Published:Updated:

பெங்களூரு: சொத்து வரி பாக்கி... மான்யதா தொழில்நுட்பப் பூங்காவுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

பெங்களூரு மாநகராட்சி
News
பெங்களூரு மாநகராட்சி

சொத்து வரி பாக்கியைச் செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பிவந்தது. இதற்கிடையே 70 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துவரியைச் செலுத்தாததால் பிப்ரவரி 1 அன்று சீல் வைக்கப்பட்டது.

Published:Updated:

பெங்களூரு: சொத்து வரி பாக்கி... மான்யதா தொழில்நுட்பப் பூங்காவுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

சொத்து வரி பாக்கியைச் செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பிவந்தது. இதற்கிடையே 70 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துவரியைச் செலுத்தாததால் பிப்ரவரி 1 அன்று சீல் வைக்கப்பட்டது.

பெங்களூரு மாநகராட்சி
News
பெங்களூரு மாநகராட்சி

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்றான மான்யதா தொழில்நுட்ப்ப பூங்காவின் உரிமையாளர்களிடம் சொத்து வரி பாக்கியைச் செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பிவந்தது. 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வரியைச் செலுத்தாததால் பிப்ரவரி 1 அன்று சீல் வைக்கப்பட்டது மான்யதா தொழில்நுட்பப் பூங்கா.

பெங்களூரு நாகவாராவில் உள்ள மன்யாதா தொழில்நுட்பப் பூங்கா, நாட்டின் மிகப்பெரிய, பழைமையான மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்று. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழில்நுட்பப் பூங்காவில் உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

சொத்து வரி
சொத்து வரி

அவற்றில் காக்னிசன்ட், பிலிப்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஐபிஎம், லார்சன் & டூப்ரோ போன்றவை சில முக்கிய நிறுவனங்கள். 2001 -ல் நிறுவப்பட்ட இந்தத் தொழில்நுட்பப் பூங்காவின் பல்வேறு அலுவலகங்களில் சுமார் 1,50,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பப் பூங்காவின் உரிமையாளர்களுக்கு சொத்து வரி பாக்கியைச் செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பி வந்தது. சொத்து வரியைச் செலுத்தாததால் பிப்ரவரி 1 அன்று சொத்து வரி செலுத்தத் தவறிய உரிமையாளர்கள்மீது சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, தொழில்நுட்பப் பூங்காவின் கதவுகளுக்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையர் பூர்ணிமா கூறுகையில், "டெக் பார்க் உரிமையாளர்கள் நிலுவையிலுள்ள 70 கோடி ரூபாய் சொத்து வரியைச் செலுத்தத் தவறியதால், முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தோம். சமீபத்தில் வரி திருத்தப் பணியை முடித்தபோது, ​​செலுத்தாத விவகாரம் தெரியவந்தது. இத்தனை நாள்களாக வரி செலுத்தாததால், சீல் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதோடு அவர்களுக்கு வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

வரி செலுத்தாதது தொடர்பான சிக்கல்களை இந்தத் தொழில்நுட்பப் பூங்கா எதிர்கொள்வது இது முதன்முறை அல்ல. 2016-ம் ஆண்டிலும், வேறுபட்ட வரிகளை செலுத்தாததற்காக தொழில்நுட்ப பூங்காவுக்குள் இருக்கும் அலுவலகங்களில் இருந்த பொருள்களைப் பறிமுதல் செய்ய பெங்களூரு மாநகராட்சி லாரிகளுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பப் பூங்கா
தொழில்நுட்பப் பூங்கா

இது குறித்து மான்யதா டெக் பார்க் நிர்வாகத்தினர் கூறுகையில், "பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராக மான்யதா டெக் பார்க் நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்தச் சொத்து வரி தொடர்பான வழக்கு தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது'' என்றனர்.