Published:Updated:

காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்கு ‘வசூல்’ நடப்பதாகப் புகார் - எச்சரிக்கை விடுத்த வேலூர் ஆட்சியர்!

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
News
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்கு பணியாளர்களைத் தேர்வுசெய்வதில், வசூல் வேட்டை நடப்பதாக எழுந்த புகாரையடுத்து கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

Published:Updated:

காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்கு ‘வசூல்’ நடப்பதாகப் புகார் - எச்சரிக்கை விடுத்த வேலூர் ஆட்சியர்!

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்கு பணியாளர்களைத் தேர்வுசெய்வதில், வசூல் வேட்டை நடப்பதாக எழுந்த புகாரையடுத்து கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
News
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

மிழக அரசுப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சத்துணவு குறைப்பாட்டைபொ போக்கவும், அவர்கள் காலை உணவை உட்கொள்ளும் வகையிலும் காலை சிற்றுண்டித் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முதற்கட்டமாக, சில மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டம்

இந்த நிலையில், சமையலர் பணிக்கு பணியாளர்களைத் தேர்வுசெய்வதில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் எனப் பலரும் ‘வசூல்’ வேட்டையில் இறங்கியிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், கல்லாகட்டும் கும்பலுக்கு எச்சரிக்கைவிடுக்கும்விதமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‘‘110 விதியின்கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி, வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, கே.வி.குப்பம் ஆகிய நான்கு வட்டாரங்களிலும், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், ஒடுகத்தூர் ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தில், சமையலர் பணிக்குத் தற்காலிகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணி நிரந்தரம் கிடையாது.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இந்தத் திட்டத்தில் சமையலராகத் தேர்வுசெய்யப்படும், சுய உதவிக்குழு மகளிரின் மகன் அல்லது மகள், சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் ஆரம்ப வகுப்பில் பயில வேண்டும். தொடக்கப்பள்ளியைவிட்டு அவரின் மகன் அல்லது மகள் நீங்கிச் செல்லும்போது, அவருக்கு பதிலாக வேறொரு தகுதியுடைய சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர், சமையலராக தேர்வுசெய்யப்படுவார். சமையலர் பணிக்குத் தேர்வுசெய்ய கையூட்டு, பணம் கேட்பதாக ஏதேனும் புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.