Published:Updated:

கடைசி பெஞ்ச் விஜயபாஸ்கர்; முதல் பெஞ்ச் மா.சு... வாத்தி துரைமுருகன் | `கலகல’ சட்டசபை ஹைலைட்ஸ்

சட்டசபை

சட்டசபையில் நேற்று (18-04-2023) மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அதில் நடந்த சுவாரஸ்ய விவாதங்களின் தொகுப்பு!

Published:Updated:

கடைசி பெஞ்ச் விஜயபாஸ்கர்; முதல் பெஞ்ச் மா.சு... வாத்தி துரைமுருகன் | `கலகல’ சட்டசபை ஹைலைட்ஸ்

சட்டசபையில் நேற்று (18-04-2023) மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அதில் நடந்த சுவாரஸ்ய விவாதங்களின் தொகுப்பு!

சட்டசபை

சட்டசபையில் நேற்று (18.4.2023) மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கை  விவாதம் நடந்தது. இதில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடைசி பெஞ்ச் மாணவர்போல விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு மா.சுப்பிரமணியன் முதல் பெஞ்ச் மாணவர்போல  `ஆன் தி ஸ்பாட்டில்’ பதில் கூறிவந்தார். மேலும், மற்ற உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்களின், சபாநாயகரின் கவுன்ட்டர்களும் இருந்தன.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

`என்னது, அமைச்சர் நத்தம் விசுவநாதனா?!’

கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினரான நத்தம் விசுவநாதனைப் பேச அழைத்த சபாநாயகர், “மாண்புமிகு அமைச்சர் நத்தம் விசுவநாதன்” என்று குறிப்பிட்டார்.  பிறகுதான் மாற்றிக் கூறியிருப்பதை உணர்ந்து ``சாரி உறுப்பினரை அமைச்சர் எனக் கூறிவிட்டேன்’’ என்றார்.

இளவரசி, சிற்றரசி இரண்டு பேரையும் பார்த்துக்கோங்க!

அதிமுக உறுப்பினர் நத்தம் விசுவநாதன் சிறுமலையைச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, சிறுமலையை, `மலைகளின் சிற்றரசி’ என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

உடனே எழுந்த  தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, “மலைகளின் அரசி ஊட்டி தெரியும், மலைகளின் இளவரசி கொடைக்கானல்... தெரியும்.  தற்போது நத்தம் அண்ணன் புதிதாக சிற்றரசி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். இளவரசி , சிற்றரசி இரண்டுமே அவர் ஊரில்தான் வருகின்றன. எனவே இளவரசி, சிற்றரசியைக் கவனித்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியது அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.

அதன் பிறகு எழுந்த அமைச்சர் துரைமுருகன், ``சிற்றரசி சிறுமலை என்றால் ஏலகிரி என்ன?” என அவர் கேட்ட தொனி மீண்டும்  அவையில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தது.

கடைசி பெஞ்ச் உறுப்பினர்கள்! 

மானியக் கோரிக்கை விவாதத்தில்  பேசத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ``எங்கள் கடைசி பெஞ்ச்சை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்கும் செல்லூர் ராஜூ அவர்களுக்கும், முன்வரிசையில் அமர்ந்து  எங்களுக்குப் பாதுகாவலராக இருக்கும் நத்தம் விசுவநாதன் அவர்களுக்கும் வணக்கம்” எனத் தொடங்கினார் . உடனே அவைத்தலைவரோ, ``ஓ... பாதுகாவலராக நத்தம் விசுவநாதனை வைத்திருக்கிறீர்களா..?” என்று கூறியதைக் கண்டு விஜயபாஸ்கரே குலுங்கிச் சிரித்தார்.

