<p><em>வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.</em><br><br>`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றால், கூட்டணி அமைவதெல்லாம்..?</p>.<p>பேரம் அமையும் விதம்! </p>.<p><em>பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.</em><br><br>`பழைய 41 தொகுதிகள் கிடைத்தால் போதும்...’ என்று பெருந்தன்மை காட்டுகிறதே தே.மு.தி.க?</p>.<p>ஓ... இதுக்கு உங்க ஊர்ல பெருந்தன்மைன்னா பேருவெச்சிருக்காங்க? </p>.<p><em>த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.</em><br><br>மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் சந்திப்பு... என்ன வித்தியாசம்?</p>.<p>கூட்டணி பேரம் படிந்து ஓகே ஆகிவிட்டதை வெளியில் சொல்ல முடிந்தால், அது அரசியல் சந்திப்பு. இழுபறி என்றால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு!</p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</em><br><br>அரசியல்வாதிகளிடம் நெருங்கிப் பழகலாமா?<br></p>.<p>அரசியல்வாதிகள் மட்டுமல்ல சொக்கலிங்க ஆதித்தன்... யாரோடு பழகவும் வள்ளுவர் சொன்ன <br><br><em>தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்<br>தீரா இடும்பை தரும் </em>என்ற குறளைப் பின்பற்றலாம்.</p>.<p><em>பெ.வெங்கடேசன், ஓசூர்.</em><br><br>அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல் ,கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது எதனால்?</p>.<p>ஒரே கருத்துள்ள கட்சிகள், மக்கள்நலனுக்காக ஒன்றிணைந்து களம் காணும்போது எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும் என்ற கோட்பாடுதான். ஆனால், இன்றைக்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்... </p>.<p><em>@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.</em><br><br>கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?</p>.<p>நம் முன்னோர்கள் காலத்தில் கிரெடிட் கார்டுகளோ, கடன் கொடுக்க இத்தனை நிறுவனங்களோ இல்லை. அவர்களிடம் தொலைநோக்கோடு திட்டமிடலும் இருந்தது. அவர்களிடமிருந்து அந்தப் பொருளாதார நுண்ணறிவுகளைக் கற்றுக்கொண்டு, பின்பற்றத் தவறிவிட்டோம். முறையாகத் திட்டமிட்டாலே கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடலாம். </p>.<p><em>பிரகாஷ், நெல்லை.<br></em><br>கமல்ஹாசனின் திடீர் தீவிரப் பிரசாரங்கள் குறித்து..?</p>.<p>`திடீர்’ என்று சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில் எல்லா கட்சிகளும் செய்வதுதான். கமல் கொஞ்சம் முந்திக்கொண்டுவிட்டார்! </p>.<p><em>@ஆதித்தன், திருநெல்வேலி. </em><br><br>ஆட்டோ எப்படிச் செல்லும்?</p>.<p>இப்பதான் எஃப்.சி-க்கு நிக்குது. பர்மிட் கிடைச்சதும், டிரைவர் ஓட்டுகிற வழியில் செல்லும்.</p>.<p><em>@ந.சண்முகம், திருவண்ணாமலை.</em><br><br>ஒரே மாதத்தில் இரண்டு முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது பற்றி?</p>.<p>‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்...’ என்றார் திருவள்ளுவர். ஒரு பக்கம் பெட்ரோல் விலை, இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு விலை என்று நம்மையும் அறியாமல் எளிய மக்கள்மீது சுமையை ஏற்றிக்கொண்டே போகிறது அரசு. மக்கள் கணக்கு வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.</p>.<p><em>எஸ்.சிவகுமாரன், சென்னை.</em><br><br>‘யாமறிந்த மொழிகளிலே’ என்று தமிழை விதந்தோதும் பாரதிக்கு வேறு என்ன மொழிகள் தெரியும்?</p>.<p>தமிழ் அல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய ஆறு மொழிகள் தெரியும். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால், இன்னும் சில மொழிகளைக் கற்றிருப்பார் பாரதி. உலகளாவிய அறிவையும் கலை ஞானத்தையும் அடைவதில் அப்படி ஓர் ஆவல் அவருக்கு.