<blockquote>பா.ஜ.க தலைவருடன் சந்திப்பு, கட்சிப் பதவி பறிப்பு, பா.ஜ.க-வில் ஐக்கியம் என தி.மு.க-வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்த நாள்களில் அநேக ‘சம்பவங்கள்’ அரங்கேறிவிட்டன. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.</blockquote>.<p>“எம்.பி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக... குறிப்பாக, அந்தியூர் செல்வராஜுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதால்தான் நீங்கள் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டதாக உங்களை விமர்சிக்கிறார்களே?’’</p>.<p>“கலைஞர் அழைத்த ஒரே காரணத்துக்காக, இருந்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு தி.மு.க-வுக்கு வந்தவன் நான். பதவிக்காக அலைகிறவன் இல்லை. என் சமூகத்திலிருந்து ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகியிருக்கிறார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கிறேன். அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விளக்கம்கூடக் கேட்காமல் என்னை நீக்கிவிட்டார்கள். எம்.பி பதவி கேட்டதற்கும், நான் பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தவிர, அந்தியூர் செல்வராஜுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்தற்கு வாழ்த்து தெரிவித்தவன் நான். எனக்குப் போட்டியாக அவரைக் கருதவில்லை. காரணம், அவர் எனக்குச் சமமானவர் கிடையாது.’’</p>.<p>“அந்தியூர் செல்வராஜ், ‘வி.பி.துரைசாமியை கருணாநிதியிடம் அழைத்துச் சென்றதே நான்தான்’ என்று கூறியிருக்கிறாரே?’’</p>.<p>“அவர் என்னைத் தலைவரிடம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. 1984-ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் சீட்டுக் கேட்டு வீரபாண்டி ஆறுமுகம், பட்டணம்.தா.முத்து ஆகியோருடன் நான் முதன்முதலில் தலைவரைச் சந்தித்தேன். 1984-லிலேயே ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நான். 1989-ல் துணை சபாநாயகராக இருந்தபோது, அப்போதைய மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தியின் கூட்டத்தில்தான் நான் முதன்முதலில் செல்வராஜைப் பார்த்தேன். எனவே, அவர் சொல்வது உண்மை இல்லை.’’</p>.<p>“தி.மு.க., அது உருவான நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகவும், கட்சியில் சாதியப் பாகுபாடுகள் இருப்பதாகவும் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’</p>.<p>“மற்ற துணைப் பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, நேரு போன்றவர்களை நடத்தியதைப்போல்தான் என்னை நடத்தினார்களா, வீட்டில் முடிவெடுக்கும் கூட்டங்களுக்கு என்னை அழைத்தார்களா என்பதையெல்லாம் நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். மனம் நொந்துதான் நான் தி.மு.க-விலிருந்து விலகிவிட்டேன்.’’</p>.<p>“அது மட்டும்தான் காரணமா?’’</p>.<p>“அதுமட்டுமல்ல. எ.வ.வேலு என்ன நினைக்கிறாரோ அதுதான் தி.மு.க-வில் நடக்கிறது. அவர் கைகாட்டுபவருக்குத்தான் பதவி கிடைக்கும். அவரை அனைவரும் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். நான் அவரிடம் போய் நின்றதில்லை. அதற்கு அவசியமும் கிடையாது. அதனாலேயே நான் ஒதுக்கப்பட்டேன். அந்தியூர் செல்வராஜ் அப்படியல்ல; கனிவானவர். நல்லவர். வேலுவின் நம்பிக்கைக்குரியவர். அவர் சொல்படி கேட்பவர். அதனால்தான் அவருக்கு அந்தப் பதவி கிடைத்திருக்கிறது.’’</p>.<p>“பா.ஜ.க-வில் நீங்கள் சேர்வதற்கு காரணம் என்ன?”</p>.<p>“பா.ஜ.க தொடர்பான எந்தக் கேள்விகளுக்குமே இப்போது பதிலளிக்க முடியாது.”</p>
