கர்நாடக மாநிலம், பெலகாவியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``ஆளுங்கட்சி, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. சட்டத்துக்கு எதிராகச் செயல்படுபவர்கள் "தேசவிரோதிகள்.’’ பாஜக நாட்டை அழிக்கிறது. படித்தவர்கள் வாக்களிக்கும்போது தவறான முடிவை எடுக்கக் கூடாது.

தற்போதைய பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் நிலையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.19 லட்சம் கோடிக்கு மேல், வரி வருவாய் மத்திய அரசுக்குச் செல்கிறது, ஆனால் வெறும் ரூ.4 லட்சம் கோடி மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு மாநிலத்துக்கு அதிக நிதி வழங்கியதாக விளம்பரம் செய்துவருகிறது’’ என்றார்.
