Published:Updated:

மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிய முத்த வீடியோ - தாக்கரே முகநூலை நிர்வகித்துவந்தவர் கைது!

உத்தவ், ஷிண்டே

சிவசேனா பெண் நிர்வாகிக்கு எம்.எல்.ஏ முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ தொடர்பாக ஆதித்ய தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிய முத்த வீடியோ - தாக்கரே முகநூலை நிர்வகித்துவந்தவர் கைது!

சிவசேனா பெண் நிர்வாகிக்கு எம்.எல்.ஏ முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ தொடர்பாக ஆதித்ய தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

உத்தவ், ஷிண்டே

மும்பை தகிசர் பகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் சுர்வே, கட்சியின் பெண் நிர்வாகி சீத்தல் மாத்ரேயிக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த வீடியோ போலியானது என்றும், அதை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா நிர்வாகிகள்தான் போலியாகத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர் என்று சீத்தல் மாத்ரே தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த வீடியோ உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்துதான் வந்தது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்தச் சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக ஏற்கெனவே அசோக் மிஸ்ரா, மனாஸ் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிய முத்த வீடியோ - தாக்கரே முகநூலை நிர்வகித்துவந்தவர் கைது!

அவர்களோடு சேர்த்து விநாயக் தர்வே என்பவரையும் கைதுசெய்திருக்கின்றனர். விநாயக், ஆதித்ய தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர். அதோடு தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்ல ஃபேஸ்புக் பக்கத்தையும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஃபேஸ்புக் பக்கத்தையும் விநாயக்தான் கையாண்டுவருகிறார். மேலும், யுவசேனாவைச் சேர்ந்த சாய்நாத், ரவீந்திர செளத்ரி என்பவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்தப் பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

போலி வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளும்கட்சியினர் கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சர் சம்புராஜ் தேசாய் அவையில் அறிவித்தார். இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அஜித்பவார், ``திட்டமிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதால், இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் களங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவருகின்றனர். உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளைத் தங்களது பக்கம் இழுக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சியினர் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுவருவதாக உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.