<p><em>ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.</em><br><br>சுங்கச்சாவடி, வாக்குச்சாவடி... என்ன வித்தியாசம்?</p>.<p>சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நம்மை மறித்து, காசு கேட்கிறார்கள். வாக்குச்சாவடிக்குப் போகும்போது நம்மை மறித்து, காசு கொடுக்கிறார்கள்!</p>.<p><em>@பெ.பச்சையப்பன், கம்பம்.</em><br><br>தற்போதைய சூழ்நிலையில் நிம்மதியாக இருப்பவர்கள் யார்?</p>.<p>சினிமாவில் மட்டும் ரஜினியைக் கொண்டாடும் அவருடைய ரசிகர்கள்.</p>.<p><em>எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.</em><br><br>“தமிழகத்தில் ஊழல் ஒழியும் வரை அரசியலில் இருப்பேன்” என்கிறாரே கமல்ஹாசன்..?</p>.<p><br>மிக நீண்டகாலம் அரசியலில் இருப்பேன் என்பதைச் சூசகமாகச் சொல்கிறார்போல.</p>.<p><em>சு.செல்வராஜ், திட்டக்குடி.</em><br><br>தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்?</p>.<p>இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ... “போகிறேன் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.</p>.<p><em>@அனன்யா, பொள்ளாச்சி.<br></em><br>“பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே தரலாம்” என்கிறாரே எடப்பாடியார்?</p>.<p>‘ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம்... உன் முதுகில் ஒரு ஓட்டை இருக்கு’ என்று. இந்தப் பழமொழிதான் இருவரைப் பற்றியுமான மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது! </p>.<p><em>@ந.சண்முகம், திருவண்ணாமலை.</em><br><br>``கோட்டையைப் பிடிப்போம்’’ என்கிறாரே குஷ்பு...?</p>.<p>‘அண்ணாத்த’ படத்துல வர்ற காட்சியா இருக்கும். பாவம்... ஷூட்டிங்கை வேற நிறுத்திட்டாங்க!</p>.<p><em>@சீனிவாசன், கண்டனூர்.</em><br><br>“ரஜினியுடன் கூட்டணி என்பது ஓ.பி.எஸ்ஸின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல” என்று சொன்ன அமைச்சர் ஜெயக்குமாரே, இன்று அ.தி.மு.க-வை ரஜினி ஆதரிப்பார் என்கிறாரே..?</p>.<p>திடீரென்று கதாபாத்திரங்கள் மாறும்போது திரைக்கதை, வசனத்தையெல்லாம் மாற்றித்தானே ஆக வேண்டும்!</p>.<p><em>@இல.கண்ணன், நங்கவள்ளி. </em><br><br>`எனக்கும் ஆன்மிகத்துக்கும் விரோதம் கிடையாது’ என்று கமல்ஹாசன் கூறுவது ஓட்டுக்காகவா கழுகாரே?</p>.<p>ஓட்டுக்காக இல்லைனு சொல்லலை. இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம்.</p>.<p><em>சிவகுருநாதன், மயிலை.</em><br><br>ரஜினி அரசியலுக்கு வராததை, அவரின் குருவான கே.பாலசந்தர் இருந்து கேட்டிருந்தால் என்ன நினைத்திருப்பார்?</p>.<p>``யானை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில்... என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பதுதானே அழகு!’’<br><br>‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு, ‘விகடன் மேடை’யில் கே.பாலசந்தர் சொன்ன பதில் இது! இதைப் படித்தாலே, அவர் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார் என்பது புரியும்!</p>.<p><em>@மு.மதிவாணன், அச்சல்வாடி போஸ்ட், அரூர்.</em></p><p>“இயேசுநாதரைச் சுட்ட கோட்சே” என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..?</p>.<p>`காந்தியைச் சுட்டது கோட்சே’ என்ற சரியான வரலாற்றுச் செய்தியை, திண்டுக்கல் சீனிவாசன் சொன்னால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். என்ன செய்வது... நமக்கு வாய்த்த அமைச்சர்கள் அப்படி!</p>.<p><em>ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.</em><ins><br></ins><br>சன் சேனல்களில், தமிழக அரசின் சாதனை விளம்பரம் வருகிறதே... இதன் மர்மம் என்ன, புரியவில்லையே கழுகாரே..?