
ஆ.பிரின்ஸ், சித்த மருத்துவர்ஹெல்த்
முருங்கை மரத்தின் விதைகள் மிகுந்த மருத்துவக் குணம் கொண்டவை. நரம்புக் கோளாறு முதல் தூக்கமின்மை வரை பல நோய்களுக்கு மருந்து.

* முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடியாக்கி 48 நாள்கள் தொடர்ந்து பாலுடன் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் நரம்புகள் பலப்படும். சோர்வு மறையும்; ரத்தச் சோகை நீங்கும்; எலும்புகள் பலப்படும்.

* செல்கள் சிதையாமல் பாதுகாப்பதுடன் புதிதாக செல்கள் உருவாகப் பெரிதும் துணைபுரியும்.
* முருங்கை விதை, தாம்பத்யத்தை மேம்படுத்தும். முருங்கை விதையின் உள்ளேயிருக்கும் பருப்பைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* முருங்கை விதையை அரைத்து சம அளவு கடலை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி மூட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.

* முருங்கை விதைப் பொடியைக் காலை, மாலை இருவேளையும் மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறலாம்.
* இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றுவதுடன் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் சக்தி முருங்கை விதைக்கு உண்டு. சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- எம்.மரிய பெல்சின்