Published:Updated:

``காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார்!" - செல்லூர் ராஜு

செல்லூர் ராஜூ
News
செல்லூர் ராஜூ

``காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார்." - செல்லூர் ராஜு

Published:Updated:

``காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார்!" - செல்லூர் ராஜு

``காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார்." - செல்லூர் ராஜு

செல்லூர் ராஜூ
News
செல்லூர் ராஜூ

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மதுரையில் எம்.ஜி.ஆர் சிலையில் காவிக்கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழிபிறவி என்பேன்" என்றவரிடம்... தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

கேள்வி: கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு மேற்கொள்ளும் பணிகள் குறித்து உங்கள் பார்வை?

பதில்: ``எங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க அரசு குடியேறியுள்ளது. கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை ஏற்கெனவே வைத்துள்ள உபகரணங்கள் படுக்கை வசதி உள்ளிட்டவற்றை வைத்து முறையாக கவனித்தால் போதும்."

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

கேள்வி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா?

பதில்: ``அது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் இது குறித்து தெரியவரும். சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லையென்றால் பங்கேற்பார்."

கேள்வி: மதுரைக்கு முல்லைப்பெரியாறு குடிநீர் கொண்டுவரும் திட்டத்தில் தாமதம் ஏற்படுகிறதா?

பதில்: இந்தத் திட்டப் பணி 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பணிகள் நிறைவடையவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி கடும் போராட்டம் நடத்துவோம்."

கேள்வி: அ.தி.மு.க குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன?

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

பதில்: ``அ.தி.மு.க தொண்டர்களை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அ.தி.மு.க தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்."

கேள்வி: தற்போதைய ஆட்சியில் என்ன நடக்கிறது, மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள்?

பதில்: ``கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசினார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி பெயரை வைத்து வருகிறார். உதயநிதி நாட்டுக்கு என்ன செய்தார்? நயன்தாராவை கட்டியணைத்து, ஹன்சிகாவை காதலிப்பதை மட்டும்தான் செய்தார்."