இன்று (21.07.2021) பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகைக்குப் பிறகு நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ம.ஜ.க. பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம்.

" கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கொரோனா தொற்றுப் பரவலால் அரசின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை. இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதாலும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடும் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் இன்றைய நாளின் முக்கிய பிரார்த்தனை. மேலும், இத்திருநாளையொட்டி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்.எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

அதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மற்றும் 60 வயதைக் கடந்த கைதிகளுக்கும், நோயாளி கைதிகளுக்கும், அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் முன்புவரை வீடுகளிலேயே தங்கியிருக்க பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது இதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.