Published:Updated:

"`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் தவறானது என நிரூபித்தால் சினிமாவை விட்டுவிடுகிறேன்!"- விவேக் அக்னிஹோத்ரி

விவேக் அக்னிஹோத்ரி
News
விவேக் அக்னிஹோத்ரி

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, கோவா திரைப்பட விழா சர்ச்சை தொடர்பாக விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

Published:Updated:

"`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் தவறானது என நிரூபித்தால் சினிமாவை விட்டுவிடுகிறேன்!"- விவேக் அக்னிஹோத்ரி

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, கோவா திரைப்பட விழா சர்ச்சை தொடர்பாக விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரி
News
விவேக் அக்னிஹோத்ரி

53-வது இந்திய - சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 9 நாள்கள் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தத் திரைப்பட விழாவில் 'ஜெய்பீம்', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் திரையிடப்பட்டன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய - சர்வதேச விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவின் இப்படியான மதிப்புமிக்க திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்றதொரு பிரசாரத் தன்மை வாய்ந்த இழிவான படத்தைப் பார்த்தது மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் தருகிறது.

 நாடவ் லேபிட்
நாடவ் லேபிட்

இது போன்ற கௌரவமான திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இது இல்லை. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று விமர்சித்திருந்தார்.

நாடவ் லேபிட்டின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் நவோர் கிலோனும் தனது எதிர்ப்பைத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, இந்தியச் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட்டின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்த விமர்சனத்திற்கு எதிராகக் காலையிலேயே மறைமுகமாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அவர் படத்தைப் பற்றியோ, சம்பவத்தைப் பற்றியோ வெளிப்படையாகக் குறிப்பிடாமல், “உண்மை மிகவும் ஆபத்தானது. சில நேரங்களில் அது மக்களைப் பொய் சொல்லவும் தூண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், "இவையெல்லாம்  எனக்குப் புதிதல்ல. ஏனெனில் இதுபோன்ற வார்த்தைகள்  ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாலும் நகர்ப்புற நக்சல்களாலும், 'துக்டே துக்டே’ கேங்கின் ஆதரவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின் மேடையில், இவ்வாறு பேசியது ஆச்சரியமாகவுள்ளது. எப்போதுமே இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கும் இவர்கள் யார்?

கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என சுமார் 700 பேரிடம் நேர்காணல் செய்த பின்னர்தான் இப்படத்தை எடுத்தோம். அந்த 700 பேரையும் கொச்சையாகப் பேசுகிறீர்களா?

நகர்ப்புற  நக்சல்கள் மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்துப் பேசிய நாடவ் லேபிட் போன்றோர் இப்படத்தில் வரும் காட்சிகள் மற்றும் உரையாடல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நிரூபிக்க நான் அவர்களுக்குச் சவால் விடுகிறேன். அப்படி அவர்கள் நிரூபித்தால், நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.