லக்னோவிலுள்ள சரோஜினி நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறகியுள்ளேன்.
நான் ஒரு மோடி பக்தன். 2014 வாரணாசி தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியைச் சந்தித்தேன். அன்றிலிருந்து நான் என் வாழ்க்கையை மோடிக்காக அர்ப்பணித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரதமர் மோடியும் யோகி ஆதித்யநாத்தும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள். பொதுமக்களுக்காகத் தன்னலமின்றி உழைக்கும் அவர்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நான் என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். நான் அரசியல்வாதியாகி இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
தனது பொருளாதாரப் பிரச்னைகளைச் சமாளிக்க, ரயிலில் வெள்ளரிக்காய் விற்றுப் பிழைப்பு நடத்திவருகிறார்.