சட்டப்பேரவையில் நத்தம் விசுவநாதன்
சட்டப்பேரவையில் நத்தம் விசுவநாதன்

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுரையின்போது, “மாண்புமிகு முதலமைச்சர் சொல்வதை யாரும் கேட்பதில்லை. அவர் தன்னைப் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவர் சொல்வதைக் கேட்டு, நான் முதல்வரைப் புகழ்ந்து பேசப்போவதில்லை.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

ஆனால், அவர் பணி என் மனதை உலுக்கியிருக்கிறது. அந்தச் சம்பவங்களை நினைவுகூர்கிறேன்” என மூன்று சம்பவங்களைக் (உடல்நலக் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு அரசு சார்பாக சிகிச்சை வழங்கப்பட்டது உள்ளிட்ட மூன்று சம்பவங்கள்) குறிப்பிட்டார். நீண்ட நேரம் அவர் பேசியது, `இதற்கு அவர் புகழ்ந்தே பேசியிருக்கலாம்’ என்றே பலருக்கும் தோன்றியிருக்கலாம்!

`மருந்து சரியான மருந்தா?’

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், “யாருக்கும் வலிக்காமல் ஊசி போட வேண்டும் என்பதே என் ஆசை. ஆனாலும் சிலநேரம் அது வலிக்கும்போது ஆளுங்கட்சியை ரியாக்‌ஷன் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவைத்தலைவரின் கடமை” என்றார். அதற்கு அவைத்தலைவர் அப்பாவு, “சரியான மருந்தை நீங்கள் செலுத்த வேண்டும்” என்று டைமிங்கில் அடித்தார்.

தொடர்ந்து விஜயபாஸ்கர் பேசுகையில், “சிலநேரம் கடுமையான வார்த்தைகள் வரும்போது அதற்கு அவைத்தலைவர் ஆளுங்கட்சிக்கு ஒத்தடம் கொடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்” எனக் கிண்டலடித்தார். இதற்கு அவைத்தலைவரோ, “நீங்க கடுமையான வார்த்தையோ, கடுமையான ஊசியும் போட மாட்டீங்க. அப்படியே டாக்டர்போல பேசி முடிச்சுடுங்க” என்றார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

மானியக் கோரிக்கை விவாதத்தில் விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் வழங்கிவந்தார். அப்போது எழுந்த  அவை முன்னவர் துரைமுருகன், "பொதுவாக, பதிலுரையில்தான் கேள்விகளுக்கான பதில் வழங்கப்படும். ஆனால் நீங்க இருக்கறதில்லை... அதனால இப்போவே சொல்றாரு” என்றார். அதற்கு அப்பாவு, ``இல்லை. இன்னைக்குப் போக மாட்டாங்க. எதிர்க்கட்சித் தலைவர் உறுதி கொடுத்துட்டாரு” என்றது எதிர்க்கட்சியினரையும் சிரிக்கவைத்தது.

பச்சை கலர் இப்போது மஞ்ச கலர்!

குழந்தை பெற்ற பெண்களுக்கு `அம்மா பெட்டகம்’ வழங்கப்படுவது குறித்துப் பேசிய விஜயபாஸ்கர், “ பிறந்த குழந்தை முதலில் `அம்மா...’ என்றுதானே அழைக்கும்... அதை மனதில் வைத்துத்தான் `அம்மா பரிசுப் பெட்டகம்’ எனப் பெயர் சூட்டினோம். அப்போது பச்சை நிறத்தில் இருந்தது. இப்போது மஞ்சள் நிறத்துக்கு  மாறியிருக்கிறது” என்று கூறியதும் அவையில் சிரிப்பலை.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தொடர்ந்து விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துவந்தார். அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், ”இப்போது மணி 1:15 ஆகிறது. இன்னும் ஏழு பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வேண்டும். மாலையில் மற்றுமொரு துறை இருக்கிறது. விஜயபாஸ்கருக்கும் இதுல அனுபவம் இருக்கு. அமைச்சரும் அதற்கு பதிலளித்துவருகிறார். அவரு (விஜயபாஸ்கர்) வேற எல்லாத்தையும் ’நம்பற மாதிரியே பேசுவாரு... இவங்க எப்போ முடிச்சு எப்போ சாப்பிடுறது?” என்றார். அதற்கு விஜயபாஸ்கரோ, “உள்ளதைப் பேசினால் உண்மையாகவும், நம்பும் வகையிலும்தான் இருக்கும்’’ என ரிப்ளை தந்தார்.