<p><em>த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.</em><br><br>திராவிடக் கட்சிகளுக்குரிய பொதுவான பலம் எது?</p>.<p>சமூகநீதியை ஆழமாக விதைத்த அதன் கடந்தகால வரலாறு!</p>.<p><em>@சரவணன், சென்னை-2.</em><br><br>‘தமிழக அரசின் மீதிருக்கும் கடன்சுமையைக் குறைக்கப் பாடுபடுவேன்’ என்று எந்தக் கட்சியாவது வாக்குறுதி தர முடியுமா?</p>.<p>வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால் அதை நிறைவேற்ற அழுத்தமான திட்டங்கள் தேவை!</p>.<p><em>@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.</em><br><br>அ.தி.மு.க-வை உடைக்க, சில புல்லுருவிகள் சதி செய்வதாகச் சொல்லும் முதல்வர் இ.பி.எஸ், அந்தப் புல்லுருவிகளின் பெயரைக் கூறாதது ஏனோ?</p>.<p>கூடவே அமர்ந்திருப்பவர்களை நெளியவைக்க வேண்டாம் என்ற மேடை நாகரிகம் காரணமாக இருக்கலாம்.</p>.<p><em>@கே.மந்திரமூர்த்தி, விழுப்புரம்.</em><br><br>ரசிகன், தொண்டனாகும்போது என்ன நடக்கும்?</p>.<p>ரசிகனுக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனால் தொண்டனுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தே தீரும்.</p>.<p><em>சொக்கலிங்கம், மதுரை.</em><br><br>தேர்தல் வெற்றி எதைப் பொறுத்தது?</p>.<p>கடந்தகாலச் செயல்பாடு, எதிர்காலத் திட்டம், தேர்தல் அறிக்கை... இவை மூன்றும்தான் நேர்மையான எதிர்பார்ப்பாக இருக்க முடியும். வெற்றியும் இதைப் பொறுத்துத்தான் சாத்தியப்பட வேண்டும். ஆனால், இவற்றைவிடுத்து ஸ்வீட் பாக்ஸ்களும், டோக்கன்களும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது வேதனைக்குரியது.</p>.<p><em>@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.</em><br><br>இந்த ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற, செல்லூர் ராஜூவுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் போட்டி போடுகிறாரே..?</p>.<p>இல்லையில்லை... செல்லூர் ராஜூவையே மிஞ்சிவிட்டார். “கோ கொரோனா என்று கோஷமிட்டேன். கொரோனா போய்விட்டது. இப்போது வந்திருக்கும் உருமாறிய கொரோனா வைரஸுக்கு ‘நோ கொரோனா நோ கொரோனா’ என்று கோஷமிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் யோசிப்பதற்கு ஐந்து நபர்கள்கொண்ட குழுவையே வைத்திருப்பார்போல!</p>.<p><em>@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.<br></em><br>வருகிற புத்தாண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்? பாசிட்டிவ்வாக புத்தாண்டுக்கு ஒரு வாழ்த்து ப்ளீஸ்!</p>.<p>அடுத்த நொடி ஆச்சர்யம்தான் இந்த வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யம்! காலம் என்பது, இயற்கை நமக்கு அனுப்பிவைக்கும் விசித்திரமான பொக்கிஷப் பெட்டி. அதுவாகத் திறந்துகொள்ளாதவரை அதை யாரும் அறிந்துகொள்ள முடியாது. 2020-ம் ஆண்டின் கசப்பு நீங்கும்படியாக, நிறைய மகிழ்ச்சியான விஷயங்களோடு, 2021-ம் ஆண்டு எனும் பரிசை இயற்கை நமக்கு வழங்கும் என்பதை உற்சாகமாக நம்பலாம்... எல்லோரும் இன்புற்றிருக்க... ஹேப்பி நியூ இயர் ரம்யா ராகவ்!</p>.<p><em>@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.<br></em><br>“சாதிப்பெயர்கள்கொண்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது தண்டனைக்குரியது” என உத்தரப்பிரதேசப் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளதே..?</p>.<p>பெயர்களில் சாதியொட்டை அறவே ஒழித்த நாம், இவர்களைப் பாராட்டி வரவேற்போம்! அதேசமயம் நம் மாநிலத்திலும் சில மாவட்டங்களில் கடைகளில், வாகனங்களில் நிற அடையாளங்களாகவும் சாதி ஒட்டிக்கொண்டு திரிவதையும் ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.