Published:Updated:

`மாநிலங்களைப் பிளவுபடுத்த வேண்டாம்' - ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எச்சரிக்கும் கெளதமன்!

கெளதமன் ( ரா.ராம்குமார் )

இயக்குநர் கெளதமன் பேட்டி

Published:Updated:

`மாநிலங்களைப் பிளவுபடுத்த வேண்டாம்' - ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எச்சரிக்கும் கெளதமன்!

இயக்குநர் கெளதமன் பேட்டி

கெளதமன் ( ரா.ராம்குமார் )

ஒரே நாடு, ஒரே தேர்தல், ரேஷன், கல்வி, என கொண்டு வந்து மாநிலங்களை பிளவு படுத்த வேண்டாம். தமிழ் இனத்தை அடிமை படுத்தும் முயசியில் மத்திய அரசு செயல்படுவதை நிறுத்த வேண்டும் என இயக்குனர் கெளதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கெளதமன்
கெளதமன்
ரா.ராம்குமார்

இயக்குனர் கௌதமன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் மக்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என முதல்வர் பொய் கூறுகிறார். எட்டு வழிச்சாலை என்பது தேவையில்லை. இது மக்களுக்கான சாலை இல்லை. இயற்கை வளத்தை கொள்ளை அடித்து கொண்டு செல்ல வேண்டி போடப்படும் சாலை. ஹைட்ராகார்பன் திட்டத்தால் ஆபத்து உள்ளது என ஜெயலலிதா தடை விதித்தார்.

அதை மீறிதான் இந்த திட்டத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

கெளதமன்
கெளதமன்
ரா.ராம்குமார்

மோடி அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ரேஷன், கல்வி, என கொண்டு வந்து மாநிலங்களை பிளவு படுத்த வேண்டாம். தமிழ் இனத்தை அடிமை படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுவதை நிறுத்த வேண்டும்.

மதுவுக்கு எதிராக போராடிய நந்தினியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அரசு. அவரது திருமணம் தடைபட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்றம் ஒரு அறதோடு செயல்பட வேண்டும்" என்றார்