Published:Updated:

``கர்நாடகத் தேர்தல்; ஹெலிகாப்டரில் பணத்தை வாரியிறைக்கிறார் அண்ணாமலை!" - ஜோதிமணி குற்றச்சாட்டு

ஜோதிமணி

`கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். ஒரு தமிழராக அண்ணாமலை அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.' - ஜோதிமணி

Published:Updated:

``கர்நாடகத் தேர்தல்; ஹெலிகாப்டரில் பணத்தை வாரியிறைக்கிறார் அண்ணாமலை!" - ஜோதிமணி குற்றச்சாட்டு

`கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். ஒரு தமிழராக அண்ணாமலை அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.' - ஜோதிமணி

ஜோதிமணி

ராகுல் காந்தி குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்யவைத்த மத்திய அரசைக் கண்டித்து கரூர் மக்களவைத் தொகுதியில், ஒரு லட்சம் வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இதில் கலந்துகொண்டு, வீடுகள்தோறும் ஸ்டிக்கரை ஒட்டி வருகிறார். அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தலாடம்பட்டி பகுதியிலுள்ள வீடுகளில், ஜோதிமணி ‘எனது வீடு ராகுல் வீடு’ ஸ்டிக்கரை ஒட்டி பிரசாரத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, காந்தி கிராமம், வெங்கமேடு ஆகிய பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரம் நடைபெற்றது.

ஜோதிமணி
ஜோதிமணி

அதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோதிமணி, "கரூர் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. கரூர் மாநகராட்சியாக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. விரைவில் கரூர் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலமாக, குடிநீர் பிரச்னை மட்டும் இன்றி, பல்வேறு பிரச்னைகளுக்கு கரூர் மாநகராட்சியில் தீர்வு காணப்படும்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் யாவும் அப்போது தீரும். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முழுவீச்சில் பணியைத் தொடங்கியிருக்கிறோம். தற்போதைய கர்நாடக அரசாங்கம் மாநிலம் முழுவதும் 40% கமிஷன் பெரும் அரசாங்கமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் ஊழலை தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை இருக்கிறது. எனவே, 150 இடங்களைக் கைப்பற்றி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.

ஜோதிமணி
ஜோதிமணி

கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க பணத்தைக் கொட்டுகிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கர்நாடகா முழுவதும் பயணித்து, பணத்தை வாரியிறைத்து வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். ஒரு தமிழராக அண்ணாமலை அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். இது குறித்து கேள்வியெழுப்பினால், 'அந்தப் பாடலில் மெட்டு சரியில்லை' என்று காரணம் கூறுகிறார்" என்றார்.