<blockquote>ரஜினியின் கட்சி தொடங்கும் அறிவிப்பு, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம், சசிகலா விடுதலை பரபரப்பு... இவை குறித்தெல்லாம் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொன்னையனைச் சந்தித்துப் பேசினோம்.</blockquote>.<p>‘‘அமித் ஷாவின் வருகைக்கு முன்தினம் நடந்த அ.தி.மு.க-வின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று தகவல் வந்ததே..?’’</p>.<p>‘‘பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்துப் பேசவில்லை. அதே சமயத்தில், கூட்டணி குறித்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தன்னிச்சையாக அறிவித்தார்கள் என்பதும் தவறானது. கூட்டணி என்பது, ஒரு நாளில் பேசி எடுக்க வேண்டிய முடிவு அல்ல. தொடர் பேச்சுவார்த்தை, ஆய்வு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.’’</p>.<p>‘‘மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் தொடர்ந்து கருத்துகளைச் சொல்லிவந்தீர்கள். இந்தக் கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு அவையெல்லாம் சரியாகிவிட்டனவா... இல்லை, இன்னும் தொடர்கிறதா?’’</p>.<p>‘‘பா.ஜ.க-வின் திட்டங்களை ஆட்சி எந்திரங்கள் மூலம் நடைமுறைப்படுத்தும்போது, தமிழக மக்களின் நலனுக்கு மாறாக இருந்தால், அதைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போதும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் இது இயல்பாக இருக்கக்கூடியது.’’</p>.<p>‘‘ `அ.தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லையே..?’’</p>.<p>‘‘அ.தி.மு.க அரசைப் பாராட்டும் நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டால், கூட்டணியை ஏற்கிறார்கள் என்றுதானே பொருள். ‘கூட்டணியோடு இருப்போம்’ என்று மாநில பா.ஜ.க-வினர் பல சமயங்களில் சொல்லித்தான்வருகிறார்கள்.’’</p>.<p>‘‘கடந்த முறை தமிழகத்துக்கு அமித் ஷா வந்தபோது, ‘ஊழல் ஆட்சி’ என்று அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் மாற்றம்?’’</p>.<p>‘‘அமித் ஷாவுக்குத் தரப்பட்ட, கிடைத்த அரைகுறைத் தகவல்களைவைத்து அப்படி ஒரு காலத்தில் கூறியிருக்கலாம். ஆழ்ந்தும் துல்லியமாகவும் ஆராய்கிறபோது உண்மை அவருக்குத் தெரிகிறது. அதனால், தற்போது பாராட்டுகிறார்.’’</p>.<p>‘‘பா.ஜ.க-வினர் 60 சீட்டுகள் வரை கேட்கிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன. அப்படித் தருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?”</p>.<p>‘‘அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை. யாருக்கு எந்த அளவுக்குக் கொடுப்போம் என்று இன்னும் பேசப்படவில்லை. அவரவர்களுக்கு எந்தத் தொகுதியில், என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற கள ஆய்வின் அடிப்படையில் நாங்கள் கொடுப்போம்; கேட்பவர்களும் அப்படித்தான் கேட்பார்கள்.’’</p>.<p>‘‘வேல் யாத்திரை மூலம் பா.ஜ.க-வும், 20 சதவிகித இட ஒதுக்கீட்டு கோரிக்கை மூலம் பா.ம.க-வும் அ.தி.மு.க அரசை அச்சுறுத்துகிறார்களா?’’</p>.<p>‘‘இவையெல்லாம் அ.தி.மு.க-வை எப்படி அச்சுறுத்தும்?’’</p>.<p>`` ‘எல்.முருகனை ஒரு மாதிரியும், உதயநிதியை ஒரு மாதிரியும் பாரபட்சத்தோடு அ.தி.மு.க அரசு கையாள்கிறது’ என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’’</p>.<p>‘‘மிகவும் தவறு. ‘கொரோனா விதிமுறைகளை மீறுங்கள்; சமூக இடைவெளியை விட்டுவிடுங்கள்; முகக்கவசத்தை அணியாதீர்கள்; ஒன்றிணைவோம்... ஒன்றிணைவோம்’ என்று கட்டிப்பிடித்துக்கொண்டு நடப்பதைப்போல உதயநிதியின் நிகழ்ச்சிகள் இருந்ததை நாடே அறியும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.’’</p>.