Published:Updated:

``இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் எனப் பார்க்கிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

``நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணத்துடன் உலவிக்கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் என்று சொல்லி மக்களைக் கவரும் ஆட்சிநடத்துகிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் நிலை என்ன ஆவது என நம்மீது புழுதி வாரி தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்' - முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:

``இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் எனப் பார்க்கிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

``நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணத்துடன் உலவிக்கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் என்று சொல்லி மக்களைக் கவரும் ஆட்சிநடத்துகிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் நிலை என்ன ஆவது என நம்மீது புழுதி வாரி தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்' - முதல்வர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். பின்னர் நாகர்கோவிலிலுள்ள கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் அமைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எட்டரை அடி உயர வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும், பேராசிரியர் அன்பழகன் நினைவுதினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தி.மு.க அரசு பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகின்றன. 22 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இந்தச் சமுதாயத்துக்கும், மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. இந்தச் சூழலில்தான் இன்று குமரி மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நம் உயிரோடு கலந்திருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவச் சிலையைத் திறந்துவைக்கும் சிறப்பான வாய்ப்பு கட்சித் தலைவரான எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதை நான் நிறைவுசெய்திருக்கிறேன்.

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

கலைஞரின் மறைவுக்குப் பிறகு அவரின் சிலையை அண்ணா அறிவாலயத்தில் திறந்துவைத்தோம், அடுத்து கலைஞரின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் சிலை திறந்தோம். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் காஞ்சிபுரத்தில் திறந்தோம். தொடர்ந்து சேலம் போன்ற பல இடங்களில் சிலை திறந்துவைத்திருக்கிறோம். இன்று நாகர்கோவிலில் இருக்கும் மாவட்டக் கழக அலுவலகத்தில் சிலை திறந்துவைத்திருக்கிறோம். இந்தச் சிலை திறந்துவைக்கும் நேரத்தில் நான் உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். எந்த லட்சியத்துக்காக கலைஞர் அண்ணா வழியில் செயல்பட்டாரோ, அந்த லட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் நம் கடமையைச் செய்கிறோம். ஆகையால், நம்மை தமிழகம் மட்டுமல்ல; இந்தியத் தலைவர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல கடல் கடந்து வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளும், தமிழர்களும் நமது ஆட்சியையும், சாதனைகளையும் மனதார பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் அன்பழகன் உருவப் படத்துக்கு மலர்தூவிய முதல்வர் ஸ்டாலின்
பேராசிரியர் அன்பழகன் உருவப் படத்துக்கு மலர்தூவிய முதல்வர் ஸ்டாலின்

அதே நேரத்தில் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணத்துடன் உலவிக்கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் என்று சொல்லி மக்களைக் கவரும் ஆட்சி நடத்துகிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் நிலை என்ன ஆவது என நம்மீது புழுதி வாரித் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் எனப் பார்க்கிறார்கள். எங்காவது சாதி, மதக் கலவரத்தைத் தூண்டலாமா... மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா... எனத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நம்மீது சொல்லப்படும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பது இல்லை. யாரை வைத்து பதில் சொல்ல வேண்டுமோ அவர்களை வைத்து பதில் சொல்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் சிறப்பான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்கிறோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

தற்போது நடந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாம் நடந்த தேர்தல்களில்கூட நாம் வெற்றிபெற்றிருக்கிறோம். இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 1-ம் தேதி எனது பிறந்தநாள் விழா நந்தனத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலத் தலைவர்களை வைத்துக்கொண்டு நான் பேசும்போது, `தமிழகத்தில் நாங்கள் கூட்டணி நன்றாக வைத்திருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால் நாங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகிறோம். நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாடு முழுவதும் இருக்கும் மதச்சார்பற்ற தலைவர்கள் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால், நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நம் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பிரஸ்டீஜ் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்ல; இந்தியாவையும் காப்பாற்ற முடியும்’ என்றேன். அதே உணர்வோடு எனது கடமையை ஆற்றப்போகிறேன், ஆற்றிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் தரக்கூடிய ஒத்துழைப்புதான் காரணம். நானும் உங்கள் ஒத்துழைப்போடு பணிகளைச் செய்துவருகிறேன். கலைஞர் சிலையைத் திறந்தால் மட்டும் போதாது, அவர் எதற்காக பாடுபட்டாரோ அந்த உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும் கடமையாற்ற வேண்டும். கலைஞர் கூறிய லட்சியத்தை மனதில் வைத்து நாம் செயலாற்ற வேண்டும்" என்றார்.