Published:Updated:

தீண்டாமை கிராமங்கள் அதிகமுள்ள பட்டியல்; மதுரைக்கு முதல் இடம் - அதிர்ச்சியளிக்கும் ஆர்டிஐ ரிப்போர்ட்

சாதி
News
சாதி

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு நடத்திய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மொத்தம் 212. அவற்றில் தீண்டாமை வன்கொடுமை உள்ள கிராமங்களில் முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தியுள்ளனர்.

Published:Updated:

தீண்டாமை கிராமங்கள் அதிகமுள்ள பட்டியல்; மதுரைக்கு முதல் இடம் - அதிர்ச்சியளிக்கும் ஆர்டிஐ ரிப்போர்ட்

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு நடத்திய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மொத்தம் 212. அவற்றில் தீண்டாமை வன்கொடுமை உள்ள கிராமங்களில் முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தியுள்ளனர்.

சாதி
News
சாதி

தீண்டாமை கடைப்பிடிக்காத, மத நல்லிணக்க ஊராட்சியாக மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 லட்ச ரூபாய் பரிசு கலெக்டரால் சமீபத்தில் வழங்கப்பட்டது.

விருதுபெற்ற கொடிக்குளம் ஊராட்சி
விருதுபெற்ற கொடிக்குளம் ஊராட்சி

மதுரை மாவட்டத்துக்கு கொடிக்குளம் ஊராட்சி பெருமையைத் தேடித்தந்த நிலையில், 43 கிராமங்கள் தீண்டாமையை கடைப்பிடித்து தமிழக அளவில் மதுரை மாவட்டத்தை முதல் இடத்தில் நிறுத்திய அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த ஆதாரபூர்வமான விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருக்கும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக்கிடம் பேசினேன். "எத்தனை சட்டங்கள் கொண்டுவந்தாலும், திட்டங்கள் போட்டாலும் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள், சாதியப் பாகுபாடுகள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக்
சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக்

கடந்த 2021-ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி-யின் அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமைப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதாக 445 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சாதிக் கொடுமை
சாதிக் கொடுமை

இதில் அதிகபட்சமாக 43 தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களுடன் மதுரை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 25 கிராமங்களுடன் விழுப்புரம் இரண்டாம் இடத்திலும், 24 கிராமங்களுடன் திருநெல்வேலி மூன்றாம் இடத்திலும்,19 கிராமங்களுடன் வேலூர் நான்காவது இடத்திலும், 18 கிராமங்களுடன் திருவண்ணாமலை
ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதன் கீழ் பல மாவட்டங்கள் வரிசையாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவற்றில் ஒரே ஒரு தீண்டாமை கிராமத்துடன் சென்னையும் கடைசியில் இடம் பிடித்துள்ளது.

இது ஒருபக்கமென்றால் தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டவை என 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

`தீண்டாமை கிராமங்கள்’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களில், தீண்டாமையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருவதாகவும், 2021-ல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், தீண்டாமை கிராமங்களில் 6-வது இடத்திலுள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாதி
சாதி

அதே காலகட்டத்தில் முதல் இடத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் மிகக் குறைவாக 21 விழிப்புணர்வுக் கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தமிழகம் முழுவதும் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு நடத்திய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மொத்தம் 212. அவற்றில் தீண்டாமை வன்கொடுமை உள்ள கிராமங்களில் முதல் இடத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடத்தியுள்ளனர்.

இதே காலகட்டத்தில் ஆறாவது இடத்திலுள்ள திருச்சி மாவட்டத்தில் 28 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தேசிய குற்ற ஆவண காப்பக (NCRB) அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் (SC/ST Atrocity) கடந்த 2009-லிருந்து 2018 வரை 10 ஆண்டுகளில் 27.3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என எச்சரிக்கைவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை கிராமங்களைக் கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை கவலை அளிக்கிறது.

சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக்
சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக்

தீண்டாமை கிராமங்கள் இல்லாத சூழல் ஏற்படவும், வன்கொடுமை வழக்குகள் குறையவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏ.டி.ஜி.பி தலைமையிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு, சமூகநலத்துறை இணைந்து தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள முதலிடத்திலுள்ள 10 மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதோடு, சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

தீண்டாமை வன்கொடுமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 445 கிராமங்களை மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறான மாடல் கிராமங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகை அளித்து கிராம வளர்ச்சிக்கு உதவ வேண்டும்" என்றார்.