Published:Updated:

மத்திய அரசுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அளித்த சரத் பவார்... என்ன நடந்தது?!

உத்தவ் தாக்கரே

``மத்திய அரசு மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க நினைக்கவில்லை” என்று சரத் பவார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

மத்திய அரசுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அளித்த சரத் பவார்... என்ன நடந்தது?!

``மத்திய அரசு மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க நினைக்கவில்லை” என்று சரத் பவார் தெரிவித்திருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமீபத்தில் வெளியிட்ட சுயசரிதையில், உத்தவ் தாக்கரே நிர்வாகத் திறன் இல்லாததால்தான் சிவசேனா உடைந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு மும்பையை மத்திய அரசு மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்க முயல்கிறது என்றும் அடிக்கடி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அதற்கும் சரத் பவார் தனது சுயசரிதையில் பதிலளித்திருக்கிறார். அதில், ``மத்தியில் யாரும் மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்க விரும்பவில்லை.. எனவே, அதுபோன்ற விவாதங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அளித்த சரத் பவார்... என்ன நடந்தது?!

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே, ``மும்பையை மத்திய அரசு பிரிக்க முயல்கிறது என்ற எனது கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இதில் எங்களுக்குள் மாறுபட்ட கருத்து இருந்தாலும் எங்களது கூட்டணியின் ஒற்றுமைக்கு எந்தவித பாதிப்பும் வரப்போவதில்லை” என்று குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேயின் கருத்தை காங்கிரஸ் கட்சியும் ஆமோதித்திருக்கிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே அளித்த பேட்டியில், ``மத்திய அரசு மும்பை, மகாராஷ்டிராவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது. மும்பை நாட்டின் நிதி தலைநகரமாக இருக்கிறது.

அதோடு உலகின் மிகவும் முக்கியமான நகரமாகவும் விளங்குகிறது. அனைத்து நிதி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் மும்பையில் இருக்கின்றன. இது பா.ஜ.க தலைவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. எனவேதான் முக்கிய அலுவலங்களை குஜராத்துக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மும்பை, மகாராஷ்டிராவிலிருந்து பல திட்டங்கள் குஜராத்துக்கு சென்றிருக்கின்றன. மகாராஷ்டிராவுக்குத் தேவைப்படாத புல்லட் ரயில் திட்டம் மகாராஷ்டிராமீது திணிக்கப்படுகிறது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் அமையவிருந்த இன்டர்நேசன் பைனாசியல் சர்வீஸ் சென்டர் காந்தி நகருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதிகப்படியான வைர வர்த்தகம் குஜராத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சரத் பவார்
சரத் பவார்

மும்பையை குஜராத்துக்குக் கொண்டு செல்ல முடியாது என்பதால், மும்பையை அழிக்க பா.ஜ.க முயல்கிறது” என்று நானா பட்டோலே குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே சென்றார். சிவசேனாவும் (உத்தவ்), `மத்திய அரசின் கொள்கை குஜராத்துக்குச் சாதகமாகவும், மகாராஷ்டிராவுக்கு பாதகமாகவும் இருக்கிறது. பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காக மகாராஷ்டிரா நகரங்கள் அழிக்கப்படுகிறது’ என குற்றம்சாட்டியிருக்கிறது.