<p><em>வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.</em><br><br>பொங்கல் பண்டிகையை போலீஸாருடன் முதல்வர் வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறாரே?</p>.<p>தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்பவர், தேர்தல் நேரத்தில் போலீஸுடன் பொங்கலைக் கொண்டாடியதன் மூலம், நாட்டுக்கு எப்படி விவசாயி முக்கியமோ அதேபோல, தேர்தலுக்கு போலீஸ் முக்கியம் என்று உணர்த்துகிறார்போல! </p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</em><br><br>எந்தக் கட்சி அதிக பயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?</p>.<p>தேர்தல் வந்தால், எந்தக் கட்சிக்குத்தான் பயம் இருக்காது!? </p>.<p><em>எம்.ஃபாரூக், காயல்பட்டினம்.</em><br><br>பிரதமர் நரேந்திர மோடியின் தாடியும் மீசையும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறதே?</p>.<p><br>இந்தியாவில் அதுவாவது வளரட்டுமே ஃபாரூக்... விடுங்களேன்! </p>.<p><em>@ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.</em><br><br>புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண் பேடிக்கும் நடக்கும் பனிப்போர் எப்போது முற்றுப்பெறும்?</p>.<p>கிரண் பேடி பா.ஜ.க-வாகவும், நாராயணசாமி காங்கிரஸாகவும் இருப்பதைத் தவிர்த்துவிட்டு கிரண் பேடி ஆளுநராகவும், நாராயணசாமி முதல்வராகவும் பொறுப்புணர்ந்து செயல்படத் தொடங்கினால் இந்தப் பனிப்போர் முற்றுப்பெறும். அதிலும் ஆளுநர், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் மக்கள் வாழ்வு மேலும் வளம்பெறும்.</p>.<p><em>எம்.சண்முகம், கொங்கணாபுரம்.</em><br><br>`கிராமசபை என்ற பெயரில், தி.மு.க கூட்டம் சேர்க்கிறது’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?</p>.<p>இந்த... ரத்தம் - தக்காளிச் சட்னி காமெடி உங்களுக்கும் தெரியும்தானே! </p>.<p><em>மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.</em><br><br>இன்னமும் பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பிக்காததன் காரணம் என்ன?</p>.<p>அவசரப்படறீங்களே மனோகர்... தேர்தல் பிரசாரம்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டாமா! </p>.<p><em>இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.</em><br><br>இன்றுள்ள கட்சிகளில் சுவாரஸ்யமான அரசியல் கட்சி எது?</p>.<p>மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பதில், இன்றைக்கு இருக்கும் எந்தக் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை! </p>.<p><em>கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை.</em><br><br>‘தமிழகத்தில் தாமரை மலரும். மற்ற மாநிலங்களைப்போல தமிழ் மண்ணையும் மாற்றுவோம்’ என்ற ஜெ.பி.நட்டாவின் நம்பிக்கை?</p>.<p>நம்பிக்கைதானே பாஸ் வாழ்க்கை! </p>.<p><em>@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.</em><br><br>“அ.தி.மு.க-வின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும்விதமாக, ஜோ பைடன் இரண்டு விரல்களைக் காட்டுகிறார்” என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?</p>.<p>மக்கள் பணிகளைவிட்டுவிட்டு இப்படி எதற்கும் உதவாத கோமாளித்தனமான பேச்சுகளால், மக்களின் வெறுப்புணர்வையே இவர்கள் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்! </p>.<p><em>சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.</em><br><br>நடிகர் வடிவேலு அரசியலுக்கு வருவாரா?</p>.<p>அவரது முகபாவனைகளைக் கொண்டு உருவாக்கப்படும் மீம்ஸ்களால், நம் அரசியல்வாதிகள் புரட்டியெடுக்கப்படுவதைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே... தனியாக வேறு அரசியலுக்கு வர வேண்டுமா என்ன?</p>.<p><em>@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.</em><br><br>சசிகலாவை திடீரென முதல்வர் பழனிச்சாமி சந்திக்க நேர்ந்தால், இருவரும் என்ன பேசிக்கொள்வார்கள்?</p>.<p>மல... நல்லாருக்கியா மல!</p>.<p><em>கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம்.</em><br><br>`அ.தி.மு.க-விலுள்ள அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பிரச்னைகளை, பேசித் தீர்த்துக்கொள்வோம்’ என்று ஓ.பி.எஸ் கூறியிருக்கிறாரே?</p>.<p><br>அண்ணன் தம்பி பிரச்னைகள் அவர்களை மட்டும் பாதித்தால் பரவாயில்லை... மக்களையும் பாதிக்கும்போதுதான் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன! </p>.<p><em>@மணிகண்டன், கூடுவாஞ்சேரி.</em><br><br>சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் உண்டா?</p>.<p>சொந்தப் பணம்லாம் எங்க பாஸ்? எல்லாம் மக்கள் பணம்தான்! </p>.<p><em>மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை</em>.<br><br>அதிகாரத்தில் இருந்த சசிகலா... அதிகாரத்தில் இல்லாத சசிகலா... என்ன வித்தியாசம்?</p>.<p>அவர் எப்போது அதிகாரத்தில் இருந்தார்? ‘அதிகாரத்துடன்’தானே இருந்தார்!</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: </strong>கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600 002. </p><p>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</p>