<blockquote>பா.ஜ.க தலைவருடன் சந்திப்பு, கட்சிப் பதவி பறிப்பு, பா.ஜ.க-வில் ஐக்கியம் என தி.மு.க-வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்த நாள்களில் அநேக ‘சம்பவங்கள்’ அரங்கேறிவிட்டன. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.</blockquote>.<p>“எம்.பி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக... குறிப்பாக, அந்தியூர் செல்வராஜுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதால்தான் நீங்கள் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டதாக உங்களை விமர்சிக்கிறார்களே?’’</p>.<p>“கலைஞர் அழைத்த ஒரே காரணத்துக்காக, இருந்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு தி.மு.க-வுக்கு வந்தவன் நான். பதவிக்காக அலைகிறவன் இல்லை. என் சமூகத்திலிருந்து ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகியிருக்கிறார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கிறேன். அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விளக்கம்கூடக் கேட்காமல் என்னை நீக்கிவிட்டார்கள். எம்.பி பதவி கேட்டதற்கும், நான் பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தவிர, அந்தியூர் செல்வராஜுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்தற்கு வாழ்த்து தெரிவித்தவன் நான். எனக்குப் போட்டியாக அவரைக் கருதவில்லை. காரணம், அவர் எனக்குச் சமமானவர் கிடையாது.’’</p>.<p>“அந்தியூர் செல்வராஜ், ‘வி.பி.துரைசாமியை கருணாநிதியிடம் அழைத்துச் சென்றதே நான்தான்’ என்று கூறியிருக்கிறாரே?’’</p>.<p>“அவர் என்னைத் தலைவரிடம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. 1984-ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் சீட்டுக் கேட்டு வீரபாண்டி ஆறுமுகம், பட்டணம்.தா.முத்து ஆகியோருடன் நான் முதன்முதலில் தலைவரைச் சந்தித்தேன். 1984-லிலேயே ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நான். 1989-ல் துணை சபாநாயகராக இருந்தபோது, அப்போதைய மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தியின் கூட்டத்தில்தான் நான் முதன்முதலில் செல்வராஜைப் பார்த்தேன். எனவே, அவர் சொல்வது உண்மை இல்லை.’’</p>.<p>“தி.மு.க., அது உருவான நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகவும், கட்சியில் சாதியப் பாகுபாடுகள் இருப்பதாகவும் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’</p>.<p>“மற்ற துணைப் பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, நேரு போன்றவர்களை நடத்தியதைப்போல்தான் என்னை நடத்தினார்களா, வீட்டில் முடிவெடுக்கும் கூட்டங்களுக்கு என்னை அழைத்தார்களா என்பதையெல்லாம் நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். மனம் நொந்துதான் நான் தி.மு.க-விலிருந்து விலகிவிட்டேன்.’’</p>.<p>“அது மட்டும்தான் காரணமா?’’</p>.<p>“அதுமட்டுமல்ல. எ.வ.வேலு என்ன நினைக்கிறாரோ அதுதான் தி.மு.க-வில் நடக்கிறது. அவர் கைகாட்டுபவருக்குத்தான் பதவி கிடைக்கும். அவரை அனைவரும் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். நான் அவரிடம் போய் நின்றதில்லை. அதற்கு அவசியமும் கிடையாது. அதனாலேயே நான் ஒதுக்கப்பட்டேன். அந்தியூர் செல்வராஜ் அப்படியல்ல; கனிவானவர். நல்லவர். வேலுவின் நம்பிக்கைக்குரியவர். அவர் சொல்படி கேட்பவர். அதனால்தான் அவருக்கு அந்தப் பதவி கிடைத்திருக்கிறது.’’</p>.<p>“பா.ஜ.க-வில் நீங்கள் சேர்வதற்கு காரணம் என்ன?”</p>.<p>“பா.ஜ.க தொடர்பான எந்தக் கேள்விகளுக்குமே இப்போது பதிலளிக்க முடியாது.”</p>