<p><em>அனன்யா, பொள்ளாச்சி.</em></p><p>‘நிவர்’ புயல் பாதிப்பில் சென்னை தப்பியதற்கு யார் காரணம்?</p>.<p>வேறு யாராக இருக்க முடியும்! `ஏற்கெனவே கொரோனா, பொருளாதார மந்தநிலை என்று நொந்துபோயிருக்கும் மக்களை நாமும் சோதிப்பானேன்’ என்று நிவர் புயலே நினைத்திருக்கும்போல. அதுதான் இயற்கையின் பெருங்கருணை!</p>.<p><em>@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.</em></p><p>ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இன்னும் மத்திய அரசு செயல்படுத்திவருகிறதா?</p>.<p>மாமல்லபுரத்தில்கூட அதற்கான போட்டோ ஷூட்டெல்லாம் நடந்ததே பார்க்கலையா நீங்க... மறந்துட்டீங்களா?</p>.<p><em>@மா.பழனி, தருமபுரி.</em></p><p>வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எதை மையப்படுத்தி பிரசாரம் செய்வார்கள்?</p>.<p>எல்லாருமே மக்கள்நலனை மையப்படுத்தி பிரசாரம் செய்து வசீகரமான வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவரவர் செய்ய நினைத்ததைத்தான் செய்வார்கள் என்பதுதான் கடந்த காலம் நமக்குச் சொன்ன வரலாறு. </p>.<p><em>@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.</em></p><p>லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், சாதி, மதம் இவற்றைத் தவிர்த்த ‘தமிழக அரசியல் தலைவரை’ மக்கள் தேர்ந்தெடுக்கும் காலம் எப்போது?</p>.<p>எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது!</p>.<p><em>@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.</em></p><p>நாடு எதைத் தாங்காது, கடல் கொந்தளிப்பு... அரசியல்வாதிகள் கொந்தளிப்பு?</p>.<p>மக்களின் கொந்தளிப்பு!</p>.<p><em>@தாராபுரம் ரவிச்சந்திரன்.</em></p><p>மற்றவற்றைவிடுங்கள். மக்களைச் சந்திப்பதில் எடப்பாடியார் ஜெயலலிதாவைவிட, ஏன் மற்ற மாநில முதல்வர்களைவிட முன்னணியில்தானே இருக்கிறார்?</p>.<p>ஆள்பவர்களின் தலையாய கடமையே மக்களைச் சந்திப்பதுதான். அதையே சிலாகித்துப் பேசுமளவுக்கு இன்றைய அரசியல்வாதிகள் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம்!</p>.<p><em>நாகராஜன், மேல்மருவத்தூர்.</em></p><p>ஈரானில், காரில் சென்று பாடம் எடுத்த ஓர் ஆசிரியர் வைரல் ஆகியிருக்கிறாரே..?</p>.<p>ஆம். தன்னிடம் படிக்கும் ஒரே மாணவிக்காக, காரில் தினமும் அவரது கிராமத்துக்குச் சென்று கற்றுக்கொடுக்கும் அந்த ஆசிரியர் தனது வெண்மை நிற காரையே போர்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே விரும்பாததுதான் இதில் ஹைலைட்.</p><p>அதே ஈரானைச் சேர்ந்த இன்னொருவர் ஜாஃப்ரி. ஆங்கில ஆசிரியையான அவர், உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஆன்லைன் வகுப்பு நடத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகவே, ஈரானிய கல்வித்துறை மந்திரி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். ஆன்லைன் கல்விக் காலத்தில் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது! </p>.<p><em>பாஸ்கர், சென்னை.</em></p><p>‘கலைஞரின் மூளை ஸ்டாலினிடம் இல்லை. அது அழகிரியிடம் உள்ளது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறாரே?</p>.<p>ஏற்கெனவே விஞ்ஞானிப் பட்டம் வாங்கியாச்சு. இப்ப ‘மூளை மாற்று’ பற்றியெல்லாம் பேசி டாக்டர் பட்டத்துக்கு அடிபோடுறார்போல!</p>.<p><em>சே.சே.முகமது கமால், கடையநல்லூர்.</em></p><p>அமித் ஷா வருகை... நிவர் புயல் வருகை... ஒப்பிடுக.</p>.<p>இரண்டுக்குமே நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டுமே கணிக்க முடியாததாக இருந்தன. இரண்டுமே வந்த வேகத்தில் சென்றன!</p>.<p><em>ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி.</em></p><p>புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறதே?</p>.