Published:Updated:

ஈரோடு கிழக்கு: ``மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது; அதிமுக வெல்லும்” - செங்கோட்டையன் நம்பிக்கை

வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கல்.
News
வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கல்.

``இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மனம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் மக்கள் நினைத்த எந்தப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை” - செங்கோட்டையன்

Published:Updated:

ஈரோடு கிழக்கு: ``மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது; அதிமுக வெல்லும்” - செங்கோட்டையன் நம்பிக்கை

``இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மனம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் மக்கள் நினைத்த எந்தப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை” - செங்கோட்டையன்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கல்.
News
வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கல்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட ஈரோடு, பெரியார் நகரில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் முகவர்களை, முன்னாள் அமைச்சர்களான கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோருக்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் அறிமுகம் செய்துவைத்தார்.
முன்னதாக பெரியார் நகர் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், சுமார் 100 பெண்கள் ஆரத்தி எடுத்தும் முன்னாள் அமைச்சர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.  

கோபி எம்.எல்.ஏ-வும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
``தமிழ்நாட்டில் முன்பு ஆட்சிபுரிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. உள்ளாட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, கல்வி என அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஆட்சியை நிறைவேற்றித் தந்தார். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மனம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், மக்கள் நினைத்த எந்தப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட `தாலிக்கு தங்கம் வழங்குவது’, `ஸ்கூட்டிக்கு மானியம்’, `இலவச மடிக்கணினி’, `மிக்சி- கிரைண்டர்’, `ஆடு- மாடுகள் வழங்கும் திட்டம்’ என பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

ஆரத்தி எடுக்க காத்திருக்கும் பெண்கள்
ஆரத்தி எடுக்க காத்திருக்கும் பெண்கள்

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாகக் கூறிய திட்டம், எரிவாயுவுக்கு ரூ. 100 மானியம் வழங்குவதாகக் கூறியது, தாலிக்குத் தங்கம் போன்ற எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. முதியோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 3,00,000 முதியோருக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகு எந்த மக்கள் நலத்திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்பதால், மக்கள் மத்தியில் தி.மு.க ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அமைதியான முறையில் நேர்மையான வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

விரைவில் அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அதன் பிறகு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் அ.தி.மு.க தேர்தல் பணியாற்றி வெற்றிபெறுவோம்.
சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்தான் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. ஆச்சர்யமூட்டும் வகையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது. மனுத் தாக்கல் முடிந்த பிறகு அதை நீங்களே (பத்திரிகையாளர்கள்) புரிந்துகொள்வீர்கள்” என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், `தேர்தலின்போது மெகா கூட்டணி அமைப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதுவரை த.மா.கா தவிர வேறு எந்தக் கட்சியும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே’ என்றும், `அ.தி.மு.க நான்காக பிளவுபட்டிருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா ஆகியோர் கூறியிருக்கின்றனர். ஓ.பி.எஸ்.,  இ.பி.எஸ் பிரிவாக பிரிந்திருப்பதால் இரட்டை இலைச் சின்னம் முடங்கும் என்று  டிடிவி.தினகரன் கூறுகிறார். ஜான் பாண்டியன் இரட்டை இலையுள்ள கட்சிக்குத்தான்  ஆதரவு என்கிறார். இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், "பொறுத்திருந்து பாருங்கள், சின்னம் எங்களுக்குத்தான்" என்று முடித்துக்கொண்டார்.