Published:Updated:

குமரி: செயலிழந்த கால்கள்; 80 வயது தாயைத் தனியாகத் தவிக்கவிட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ்!

மூதாடியைத் தூக்கிவரும் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ்
News
மூதாடியைத் தூக்கிவரும் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெருவில் கிடக்கும் பேப்பர் மற்றும் பழைய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் சாப்பிட்டுவந்திருக்கிறார்.

Published:Updated:

குமரி: செயலிழந்த கால்கள்; 80 வயது தாயைத் தனியாகத் தவிக்கவிட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ்!

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெருவில் கிடக்கும் பேப்பர் மற்றும் பழைய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் சாப்பிட்டுவந்திருக்கிறார்.

மூதாடியைத் தூக்கிவரும் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ்
News
மூதாடியைத் தூக்கிவரும் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ்

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூளங்களுக்கு இடையே 80-வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்குப் போராடியபடி கிடந்திருக்கிறார். இது குறித்து திங்கள்நகர் பேரூராட்சித் தலைவர் சுமனுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர் காங்கிரஸ் நிர்வாகியான லாரன்ஸ் மற்றும் இளைஞர்களுடன் அங்கு சென்று மூதாட்டியை மீட்டு முதலுதவி செய்திருக்கின்றார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததுடன் இரணியல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இரணியல் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த மூதாட்டியின் பெயர் கித்தேரி அம்மாள் என்பதும், 34-வருடங்களுக்கு முன்பு கணவன் செல்லையன் இறந்திருப்பதும் தெரியவந்தது. கணவன் இறந்த பிறகு வீட்டு வேலைகளுக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தன் ஒரே மகன் செல்வராஜைப் படிக்கவைத்ததாகவும், பின்னர் மகனுக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் மூதாட்டி தெரிவித்தார்.

வீட்டில் குப்பையில் கிடந்த மூதாட்டி
வீட்டில் குப்பையில் கிடந்த மூதாட்டி

மூதாட்டியின் மகன் செல்வராஜ் இப்போது தனியாக புதிய பங்களா வீட்டில் வசித்துவரும் நிலையில், பழைய வீட்டுப் பகுதியிலுள்ள ஐந்துக்கு ஏழு என்ற அளவில் உள்ள சிறிய அறையில் மூதாட்டி வசித்துவந்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தெருவில் கிடக்கும் பேப்பர் மற்றும் பழைய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் சாப்பிட்டு வந்திருக்கிறார். முதுமை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அவரின் கால்கள் செயலிழந்த நிலையில் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் மூதாட்டி. இதனால் மூதாட்டி கித்தேரி அம்மாளுக்குப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்துவந்திருக்கின்றனர்.

தொடர்ந்து உடல்நிலை மோசமான நிலையில் தான் சேகரித்த பழைய பேப்பர் ஆகியவை குவித்துவைத்திருந்த குப்பைமேட்டில் தனியாகக் கிடந்திருக்கிறார் கித்தேரி அம்மாள். அவரின் மகனுக்குத் தகவல் தெரிந்தும் வந்து கவனிக்காததால் திங்கள்நகர் பஞ்சாயத்துத் தலைவர் சுமனுக்கு சிலர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்தே அவர் மீட்கப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மூதாட்டியின் மகனிடம் போலீஸ் விசாரணை
மூதாட்டியின் மகனிடம் போலீஸ் விசாரணை

இது குறித்து மூதாட்டியின் மகன் செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் சில பிரச்னைகள் நடந்ததாகவும், தாய் தனியாக வேலை செய்துவந்ததால், அவரை விட்டுவிட்டு வந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்தார். தாயைப் பார்க்கும் கடமை மகனுக்கு உண்டு எனக் கூறிய போலீஸார், மூதாட்டியை கவனிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் போலீஸ் தன்னைத் தாக்கியதாக குளச்சல் அரசு மருத்துவமனையில் செல்வராஜ் அட்மிட் ஆகியிருக்கிறார்.