</p>.<p><em>@பாண்டி முத்துராஜ்<br></em><br>அ.தி.மு.க-வில் சில நாள்களுக்கு முன்னர், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்கள். இப்போது பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?</p>.<p>“அத உங்க ஓனரச் சொல்லச் சொல்லுய்யா” என்ற ‘பருத்திவீரன்’ வசனம்தான் நினைவுக்கு வருகிறது.</p>.<p><em>லட்சுமி சுந்தரம், வேலூர், நாமக்கல்.</em><br><br>உங்கள் சமீபத்திய பாராட்டு யாருக்கு?</p>.<p>21 வயதில் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராகி, `இந்தியாவின் இளம் மேயர்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் ஆர்யா ராஜேந்திரனுக்கு. பாராட்டு எதற்காகவென்றால், “படிப்பை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டேன். இந்த மேயர் பொறுப்போடு படிப்பைத் தொடர விருக்கிறேன்” என்று அவர் அறிவித்ததற்கு!</p>.<p><em>கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.</em><br><br>`அ.தி.மு.க-வில் தொண்டனும் முதல்வராகலாம்’ என்று பேசும் முதல்வர் பழனிச்சாமி, `இனி எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை’ என்று ஏன் பேசவில்லை?</p>.<p>ஏதோ மேடையில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதற்காக, அவர் அடிமடியிலயே கைவெக்கறீங்களே பாஸ்!</p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.<br></em><br>கனிமொழி தி.மு.க தலைவராக வர வாய்ப்பிருக்கிறதா?</p>.<p>அதற்கான தகுதியிருப்பதைத் தாமாக உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தால், யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. கனிமொழிக்கும் அது பொருந்தும் </p>
<p><em>த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.</em><br><br>திராவிடக் கட்சிகளுக்குரிய பொதுவான பலம் எது?</p>.<p>சமூகநீதியை ஆழமாக விதைத்த அதன் கடந்தகால வரலாறு!</p>.<p><em>@சரவணன், சென்னை-2.</em><br><br>‘தமிழக அரசின் மீதிருக்கும் கடன்சுமையைக் குறைக்கப் பாடுபடுவேன்’ என்று எந்தக் கட்சியாவது வாக்குறுதி தர முடியுமா?</p>.<p>வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால் அதை நிறைவேற்ற அழுத்தமான திட்டங்கள் தேவை!</p>.<p><em>@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.</em><br><br>அ.தி.மு.க-வை உடைக்க, சில புல்லுருவிகள் சதி செய்வதாகச் சொல்லும் முதல்வர் இ.பி.எஸ், அந்தப் புல்லுருவிகளின் பெயரைக் கூறாதது ஏனோ?</p>.<p>கூடவே அமர்ந்திருப்பவர்களை நெளியவைக்க வேண்டாம் என்ற மேடை நாகரிகம் காரணமாக இருக்கலாம்.</p>.<p><em>@கே.மந்திரமூர்த்தி, விழுப்புரம்.</em><br><br>ரசிகன், தொண்டனாகும்போது என்ன நடக்கும்?</p>.<p>ரசிகனுக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனால் தொண்டனுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தே தீரும்.</p>.<p><em>சொக்கலிங்கம், மதுரை.</em><br><br>தேர்தல் வெற்றி எதைப் பொறுத்தது?</p>.<p>கடந்தகாலச் செயல்பாடு, எதிர்காலத் திட்டம், தேர்தல் அறிக்கை... இவை மூன்றும்தான் நேர்மையான எதிர்பார்ப்பாக இருக்க முடியும். வெற்றியும் இதைப் பொறுத்துத்தான் சாத்தியப்பட வேண்டும். ஆனால், இவற்றைவிடுத்து ஸ்வீட் பாக்ஸ்களும், டோக்கன்களும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது வேதனைக்குரியது.</p>.<p><em>@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.