<p><em>வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.</em><br><br>பொங்கல் பண்டிகையை போலீஸாருடன் முதல்வர் வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறாரே?</p>.<p>தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்பவர், தேர்தல் நேரத்தில் போலீஸுடன் பொங்கலைக் கொண்டாடியதன் மூலம், நாட்டுக்கு எப்படி விவசாயி முக்கியமோ அதேபோல, தேர்தலுக்கு போலீஸ் முக்கியம் என்று உணர்த்துகிறார்போல! </p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</em><br><br>எந்தக் கட்சி அதிக பயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?</p>.<p>தேர்தல் வந்தால், எந்தக் கட்சிக்குத்தான் பயம் இருக்காது!? </p>.<p><em>எம்.ஃபாரூக், காயல்பட்டினம்.</em><br><br>பிரதமர் நரேந்திர மோடியின் தாடியும் மீசையும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறதே?</p>.<p><br>இந்தியாவில் அதுவாவது வளரட்டுமே ஃபாரூக்... விடுங்களேன்! </p>.<p><em>@ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.</em><br><br>புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண் பேடிக்கும் நடக்கும் பனிப்போர் எப்போது முற்றுப்பெறும்?</p>.<p>கிரண் பேடி பா.ஜ.க-வாகவும், நாராயணசாமி காங்கிரஸாகவும் இருப்பதைத் தவிர்த்துவிட்டு கிரண் பேடி ஆளுநராகவும், நாராயணசாமி முதல்வராகவும் பொறுப்புணர்ந்து செயல்படத் தொடங்கினால் இந்தப் பனிப்போர் முற்றுப்பெறும். அதிலும் ஆளுநர், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் மக்கள் வாழ்வு மேலும் வளம்பெறும்.</p>.<p><em>எம்.சண்முகம், கொங்கணாபுரம்.</em><br><br>`கிராமசபை என்ற பெயரில், தி.மு.க கூட்டம் சேர்க்கிறது’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?</p>.<p>இந்த... ரத்தம் - தக்காளிச் சட்னி காமெடி உங்களுக்கும் தெரியும்தானே! </p>.<p><em>மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.</em><br><br>இன்னமும் பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பிக்காததன் காரணம் என்ன?</p>.<p>அவசரப்படறீங்களே மனோகர்... தேர்தல் பிரசாரம்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டாமா! </p>.<p><em>இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.</em><br><br>இன்றுள்ள கட்சிகளில் சுவாரஸ்யமான அரசியல் கட்சி எது?</p>.<p>மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பதில், இன்றைக்கு இருக்கும் எந்தக் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை! </p>.<p><em>கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை.</em><br><br>‘தமிழகத்தில் தாமரை மலரும். மற்ற மாநிலங்களைப்போல தமிழ் மண்ணையும் மாற்றுவோம்’ என்ற ஜெ.பி.நட்டாவின் நம்பிக்கை?</p>.<p>நம்பிக்கைதானே பாஸ் வாழ்க்கை! </p>.<p><em>@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.</em><br><br>“அ.தி.மு.க-வின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும்விதமாக, ஜோ பைடன் இரண்டு விரல்களைக் காட்டுகிறார்” என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?</p>.<p>மக்கள் பணிகளைவிட்டுவிட்டு இப்படி எதற்கும் உதவாத கோமாளித்தனமான பேச்சுகளால், மக்களின் வெறுப்புணர்வையே இவர்கள் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்! </p>.<p><em>சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.</em><br><br>நடிகர் வடிவேலு அரசியலுக்கு வருவாரா?</p>.<p>அவரது முகபாவனைகளைக் கொண்டு உருவாக்கப்படும் மீம்ஸ்களால், நம் அரசியல்வாதிகள் புரட்டியெடுக்கப்படுவதைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே... தனியாக வேறு அரசியலுக்கு வர வேண்டுமா என்ன?</p>.<p><em>@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.</em><br><br>சசிகலாவை திடீரென முதல்வர் பழனிச்சாமி சந்திக்க நேர்ந்தால், இருவரும் என்ன பேசிக்கொள்வார்கள்?</p>.<p>மல... நல்லாருக்கியா மல!</p>.<p><em>கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம்.</em><br><br>`அ.தி.மு.க-விலுள்ள அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பிரச்னைகளை, பேசித் தீர்த்துக்கொள்வோம்’ என்று ஓ.பி.எஸ் கூறியிருக்கிறாரே?</p>.<p><br>அண்ணன் தம்பி பிரச்னைகள் அவர்களை மட்டும் பாதித்தால் பரவாயில்லை... மக்களையும் பாதிக்கும்போதுதான் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன! </p>.<p><em>@மணிகண்டன், கூடுவாஞ்சேரி.</em><br><br>சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் உண்டா?</p>.<p>சொந்தப் பணம்லாம் எங்க பாஸ்? எல்லாம் மக்கள் பணம்தான்! </p>.<p><em>மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை</em>.<br><br>அதிகாரத்தில் இருந்த சசிகலா... அதிகாரத்தில் இல்லாத சசிகலா... என்ன வித்தியாசம்?</p>.<p>அவர் எப்போது அதிகாரத்தில் இருந்தார்? ‘அதிகாரத்துடன்’தானே இருந்தார்!</p>.<p><strong>கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: </strong>கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600 002. </p><p>kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!</p>