</p>.<p>வியாபாரத்தில் ஏது கட்சி பேதம்... பணம் என்று வந்த பிறகு மாமன் என்ன, மச்சான் என்ன?</p>.<p><em>எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.</em><br><br>அரிசி அட்டைதாரர்களுக்குப் பரிசாக 2,500 ருபாய் தருவது பொங்கலுக்கு மட்டும்தானா?</p>.<p>இல்லை... ஆளுங்கட்சியினர் ஐந்தாண்டுக் காலம் செய்த குளறுபடிகளுக்கும் தவறுகளுக்கும், தேர்தல் நேரத்தில் மக்கள் பொங்காமல் இருக்கவும்தான்!</p>.<p><em>@ஜீவன் சுந்தர், நாகப்பட்டினம்.</em></p><p>ரஜினியின் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழருவி மணியனா, அர்ஜுனமூர்த்தியா?</p>.<p>அர்ஜுனமூர்த்தி இந்த அசைன்மென்ட்டுக்காக டெபுடேஷனில் வந்தவர்தான். அடுத்த நாளே பிரஸ் மீட் வைத்து, ஏற்கெனவே இருந்த கட்சிக்கு சிக்னல் கொடுத்துவிட்டார். தமிழருவி மணியனுக்கும் அரசியலைவிட்டுப்போவது புதிதல்ல. ஏற்கெனவே 2016-ல் இதேபோல கடிதம் எழுதிவிட்டு விலகிப்போனவர்தான். இருவருக்குமே பாதிப்பெல்லாம் கிடையாது. சொந்தக் காசில் போஸ்டரெல்லாம் அடித்து, பூத் கமிட்டி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி ரசிகர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்!</p>.<p><em>ராஜ், விருதுநகர்.</em><br><br>மோடி முக்கியமாகக் குறிவைப்பது மேற்கு வங்கத்தையா, கேரளாவையா, தமிழ்நாட்டையா?</p>.<p>இருக்கும் இடத்தில் சாயம் வெளுக்க வெளுக்க, புதிய இடங்களைக் குறிவைப்பார்கள். அதிலும் நீங்கள் சொன்ன வரிசையில்தான் குறிவைப்பார் என்று தோன்றுகிறது!</p>.<p><em>குண சுந்தர்ராஜன், தூத்துக்குடி. <br></em><br>“முதலமைச்சர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்” என்று சொல்கிறாரே ஜி.கே.மணி?</p>.<p>வருஷம் முடியப்போகுது, நானும் ஒரு காமெடி சொல்றேன்னு சொல்லியிருக்காரு!</p>
<p><em>ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.</em><br><br>சுங்கச்சாவடி, வாக்குச்சாவடி... என்ன வித்தியாசம்?</p>.<p>சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நம்மை மறித்து, காசு கேட்கிறார்கள். வாக்குச்சாவடிக்குப் போகும்போது நம்மை மறித்து, காசு கொடுக்கிறார்கள்!</p>.<p><em>@பெ.பச்சையப்பன், கம்பம்.</em><br><br>தற்போதைய சூழ்நிலையில் நிம்மதியாக இருப்பவர்கள் யார்?</p>.<p>சினிமாவில் மட்டும் ரஜினியைக் கொண்டாடும் அவருடைய ரசிகர்கள்.</p>.<p><em>எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.</em><br><br>“தமிழகத்தில் ஊழல் ஒழியும் வரை அரசியலில் இருப்பேன்” என்கிறாரே கமல்ஹாசன்..?</p>.<p><br>மிக நீண்டகாலம் அரசியலில் இருப்பேன் என்பதைச் சூசகமாகச் சொல்கிறார்போல.</p>.<p><em>சு.செல்வராஜ், திட்டக்குடி.</em><br><br>தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்?</p>.<p>இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ... “போகிறேன் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.</p>.<p><em>@அனன்யா, பொள்ளாச்சி.<br></em><br>“பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே தரலாம்” என்கிறாரே எடப்பாடியார்?</p>.<p>‘ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம்... உன் முதுகில் ஒரு ஓட்டை இருக்கு’ என்று. இந்தப் பழமொழிதான் இருவரைப் பற்றியுமான மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது! </p>.<p><em>@ந.சண்முகம், திருவண்ணாமலை.</em><br><br>``கோட்டையைப் பிடிப்போம்’’ என்கிறாரே குஷ்பு...?</p>.<p>‘அண்ணாத்த’ படத்துல வர்ற காட்சியா இருக்கும். பாவம்... ஷூட்டிங்கை வேற நிறுத்திட்டாங்க!</p>.<p><em>@சீனிவாசன், கண்டனூர்.</em><br><br>“ரஜினியுடன் கூட்டணி என்பது ஓ.