<p>‘‘சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாகவிருக்கிறாராமே..?”</p>.<p>‘‘அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.’’</p>.<p>‘‘அவர் விடுதலையாகி வந்த பின்னர், அ.தி.மு.க-வில் யாரும் சென்று சந்திக்க மாட்டார்களா?’’</p>.<p>‘‘யாரும் அவரவர் எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.’’</p>.<p>‘‘சசிகலாதான் பலருக்கும் எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்தார் என்று சொல்லப்படுகிறதே!’’</p>.<p>‘‘ஜெயலலிதா என்ற ஆலமரத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்தார்கள். மற்றவர்களை வாழவைப்பதைப்போலச் சூழலை உருவாக்கினார்கள். அ.தி.மு.க-வுக்குக் களங்கம் ஏற்படக் காரணமாகியிருக்கிறார்களே தவிர, அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அம்மா மட்டும்தான் காரணம்.’’</p>.<p>‘‘கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’</p>.<p>‘‘யார் எந்தப் புதிய கட்சியை ஆரம்பித்தாலும், இருக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும், இரட்டை இலையை நேசிக்கும் மக்கள் அதிகப்படியாகத் தமிழகத்தில் இருக்கும் காரணத்தால், அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது. மக்களுக்குச் சேவையாற்ற, தொடர்ந்து எங்கள் ஆட்சி மலரும். விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு அரசியல் நடத்தும் யாராக இருந்தாலும், முதல்வர் எடப்பாடியரின் தூய்மை நிறைந்த பொதுவாழ்வுத் தொண்டால் அவர்கள் செயலிழக்கச் செய்யப்படுவார்கள்.’’</p>.<p>‘‘ஆன்மிக அரசியல் என்று சொல்கிறாரே ரஜினிகாந்த்?’’</p>.<p>‘‘ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைத்துச் செயல்படுவது பல்வேறு நம்பிக்கைகளையுடைய மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிகரமாக இருக்காது.’’</p>
<blockquote>ரஜினியின் கட்சி தொடங்கும் அறிவிப்பு, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம், சசிகலா விடுதலை பரபரப்பு... இவை குறித்தெல்லாம் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொன்னையனைச் சந்தித்துப் பேசினோம்.</blockquote>.<p>‘‘அமித் ஷாவின் வருகைக்கு முன்தினம் நடந்த அ.தி.மு.க-வின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று தகவல் வந்ததே..?’’</p>.<p>‘‘பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்துப் பேசவில்லை. அதே சமயத்தில், கூட்டணி குறித்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தன்னிச்சையாக அறிவித்தார்கள் என்பதும் தவறானது. கூட்டணி என்பது, ஒரு நாளில் பேசி எடுக்க வேண்டிய முடிவு அல்ல. தொடர் பேச்சுவார்த்தை, ஆய்வு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.’’</p>.<p>‘‘மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் தொடர்ந்து கருத்துகளைச் சொல்லிவந்தீர்கள். இந்தக் கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு அவையெல்லாம் சரியாகிவிட்டனவா... இல்லை, இன்னும் தொடர்கிறதா?’’</p>.<p>‘‘பா.ஜ.க-வின் திட்டங்களை ஆட்சி எந்திரங்கள் மூலம் நடைமுறைப்படுத்தும்போது, தமிழக மக்களின் நலனுக்கு மாறாக இருந்தால், அதைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போதும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் இது இயல்பாக இருக்கக்கூடியது.’’</p>.<p>‘‘ `அ.தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லையே..?’’</p>.<p>‘‘அ.தி.மு.க அரசைப் பாராட்டும் நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டால், கூட்டணியை ஏற்கிறார்கள் என்றுதானே பொருள். ‘கூட்டணியோடு இருப்போம்’ என்று மாநில பா.ஜ.க-வினர் பல சமயங்களில் சொல்லித்தான்வருகிறார்கள்.’’