<br><br><em>‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்<br>செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ </em><br><br>என்ற அவரது வரிகளில் அதை உணரலாம்.</p>.<p><em>@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.</em><br><br>உலகை ஆள வேண்டும் என்று நினைத்த ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் முடிவு சோகமாக இருந்திருக்கிறதே..!</p>.<p>அதிகாரமோ, சர்வாதிகாரமோ என்றும் நிலைத்ததில்லை என்பதற்கான சான்றுகள்தான் அவை. </p>.<p><em>மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.</em><br><br>அம்மா மினி கிளினிக்?</p>.<p>நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் திட்டங்கள், அதே நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும் போதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும். </p>.<p><em>வெங்கடேசன், கிருஷ்ணகிரி.</em><br><br>போராடுபவர்களால் இந்த நாட்டை மாற்றிவிட முடியுமா?</p>.<p>அமெரிக்காவில் அமைதித் தூதுவராகப் பணியாற்றிய ஏ.ஜே.மஸ்டி என்ற பாதிரியார் வியட்நாம் போருக்கு எதிராக ஒற்றை மெழுகுவத்தியுடன் வெள்ளை மாளிகைக்கு எதிரில் நின்று போராடிக்கொண்டிருந்தார். ஒரு நிருபர் அவரிடம், ``நீங்கள் இப்படித் தனியாகப் போராடுவதன் மூலம் நாட்டின் கொள்கைகளை மாற்றிவிட முடியுமென்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மஸ்டி கூறினார்: ‘‘நான் இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்று இதைச் செய்யவில்லை. இந்த நாடு என்னை அதைப்போல மாற்றிவிடக் கூடாது என்றுதான் இந்த எதிர்ப்பில் ஈடுபடுகிறேன்.”</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: </strong>கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002 </p><p>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</p>
<p><em>வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.</em><br><br>`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றால், கூட்டணி அமைவதெல்லாம்..?</p>.<p>பேரம் அமையும் விதம்! </p>.<p><em>பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.</em><br><br>`பழைய 41 தொகுதிகள் கிடைத்தால் போதும்...’ என்று பெருந்தன்மை காட்டுகிறதே தே.மு.தி.க?</p>.<p>ஓ... இதுக்கு உங்க ஊர்ல பெருந்தன்மைன்னா பேருவெச்சிருக்காங்க? </p>.<p><em>த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.</em><br><br>மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் சந்திப்பு... என்ன வித்தியாசம்?</p>.<p>கூட்டணி பேரம் படிந்து ஓகே ஆகிவிட்டதை வெளியில் சொல்ல முடிந்தால், அது அரசியல் சந்திப்பு. இழுபறி என்றால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு!</p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</em><br><br>அரசியல்வாதிகளிடம் நெருங்கிப் பழகலாமா?<br></p>.<p>அரசியல்வாதிகள் மட்டுமல்ல சொக்கலிங்க ஆதித்தன்... யாரோடு பழகவும் வள்ளுவர் சொன்ன <br><br><em>தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்<br>தீரா இடும்பை தரும் </em>என்ற குறளைப் பின்பற்றலாம்.</p>.<p><em>பெ.வெங்கடேசன், ஓசூர்.</em><br><br>அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல் ,கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது எதனால்?</p>.<p>ஒரே கருத்துள்ள கட்சிகள், மக்கள்நலனுக்காக ஒன்றிணைந்து களம் காணும்போது எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும் என்ற கோட்பாடுதான். ஆனால், இன்றைக்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்... </p>.<p><em>@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.</em><br><br>கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?