Published:Updated:

குமரி: மீனுக்கு வலை விரித்த 2 சிறுவர்கள்... குளத்தில் மூழ்கி பலியான சோகம்

பலி
News
பலி

மீன்பிடிக்க சிறு வலையுடன் சிறுவர்கள் ஆல்பன் ராய், சாம் கேர்சன் ஆகியோர் குளத்தில் இறங்கியுள்ளனர்.

Published:Updated:

குமரி: மீனுக்கு வலை விரித்த 2 சிறுவர்கள்... குளத்தில் மூழ்கி பலியான சோகம்

மீன்பிடிக்க சிறு வலையுடன் சிறுவர்கள் ஆல்பன் ராய், சாம் கேர்சன் ஆகியோர் குளத்தில் இறங்கியுள்ளனர்.

பலி
News
பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஆல்பன் ராய் (10), சாம் கேர்சன் (9) இமானுவேல். இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இந்த மூன்று சிறுவர்களும் கீழ ஆசாரிப்பள்ளம் தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க சிறிய வலையுடன் சென்றுள்ளனர். குளத்தில் இறங்கி மீன்பிடிக்க சிறு வலையுடன் சிறுவர்கள் ஆல்பன் ராய், சாம் கேர்சன் ஆகியோர் குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தபடி நீரில் மூழ்கினர். இதைக் கண்ட இமானுவேல் கூச்சலிட்டு அந்தப் பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்திருக்கிறான்.

சிறுவன் ஆல்பன் ராய்
சிறுவன் ஆல்பன் ராய்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிலர் குளத்தில் இறங்கித் தேடினர். குளத்தின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. சிறுவர்களின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று இரண்டு சிறுவர்களின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குளத்தில் மீன் பிடிக்க வலைவிரித்த சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.