Published:Updated:

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்!

கர்நாடக தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை ( ட்விட்டர் )

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

Published:Updated:

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

கர்நாடக தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை ( ட்விட்டர் )

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டிவருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க தேர்தல் இணை பொறுப்பாளராகச் செயல்பட்டுவருகிறார். கர்நாடகாவில், பெங்களூரு புறநகர், மைசூர், சாம்ராஜ் நகர், சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

கர்நாடகத் தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை
கர்நாடகத் தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை
ட்விட்டர்

இந்த நிலையில், நேற்று சிவமொக்கா என்.இ.எஸ் பகுதியில் தேர்தல் பிரசாரமாக, தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைவுக் கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. ஆனால், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா அதை நிறுத்தக் கூறி, எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேடையில் இருக்கும்போதே, 'வேண்டுமானால் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடுங்கள். கேசட்டில்  ஒலிபரப்ப வேண்டாம்' எனக் கூறியதாகத் தெரிகிறது. அண்ணாமலை உட்பட யாரும் முன்வராததால் கன்னட வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த விவகாரம் அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

கனிமொழி
கனிமொழி

அதைத் தொடர்ந்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தன்னுடைய கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படிக் கவலைப்படுவார். #ApologiseAnnamalai" எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பதிவில், "கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது. ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்துக்குள் கன்னடமும் இருக்கிறது, மறக்க வேண்டாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வைரமுத்து
வைரமுத்து

இது தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அடித்துக்கொண்டு புரள அது தி.மு.க மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் என்பது நியதி.

அந்த நியதியைத்தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு. ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக்காட்டினார். நமது தேசியக்கொடியை ஏற்றிய பின்னர், தேசியகீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?

கர்நாடகத் தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை
கர்நாடகத் தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை
ட்விட்டர்

`கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்’ என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிலிருந்து நீக்கி மாநிலப் பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் தி.மு.க-வினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி... கவலை வேண்டாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.