</p>.<p>நம் முன்னோர்கள் காலத்தில் கிரெடிட் கார்டுகளோ, கடன் கொடுக்க இத்தனை நிறுவனங்களோ இல்லை. அவர்களிடம் தொலைநோக்கோடு திட்டமிடலும் இருந்தது. அவர்களிடமிருந்து அந்தப் பொருளாதார நுண்ணறிவுகளைக் கற்றுக்கொண்டு, பின்பற்றத் தவறிவிட்டோம். முறையாகத் திட்டமிட்டாலே கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடலாம். </p>.<p><em>பிரகாஷ், நெல்லை.<br></em><br>கமல்ஹாசனின் திடீர் தீவிரப் பிரசாரங்கள் குறித்து..?</p>.<p>`திடீர்’ என்று சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில் எல்லா கட்சிகளும் செய்வதுதான். கமல் கொஞ்சம் முந்திக்கொண்டுவிட்டார்! </p>.<p><em>@ஆதித்தன், திருநெல்வேலி. </em><br><br>ஆட்டோ எப்படிச் செல்லும்?</p>.<p>இப்பதான் எஃப்.சி-க்கு நிக்குது. பர்மிட் கிடைச்சதும், டிரைவர் ஓட்டுகிற வழியில் செல்லும்.</p>.<p><em>@ந.சண்முகம், திருவண்ணாமலை.</em><br><br>ஒரே மாதத்தில் இரண்டு முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது பற்றி?</p>.<p>‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்...’ என்றார் திருவள்ளுவர். ஒரு பக்கம் பெட்ரோல் விலை, இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு விலை என்று நம்மையும் அறியாமல் எளிய மக்கள்மீது சுமையை ஏற்றிக்கொண்டே போகிறது அரசு. மக்கள் கணக்கு வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.</p>.<p><em>எஸ்.சிவகுமாரன், சென்னை.</em><br><br>‘யாமறிந்த மொழிகளிலே’ என்று தமிழை விதந்தோதும் பாரதிக்கு வேறு என்ன மொழிகள் தெரியும்?</p>.<p>தமிழ் அல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய ஆறு மொழிகள் தெரியும். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால், இன்னும் சில மொழிகளைக் கற்றிருப்பார் பாரதி. உலகளாவிய அறிவையும் கலை ஞானத்தையும் அடைவதில் அப்படி ஓர் ஆவல் அவருக்கு.<br><br><em>‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்<br>செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ </em><br><br>என்ற அவரது வரிகளில் அதை உணரலாம்.</p>.<p><em>@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.</em><br><br>உலகை ஆள வேண்டும் என்று நினைத்த ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் முடிவு சோகமாக இருந்திருக்கிறதே..!</p>.<p>அதிகாரமோ, சர்வாதிகாரமோ என்றும் நிலைத்ததில்லை என்பதற்கான சான்றுகள்தான் அவை. </p>.<p><em>மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.</em><br><br>அம்மா மினி கிளினிக்?</p>.<p>நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் திட்டங்கள், அதே நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும் போதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும். </p>.<p><em>வெங்கடேசன், கிருஷ்ணகிரி.</em><br><br>போராடுபவர்களால் இந்த நாட்டை மாற்றிவிட முடியுமா?</p>.<p>அமெரிக்காவில் அமைதித் தூதுவராகப் பணியாற்றிய ஏ.ஜே.மஸ்டி என்ற பாதிரியார் வியட்நாம் போருக்கு எதிராக ஒற்றை மெழுகுவத்தியுடன் வெள்ளை மாளிகைக்கு எதிரில் நின்று போராடிக்கொண்டிருந்தார். ஒரு நிருபர் அவரிடம், ``நீங்கள் இப்படித் தனியாகப் போராடுவதன் மூலம் நாட்டின் கொள்கைகளை மாற்றிவிட முடியுமென்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மஸ்டி கூறினார்: ‘‘நான் இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்று இதைச் செய்யவில்லை. இந்த நாடு என்னை அதைப்போல மாற்றிவிடக் கூடாது என்றுதான் இந்த எதிர்ப்பில் ஈடுபடுகிறேன்.”</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: </strong>கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002 </p><p>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</p>