தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளைத் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கையையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாகச் செயல்பட ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா உள்ளிட்டவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழகச் சட்டமன்றத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணை வேந்தர் நியமன பிரச்னை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளினால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை" என்று முடிவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.