Published:Updated:

``நீங்கள் இந்தியாவிடம் சரணடைந்தது போல அவமானப்பட நேரிடும்" - பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான்!

தாலிபன் தலைவர் பகிர்ந்த புகைப்படம்
News
தாலிபன் தலைவர் பகிர்ந்த புகைப்படம்

ஆப்கானிஸ்தானைக் கையகப்படுத்தியிருக்கும் தாலிபன்கள், பாகிஸ்தானை எச்சரித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:

``நீங்கள் இந்தியாவிடம் சரணடைந்தது போல அவமானப்பட நேரிடும்" - பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானைக் கையகப்படுத்தியிருக்கும் தாலிபன்கள், பாகிஸ்தானை எச்சரித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தாலிபன் தலைவர் பகிர்ந்த புகைப்படம்
News
தாலிபன் தலைவர் பகிர்ந்த புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான தாலிபன்கள் மீண்டும் அந்த நாட்டைக் கைப்பற்றினர். அப்போது அவர்களுக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்தது பாகிஸ்தான். அதன் பிறகே மற்ற நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கினர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் காபுல் சென்றிருந்தார். ஆனால், இன்னொரு பக்கம் தாலிபன்கள் பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban) எனும் குழுவை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்திவந்தனர் எனச் சொல்லப்படுகிறது.

தாலிபான் தலைவர்
தாலிபான் தலைவர்

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கும் தெஹ்ரிக் இ தாலிபன்களுக்குமிடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் இருந்தது. கடந்த ஆண்டு, இந்த ஒப்பந்தத்திலிருந்து தாலிபன்கள் வெளியேறினர். இதைத் தொடர்ந்து, பலுஸிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தாலிபன்கள் - பாகிஸ்தான் ராணுவம் இடையான மோதல்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, தாலிபன்கள் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தாலிபன்களின் மூத்த தலைவர் அகமது யாசிர் (Ahmed Yasir) தன் ட்விட்டர் பக்கத்தில் 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து, ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் படத்தைப் பகிர்ந்து, " எத்தனையோ சாம்ராஜ்யங்களின் புதைகுழியாக ஆப்கானிஸ்தான் இருந்திருக்கிறது.

எனவே ஆப்கானிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த நினைக்க வேண்டாம். அப்படி ராணுவ தாக்குதலை நடத்த யோசித்தால் 1971-ம் ஆண்டு இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த அவமானகரமான வரலாறுதான் மீண்டும் நிகழும்" என எச்சரித்திருக்கிறார்.