</em><br><br>இந்த ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற, செல்லூர் ராஜூவுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் போட்டி போடுகிறாரே..?</p>.<p>இல்லையில்லை... செல்லூர் ராஜூவையே மிஞ்சிவிட்டார். “கோ கொரோனா என்று கோஷமிட்டேன். கொரோனா போய்விட்டது. இப்போது வந்திருக்கும் உருமாறிய கொரோனா வைரஸுக்கு ‘நோ கொரோனா நோ கொரோனா’ என்று கோஷமிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் யோசிப்பதற்கு ஐந்து நபர்கள்கொண்ட குழுவையே வைத்திருப்பார்போல!</p>.<p><em>@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.<br></em><br>வருகிற புத்தாண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்? பாசிட்டிவ்வாக புத்தாண்டுக்கு ஒரு வாழ்த்து ப்ளீஸ்!</p>.<p>அடுத்த நொடி ஆச்சர்யம்தான் இந்த வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யம்! காலம் என்பது, இயற்கை நமக்கு அனுப்பிவைக்கும் விசித்திரமான பொக்கிஷப் பெட்டி. அதுவாகத் திறந்துகொள்ளாதவரை அதை யாரும் அறிந்துகொள்ள முடியாது. 2020-ம் ஆண்டின் கசப்பு நீங்கும்படியாக, நிறைய மகிழ்ச்சியான விஷயங்களோடு, 2021-ம் ஆண்டு எனும் பரிசை இயற்கை நமக்கு வழங்கும் என்பதை உற்சாகமாக நம்பலாம்... எல்லோரும் இன்புற்றிருக்க... ஹேப்பி நியூ இயர் ரம்யா ராகவ்!</p>.<p><em>@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.<br></em><br>“சாதிப்பெயர்கள்கொண்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது தண்டனைக்குரியது” என உத்தரப்பிரதேசப் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளதே..?</p>.<p>பெயர்களில் சாதியொட்டை அறவே ஒழித்த நாம், இவர்களைப் பாராட்டி வரவேற்போம்! அதேசமயம் நம் மாநிலத்திலும் சில மாவட்டங்களில் கடைகளில், வாகனங்களில் நிற அடையாளங்களாகவும் சாதி ஒட்டிக்கொண்டு திரிவதையும் ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.</p>.<p><em>@பாண்டி முத்துராஜ்<br></em><br>அ.தி.மு.க-வில் சில நாள்களுக்கு முன்னர், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்கள். இப்போது பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?</p>.<p>“அத உங்க ஓனரச் சொல்லச் சொல்லுய்யா” என்ற ‘பருத்திவீரன்’ வசனம்தான் நினைவுக்கு வருகிறது.</p>.<p><em>லட்சுமி சுந்தரம், வேலூர், நாமக்கல்.</em><br><br>உங்கள் சமீபத்திய பாராட்டு யாருக்கு?</p>.<p>21 வயதில் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராகி, `இந்தியாவின் இளம் மேயர்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் ஆர்யா ராஜேந்திரனுக்கு. பாராட்டு எதற்காகவென்றால், “படிப்பை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டேன். இந்த மேயர் பொறுப்போடு படிப்பைத் தொடர விருக்கிறேன்” என்று அவர் அறிவித்ததற்கு!</p>.<p><em>கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.</em><br><br>`அ.தி.மு.க-வில் தொண்டனும் முதல்வராகலாம்’ என்று பேசும் முதல்வர் பழனிச்சாமி, `இனி எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை’ என்று ஏன் பேசவில்லை?</p>.<p>ஏதோ மேடையில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதற்காக, அவர் அடிமடியிலயே கைவெக்கறீங்களே பாஸ்!</p>.<p><em>சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.<br></em><br>கனிமொழி தி.மு.க தலைவராக வர வாய்ப்பிருக்கிறதா?</p>.<p>அதற்கான தகுதியிருப்பதைத் தாமாக உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தால், யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. கனிமொழிக்கும் அது பொருந்தும் </p>