Published:Updated:

``பழங்குடி மாணவர்களுக்கு உதவும் நவோதயா பள்ளிகளை, தமிழக அரசு தடுப்பது முறையா?!" - அண்ணாமலை கேள்வி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

``தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழ் மொழித் தேர்வில் 36,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது." - அண்ணாமலை

Published:Updated:

``பழங்குடி மாணவர்களுக்கு உதவும் நவோதயா பள்ளிகளை, தமிழக அரசு தடுப்பது முறையா?!" - அண்ணாமலை கேள்வி

``தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழ் மொழித் தேர்வில் 36,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது." - அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

`சாதித்த ஏகலைவா பள்ளியின் தமிழகப் பழங்குடி மாணவர்கள்... நவோதயா பள்ளிகளின் முக்கியத்துவத்தை என்று உணரும் தமிழக அரசு?' எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பழங்குடியினருக்கான மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளித் திட்டத்தின்கீழ் பயின்ற 15 மாணவர்கள், மிகக் கடினமான தேர்வான, தொழில்நுட்பக் கல்விக்கான ஆரம்பநிலை கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

மோடி - அண்ணாமலை
மோடி - அண்ணாமலை
ட்விட்டர்

போக்குவரத்து வசதிகள் சரிவர இல்லாத தொலைதூர மலைக் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, இது மிகுந்த ஊக்கமளிக்கும் செய்தி. பல ஆண்டுக்காலமாக, போதிய வசதிகள் கிடைக்காமல் உயர்கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். பிரதமர் மோடி சார்பில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் இன்னும் பலர் பயனடைய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க-வின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழ் மொழித் தேர்வில் 36,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டவர்கள் என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. கல்வித் திட்டத்தின் தரமும், கற்பித்தல் தரமும் குறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழில் இத்தனை மாணவர்கள் தோல்வியடைவதால், எதிர்காலத்தில் மாணவர்கள், தமிழ்ப் பாடத்தைத் தேர்வு செய்யாமல் புறக்கணிக்கும் நிலை ஏற்படும். தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் அமல்படுத்தாமல், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது இந்த திறனற்ற தி.மு.க அரசு. தமிழகக் கல்வித்துறை பாடத் திட்டங்களின் தரத்தையும், கற்பித்தல் தரத்தையும் உயர்த்தவேண்டிய அதேநேரத்தில், நாடெங்குமுள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் தமிழகத்தில் அனுமதிக்கவேண்டிய அவசியமும் தெளிவாகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புற மாணவர்களுக்கு 75% இடங்கள், மாணவிகளுக்கு 33% இடங்கள் என சமூகநீதியை நடைமுறைப்படுத்தியிருக்கும் நவோதயா பள்ளிகள், ஒன்பதாம் வகுப்பு வரை எந்தக் கல்விக் கட்டணமும் இன்றிச் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக, நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

அண்ணாமலை
அண்ணாமலை

எனவே, மாநில அரசின் கல்வித்தரத்தையும் கற்பித்தல் தரத்தையும் உயர்த்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதமான நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.