ஒற்றை நபரின் அலட்சிய செயல்பாட்டால், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் கொரோனா அச்சத்தால் முடங்கிப்போயுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பின்னணிப் பாடகி கனிகா கபூர். இவரின் அலட்சியத்தால்தான் முக்கியப் பிரபலங்கள் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் இருக்கின்றனர். பிப்ரவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றிற்காக லண்டன் சென்றவர், கடந்த 9-ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பினார். தற்போது, அவர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில், இடைப்பட்ட சில நாள்களில் இவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
கனிகா கபூரின் லண்டன் பயணம் முதல் இப்போதைய கலவர நிலவரம் வரை என்ன நடந்தது... ஒரு டைம்லைன் இங்கே!
ஐகான் மேல் க்ளிக் செய்தால், அச்செய்தி தொடர்பான விவரம் தெரியும்!