Published:Updated:

பஞ்சாப்: ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது!

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா. ( ட்விட்டர் )

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா லஞ்சம் கேட்ட புகாரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

பஞ்சாப்: ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா லஞ்சம் கேட்ட புகாரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா. ( ட்விட்டர் )

பஞ்சாப் மாநிலம், பதிண்டா கிராமப்புறத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமித் ரத்தன் கோட்ஃபாட்டா. ரஷிம் கார்க் என்பவர் எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உதவியாளர். இவர் அரசு மானியமாக வழங்கும் ரூ.25 லட்சம் பணத்தை வழங்குவதற்கு, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவிலுள்ள குடா கிராமத் தலைவரின் கணவர் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 அன்று உதவியாளர் ரஷிம் கார்க், 4 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கைதுசெய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா.
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா.
ட்விட்டர்

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டாவுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில், பஞ்சாப்  விஜிலென்ஸ் பீரோவால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றக் காவலில் வைக்க, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்திருக்கிறது. 

ரஷிம் கார்க்குடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்ஃபாட்டா முன்பு மறுத்தார். பஞ்சாப்பிலுள்ள ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.