Published:Updated:

'அண்ணாமலை வீட்டு வாடகை ரூ.3.75 லட்சம் கொடுப்பது யார்?' - சரமாரியாகக் கேள்வியெழுப்பிய செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

``அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ. 3.75 லட்சம். இந்த வாடகை யார் கொடுக்கிறார். காருக்கு டீசல் யார் கொடுக்கிறார். 4 ஆடுகள் மேய்த்தால், ரூ.3.75 லட்சம் வாடகைக்குக் குடியிருக்க முடியும் என்று சொல்ல வருகிறாரா?" - செந்தில் பாலாஜி

Published:Updated:

'அண்ணாமலை வீட்டு வாடகை ரூ.3.75 லட்சம் கொடுப்பது யார்?' - சரமாரியாகக் கேள்வியெழுப்பிய செந்தில் பாலாஜி

``அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ. 3.75 லட்சம். இந்த வாடகை யார் கொடுக்கிறார். காருக்கு டீசல் யார் கொடுக்கிறார். 4 ஆடுகள் மேய்த்தால், ரூ.3.75 லட்சம் வாடகைக்குக் குடியிருக்க முடியும் என்று சொல்ல வருகிறாரா?" - செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாமலை வெளியிட்ட தகவலில் ஏதாவது ஓர் ஆதாரமாவது இருந்ததா... மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பில் என காகிதத்தை வெளியிட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த எக்ஸ் எல் ஷீட் தயாரிக்கவா நான்கு மாதம் ஆனது. ‘எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர்’ என்று அவர் கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ. 3.75 லட்சம். இந்த வாடகை யார் கொடுக்கிறார். காருக்கு டீசல் யார் கொடுக்கிறார்.

4 ஆடுகள் மேய்த்தால், ரூ.3.75 லட்சம் வாடகைக்குக் குடியிருக்க முடியும் என்று  சொல்ல வருகிறாரா. ‘என் மனைவி என்னைவிட பல மடங்கு சம்பாதிக்கிறார்’ என்று கூறினார். அப்படியிருக்கும்போது எதற்காக அடுத்தவர்களின் பணத்தில் வாழ வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

படையப்பா படத்தில், ‘மாப்பிள்ளை அவர்தான்.’ வசனம்போல, `பயன்படுத்துவது நான். ஆனால், எல்லாம் மற்றவர்களுடையது’ எனச் சொல்ல ஓர் அரசியல்வாதியாக அசிங்கமாக இல்லையா...  கட்சி தேசியக் கட்சியாக இருக்கலாம். ஆனால், இங்கிருப்பவர் கோமாளித் தலைவர். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதையெல்லாம்விட்டு அவர்கள் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்திருக்கிறார்கள், அடுத்த தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்கப் போகிறார்கள் என பணியாற்ற வேண்டும். சாப்பாடு, சம்பளம், கார், வீடு எல்லாம் ஓசி, மண்டையில் இருக்கும் மூளையும் ஓசி என நினைக்கிறேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்த வாட்சை ஒருவர் ரூ.4.5 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அவரிடமிருந்து அதை ரூ.3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது. வாட்ச் நம்பரையும் மாற்றி மாற்றிச் சொல்கின்றார். ஒரு வெகுமதியை, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யைச் சொல்கிறார்” என்றார்.