</p>.<p>‘‘கடந்த முறை தமிழகத்துக்கு அமித் ஷா வந்தபோது, ‘ஊழல் ஆட்சி’ என்று அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் மாற்றம்?’’</p>.<p>‘‘அமித் ஷாவுக்குத் தரப்பட்ட, கிடைத்த அரைகுறைத் தகவல்களைவைத்து அப்படி ஒரு காலத்தில் கூறியிருக்கலாம். ஆழ்ந்தும் துல்லியமாகவும் ஆராய்கிறபோது உண்மை அவருக்குத் தெரிகிறது. அதனால், தற்போது பாராட்டுகிறார்.’’</p>.<p>‘‘பா.ஜ.க-வினர் 60 சீட்டுகள் வரை கேட்கிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன. அப்படித் தருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?”</p>.<p>‘‘அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை. யாருக்கு எந்த அளவுக்குக் கொடுப்போம் என்று இன்னும் பேசப்படவில்லை. அவரவர்களுக்கு எந்தத் தொகுதியில், என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற கள ஆய்வின் அடிப்படையில் நாங்கள் கொடுப்போம்; கேட்பவர்களும் அப்படித்தான் கேட்பார்கள்.’’</p>.<p>‘‘வேல் யாத்திரை மூலம் பா.ஜ.க-வும், 20 சதவிகித இட ஒதுக்கீட்டு கோரிக்கை மூலம் பா.ம.க-வும் அ.தி.மு.க அரசை அச்சுறுத்துகிறார்களா?’’</p>.<p>‘‘இவையெல்லாம் அ.தி.மு.க-வை எப்படி அச்சுறுத்தும்?’’</p>.<p>`` ‘எல்.முருகனை ஒரு மாதிரியும், உதயநிதியை ஒரு மாதிரியும் பாரபட்சத்தோடு அ.தி.மு.க அரசு கையாள்கிறது’ என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’’</p>.<p>‘‘மிகவும் தவறு. ‘கொரோனா விதிமுறைகளை மீறுங்கள்; சமூக இடைவெளியை விட்டுவிடுங்கள்; முகக்கவசத்தை அணியாதீர்கள்; ஒன்றிணைவோம்... ஒன்றிணைவோம்’ என்று கட்டிப்பிடித்துக்கொண்டு நடப்பதைப்போல உதயநிதியின் நிகழ்ச்சிகள் இருந்ததை நாடே அறியும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.’’</p>.<p>‘‘சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாகவிருக்கிறாராமே..?”</p>.<p>‘‘அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.’’</p>.<p>‘‘அவர் விடுதலையாகி வந்த பின்னர், அ.தி.மு.க-வில் யாரும் சென்று சந்திக்க மாட்டார்களா?’’</p>.<p>‘‘யாரும் அவரவர் எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.’’</p>.<p>‘‘சசிகலாதான் பலருக்கும் எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்தார் என்று சொல்லப்படுகிறதே!’’</p>.<p>‘‘ஜெயலலிதா என்ற ஆலமரத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்தார்கள். மற்றவர்களை வாழவைப்பதைப்போலச் சூழலை உருவாக்கினார்கள். அ.தி.மு.க-வுக்குக் களங்கம் ஏற்படக் காரணமாகியிருக்கிறார்களே தவிர, அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அம்மா மட்டும்தான் காரணம்.’’</p>.<p>‘‘கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’</p>.<p>‘‘யார் எந்தப் புதிய கட்சியை ஆரம்பித்தாலும், இருக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும், இரட்டை இலையை நேசிக்கும் மக்கள் அதிகப்படியாகத் தமிழகத்தில் இருக்கும் காரணத்தால், அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது. மக்களுக்குச் சேவையாற்ற, தொடர்ந்து எங்கள் ஆட்சி மலரும். விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு அரசியல் நடத்தும் யாராக இருந்தாலும், முதல்வர் எடப்பாடியரின் தூய்மை நிறைந்த பொதுவாழ்வுத் தொண்டால் அவர்கள் செயலிழக்கச் செய்யப்படுவார்கள்.’’</p>.<p>‘‘ஆன்மிக அரசியல் என்று சொல்கிறாரே ரஜினிகாந்த்?’’</p>.<p>‘‘ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைத்துச் செயல்படுவது பல்வேறு நம்பிக்கைகளையுடைய மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிகரமாக இருக்காது.’’</p>