நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவருக்கும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராவது தாமதமானது. அதனால், ராகுல் காந்தியிடம் மட்டும் அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தி முடித்தனர். அதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்த சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைத் தேதியை மாற்றி ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று நாள்களில் 11 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணை தொடர்பாக வெளியான தகவலின்படி சோனியா காந்தி 100 கேள்விகளுக்கும் மேல் எதிர்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ-வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை முடிவுக்குப் பிறகே தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள்.