<p>ஒலி வடிவ நூல், வீடியோக்களில் புத்தகங்கள் என்று வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாசிப்பு பழக்கம் அடுத்த தலைமுறைக்கும் சென்றுசேர தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது!</p>.<p><em>குணசேகரன், வேலூர்.</em></p><p>மழைக்குச் சாலைகள் பல்லிளிப்பது, ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சியாக இருக்கிறதே!</p>.<p>பர்சன்டேஜ் மாறுவதால்தான்!</p>.<p><em>@மு.மதிவாணன், அரூர்.</em></p><p>‘ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியா’ என்று ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறதே..?</p>.<p>நமக்கெல்லாம் தெரிந்த செய்தியைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ புதுசா கண்டுபிடிச்சதைப்போல பெருமைப்பட்டுக்கறாங்களே! </p>.<p><em>@பாண்டி முத்துராஜ்</em></p><p>இந்த தடவையாவது ரஜினி வருவாரா?</p>.<p>வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதில் ஏன் இத்தனை குழப்பம் என்பதுதான் மக்களின் கேள்வி!</p>.<p><em>சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.</em></p><p>வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துவிட்டாரே?</p>.<p>வேறு வழி? சம்மதிக்காவிட்டால் வெளியேற்றப்படுவோம் என்பது அவருக்கும் தெரியுமே!</p>.<p><em>@பா.ஜெயப்பிரகாஷ், மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி.</em></p><p>பிரதமர் மோடி வெண்தாடி வேந்தராகக் காட்சியளிப்பதன் மர்மம் என்னங்க சார்..?</p>.<p>அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் நம்பிக்கைவைக்காமல், ஸ்டைல்களில் நம்பிக்கை வைப்பது சமீபகால யுக்தியாக மாறிவருகிறது. தமிழ்நாடு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002 </strong></p><p><strong>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</strong></p>
<p><em>அனன்யா, பொள்ளாச்சி.</em></p><p>‘நிவர்’ புயல் பாதிப்பில் சென்னை தப்பியதற்கு யார் காரணம்?</p>.<p>வேறு யாராக இருக்க முடியும்! `ஏற்கெனவே கொரோனா, பொருளாதார மந்தநிலை என்று நொந்துபோயிருக்கும் மக்களை நாமும் சோதிப்பானேன்’ என்று நிவர் புயலே நினைத்திருக்கும்போல. அதுதான் இயற்கையின் பெருங்கருணை!</p>.<p><em>@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.</em></p><p>ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இன்னும் மத்திய அரசு செயல்படுத்திவருகிறதா?</p>.<p>மாமல்லபுரத்தில்கூட அதற்கான போட்டோ ஷூட்டெல்லாம் நடந்ததே பார்க்கலையா நீங்க... மறந்துட்டீங்களா?</p>.<p><em>@மா.பழனி, தருமபுரி.</em></p><p>வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எதை மையப்படுத்தி பிரசாரம் செய்வார்கள்?</p>.<p>எல்லாருமே மக்கள்நலனை மையப்படுத்தி பிரசாரம் செய்து வசீகரமான வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவரவர் செய்ய நினைத்ததைத்தான் செய்வார்கள் என்பதுதான் கடந்த காலம் நமக்குச் சொன்ன வரலாறு. </p>.<p><em>@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.</em></p><p>லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், சாதி, மதம் இவற்றைத் தவிர்த்த ‘தமிழக அரசியல் தலைவரை’ மக்கள் தேர்ந்தெடுக்கும் காலம் எப்போது?</p>.<p>எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது!</p>.<p><em>@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.</em></p><p>நாடு எதைத் தாங்காது, கடல் கொந்தளிப்பு... அரசியல்வாதிகள் கொந்தளிப்பு?</p>.<p>மக்களின் கொந்தளிப்பு!</p>.<p><em>@தாராபுரம் ரவிச்சந்திரன்.</em></p><p>மற்றவற்றைவிடுங்கள். மக்களைச் சந்திப்பதில் எடப்பாடியார் ஜெயலலிதாவைவிட, ஏன் மற்ற மாநில முதல்வர்களைவிட முன்னணியில்தானே இருக்கிறார்?</p>.