பி.எஸ்ஸின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல” என்று சொன்ன அமைச்சர் ஜெயக்குமாரே, இன்று அ.தி.மு.க-வை ரஜினி ஆதரிப்பார் என்கிறாரே..?</p>.<p>திடீரென்று கதாபாத்திரங்கள் மாறும்போது திரைக்கதை, வசனத்தையெல்லாம் மாற்றித்தானே ஆக வேண்டும்!</p>.<p><em>@இல.கண்ணன், நங்கவள்ளி. </em><br><br>`எனக்கும் ஆன்மிகத்துக்கும் விரோதம் கிடையாது’ என்று கமல்ஹாசன் கூறுவது ஓட்டுக்காகவா கழுகாரே?</p>.<p>ஓட்டுக்காக இல்லைனு சொல்லலை. இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம்.</p>.<p><em>சிவகுருநாதன், மயிலை.</em><br><br>ரஜினி அரசியலுக்கு வராததை, அவரின் குருவான கே.பாலசந்தர் இருந்து கேட்டிருந்தால் என்ன நினைத்திருப்பார்?</p>.<p>``யானை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில்... என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பதுதானே அழகு!’’<br><br>‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு, ‘விகடன் மேடை’யில் கே.பாலசந்தர் சொன்ன பதில் இது! இதைப் படித்தாலே, அவர் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார் என்பது புரியும்!</p>.<p><em>@மு.மதிவாணன், அச்சல்வாடி போஸ்ட், அரூர்.</em></p><p>“இயேசுநாதரைச் சுட்ட கோட்சே” என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..?</p>.<p>`காந்தியைச் சுட்டது கோட்சே’ என்ற சரியான வரலாற்றுச் செய்தியை, திண்டுக்கல் சீனிவாசன் சொன்னால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். என்ன செய்வது... நமக்கு வாய்த்த அமைச்சர்கள் அப்படி!</p>.<p><em>ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.</em><ins><br></ins><br>சன் சேனல்களில், தமிழக அரசின் சாதனை விளம்பரம் வருகிறதே... இதன் மர்மம் என்ன, புரியவில்லையே கழுகாரே..?</p>.<p>வியாபாரத்தில் ஏது கட்சி பேதம்... பணம் என்று வந்த பிறகு மாமன் என்ன, மச்சான் என்ன?</p>.<p><em>எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.</em><br><br>அரிசி அட்டைதாரர்களுக்குப் பரிசாக 2,500 ருபாய் தருவது பொங்கலுக்கு மட்டும்தானா?</p>.<p>இல்லை... ஆளுங்கட்சியினர் ஐந்தாண்டுக் காலம் செய்த குளறுபடிகளுக்கும் தவறுகளுக்கும், தேர்தல் நேரத்தில் மக்கள் பொங்காமல் இருக்கவும்தான்!</p>.<p><em>@ஜீவன் சுந்தர், நாகப்பட்டினம்.</em></p><p>ரஜினியின் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழருவி மணியனா, அர்ஜுனமூர்த்தியா?</p>.<p>அர்ஜுனமூர்த்தி இந்த அசைன்மென்ட்டுக்காக டெபுடேஷனில் வந்தவர்தான். அடுத்த நாளே பிரஸ் மீட் வைத்து, ஏற்கெனவே இருந்த கட்சிக்கு சிக்னல் கொடுத்துவிட்டார். தமிழருவி மணியனுக்கும் அரசியலைவிட்டுப்போவது புதிதல்ல. ஏற்கெனவே 2016-ல் இதேபோல கடிதம் எழுதிவிட்டு விலகிப்போனவர்தான். இருவருக்குமே பாதிப்பெல்லாம் கிடையாது. சொந்தக் காசில் போஸ்டரெல்லாம் அடித்து, பூத் கமிட்டி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி ரசிகர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்!</p>.<p><em>ராஜ், விருதுநகர்.</em><br><br>மோடி முக்கியமாகக் குறிவைப்பது மேற்கு வங்கத்தையா, கேரளாவையா, தமிழ்நாட்டையா?</p>.<p>இருக்கும் இடத்தில் சாயம் வெளுக்க வெளுக்க, புதிய இடங்களைக் குறிவைப்பார்கள். அதிலும் நீங்கள் சொன்ன வரிசையில்தான் குறிவைப்பார் என்று தோன்றுகிறது!</p>.<p><em>குண சுந்தர்ராஜன், தூத்துக்குடி. <br></em><br>“முதலமைச்சர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்” என்று சொல்கிறாரே ஜி.கே.மணி?</p>.<p>வருஷம் முடியப்போகுது, நானும் ஒரு காமெடி சொல்றேன்னு சொல்லியிருக்காரு!</p>