Published:Updated:

தொடரும் ஷெபாஸ் ஷெரீஃப் - இம்ரான் கான் மோதல்; பஞ்சத்தில் மக்கள்... என்னதான் நடக்கிறது பாகிஸ்தானில்?!

பாகிஸ்தான் பஞ்சம்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மறுபுறம் அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தால் பொதுமக்கள் தவித்துவருகிறார்கள். என்னதான் நடக்கிறது அந்த நாட்டில்?

Published:Updated:

தொடரும் ஷெபாஸ் ஷெரீஃப் - இம்ரான் கான் மோதல்; பஞ்சத்தில் மக்கள்... என்னதான் நடக்கிறது பாகிஸ்தானில்?!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மறுபுறம் அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தால் பொதுமக்கள் தவித்துவருகிறார்கள். என்னதான் நடக்கிறது அந்த நாட்டில்?

பாகிஸ்தான் பஞ்சம்

பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் அவருக்குப் பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து அவர் பாகிஸ்தானின் பிரதமரானார். நாளடைவில் சீனாவிடம் பெற்ற அதீத கடன் உள்ளிட்டவற்றால் அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்து, பொதுமக்கள் பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கினர். இது தவிர இம்ரான் கான், அந்த நாட்டின் ராணுவத்தோடும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

சீனா
சீனா

இதன் காரணமாக அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதைத் தங்களுக்குச் சாதகமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கின. இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் `பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்)' கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

தேர்தல் முடிவில் அவரே வெற்றியும் பெற்றார். முன்னதாக 2018 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டார். 82 இடங்களில் மட்டுமே வெற்றி கிட்டியதால், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போது ஆட்சியைக் கைப்பற்றிய இம்ரான் கானுக்கும், ஷெபாஷுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

அவர்மீது பல்வேறு மோசடி வழக்குகள் போடப்பட்டன. அவருக்குச் சொந்தமான பல சொத்துகளும் முடக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு பண மோசடி வழக்கு ஒன்றில் கைதும் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட எழு மாதகால சிறைவாசத்துக்குப் பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார் ஷெபாஸ்.

வெளியே வந்த பின்னர், தன்னைச் சிறையிலடைத்த இம்ரான் கானை பழி தீர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் இறங்கினார். இம்ரானுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தார். பின்னர் ஆட்சிக்கு வந்ததும் இம்ரானுக்குக் கூடுதல் நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

நீதிமன்றம்
நீதிமன்றம்

குறிப்பாக, இம்ரான் பிரதமராக இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பாதுகாத்துவரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப்பொருள்களை மலிவு விலையில் வாங்கி, சட்டவிரோதமாக விற்றதாக வழக்கு பதியப்பட்டது.

மேலும், தனது கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் கில் என்பவரைக் கைதுசெய்ய அனுமதி அளித்த பெண் நீதிபதி, காவல்துறை உயரதிகாரிகளும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இதையடுத்து பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதியப்பட்டது.

பாகிஸ்தான் உணவுப் பஞ்சம்
பாகிஸ்தான் உணவுப் பஞ்சம்

இவை இரண்டும் இம்ரான் கானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தின. குறிப்பாக, பரிசுப்பொருள் முறைகேடு வழக்கு பதியப்பட்டது. இதில் அவரைக் கைதுசெய்ய சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைதுசெய்ய போலீஸார் முயன்றனர். இதற்கு இம்ரானின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதுசெய்ய சென்ற போலீஸார்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 59 காவலர்கள் காயமடைந்தனர். இம்ரானின் வழக்கறிஞர், "பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் இம்ரானைக் கைதுசெய்து, வரும் 18-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றுதான் காவல்துறைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பாகிஸ்தான் வறுமை
பாகிஸ்தான் வறுமை

அதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு போலீஸார் அவரைக் கைதுசெய்ய அவசியமில்லை. மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். மேலும், வரும் 18-ம் தேதி நீதிமன்றத்தில் இம்ரான் நேரில் ஆஜராவார்" என்று தெரிவித்தார். இதையடுத்து கைது நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு ஷெபாஸ் ஷெரீஃப், இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் நடவடிக்கையில்தான் தீவிரம் காட்டிவருகிறார்கள். அதீத கடனால் பஞ்சத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் துயரமான ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.