<p>ஆள்பவர்களின் தலையாய கடமையே மக்களைச் சந்திப்பதுதான். அதையே சிலாகித்துப் பேசுமளவுக்கு இன்றைய அரசியல்வாதிகள் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம்!</p>.<p><em>நாகராஜன், மேல்மருவத்தூர்.</em></p><p>ஈரானில், காரில் சென்று பாடம் எடுத்த ஓர் ஆசிரியர் வைரல் ஆகியிருக்கிறாரே..?</p>.<p>ஆம். தன்னிடம் படிக்கும் ஒரே மாணவிக்காக, காரில் தினமும் அவரது கிராமத்துக்குச் சென்று கற்றுக்கொடுக்கும் அந்த ஆசிரியர் தனது வெண்மை நிற காரையே போர்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே விரும்பாததுதான் இதில் ஹைலைட்.</p><p>அதே ஈரானைச் சேர்ந்த இன்னொருவர் ஜாஃப்ரி. ஆங்கில ஆசிரியையான அவர், உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஆன்லைன் வகுப்பு நடத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகவே, ஈரானிய கல்வித்துறை மந்திரி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். ஆன்லைன் கல்விக் காலத்தில் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது! </p>.<p><em>பாஸ்கர், சென்னை.</em></p><p>‘கலைஞரின் மூளை ஸ்டாலினிடம் இல்லை. அது அழகிரியிடம் உள்ளது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறாரே?</p>.<p>ஏற்கெனவே விஞ்ஞானிப் பட்டம் வாங்கியாச்சு. இப்ப ‘மூளை மாற்று’ பற்றியெல்லாம் பேசி டாக்டர் பட்டத்துக்கு அடிபோடுறார்போல!</p>.<p><em>சே.சே.முகமது கமால், கடையநல்லூர்.</em></p><p>அமித் ஷா வருகை... நிவர் புயல் வருகை... ஒப்பிடுக.</p>.<p>இரண்டுக்குமே நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டுமே கணிக்க முடியாததாக இருந்தன. இரண்டுமே வந்த வேகத்தில் சென்றன!</p>.<p><em>ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி.</em></p><p>புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறதே?</p>.<p>ஒலி வடிவ நூல், வீடியோக்களில் புத்தகங்கள் என்று வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாசிப்பு பழக்கம் அடுத்த தலைமுறைக்கும் சென்றுசேர தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது!</p>.<p><em>குணசேகரன், வேலூர்.</em></p><p>மழைக்குச் சாலைகள் பல்லிளிப்பது, ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சியாக இருக்கிறதே!</p>.<p>பர்சன்டேஜ் மாறுவதால்தான்!</p>.<p><em>@மு.மதிவாணன், அரூர்.</em></p><p>‘ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியா’ என்று ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறதே..?</p>.<p>நமக்கெல்லாம் தெரிந்த செய்தியைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ புதுசா கண்டுபிடிச்சதைப்போல பெருமைப்பட்டுக்கறாங்களே! </p>.<p><em>@பாண்டி முத்துராஜ்</em></p><p>இந்த தடவையாவது ரஜினி வருவாரா?</p>.<p>வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதில் ஏன் இத்தனை குழப்பம் என்பதுதான் மக்களின் கேள்வி!</p>.<p><em>சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.</em></p><p>வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துவிட்டாரே?</p>.<p>வேறு வழி? சம்மதிக்காவிட்டால் வெளியேற்றப்படுவோம் என்பது அவருக்கும் தெரியுமே!</p>.<p><em>@பா.ஜெயப்பிரகாஷ், மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி.</em></p><p>பிரதமர் மோடி வெண்தாடி வேந்தராகக் காட்சியளிப்பதன் மர்மம் என்னங்க சார்..?</p>.<p>அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் நம்பிக்கைவைக்காமல், ஸ்டைல்களில் நம்பிக்கை வைப்பது சமீபகால யுக்தியாக மாறிவருகிறது. தமிழ்நாடு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002 </strong></p><p><strong>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</strong></p>