<p><span style="color: #ff0000"><strong>ச</strong></span>ருமத்தைக் காக்க செயற்கை காஸ்மெடிக் பொருட்களை நோக்கி ஓட வேண்டியது இல்லை. சில மூலிகைகள் மற்றும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் பக்கம் திரும்பினாலே போதும். அவை இயற்கைமுறையில் சருமத்தைச் சுத்தப்படுத்தும், மென்மையாக்கும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>கற்றாழை: </strong></span>மிகச் சிறந்த ஆன்டிஏஜிங் பொருள். மாய்ஸ்சரைசராகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சின் பாதிப்பைத் தடுக்கும். இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களின் உற்பத்திக்கு உதவும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>தேங்காய்ப் பால்: </strong></span>மென்மையான சருமம் தரும். இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கலாகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சருமச் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி, தாமிரம் இருப்பதால் சருமத்தின் இழுவைத்தன்மையை (எலாஸ்டிசிட்டி) காத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>தேன்: </strong></span>சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். மிகச் சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல். எனவே, காயங்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.</p>.<p><span style="color: #ff0000"><strong>மாதுளை: </strong></span>சுருக்கங்களைக் குறைத்து, புதிய செல்கள் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தின் முதுமையைத் தாமதப்படுத்துகிறது. உலர் சருமத்தினர் மாதுளை சாற்றைத் தொடர்ந்து தடவிவந்தால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். சருமம், பொலிவும் மென்மையும் அடையும்.</p>
<p><span style="color: #ff0000"><strong>ச</strong></span>ருமத்தைக் காக்க செயற்கை காஸ்மெடிக் பொருட்களை நோக்கி ஓட வேண்டியது இல்லை. சில மூலிகைகள் மற்றும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் பக்கம் திரும்பினாலே போதும். அவை இயற்கைமுறையில் சருமத்தைச் சுத்தப்படுத்தும், மென்மையாக்கும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>கற்றாழை: </strong></span>மிகச் சிறந்த ஆன்டிஏஜிங் பொருள். மாய்ஸ்சரைசராகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சின் பாதிப்பைத் தடுக்கும். இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களின் உற்பத்திக்கு உதவும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>தேங்காய்ப் பால்: </strong></span>மென்மையான சருமம் தரும். இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கலாகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சருமச் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி, தாமிரம் இருப்பதால் சருமத்தின் இழுவைத்தன்மையை (எலாஸ்டிசிட்டி) காத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>தேன்: </strong></span>சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். மிகச் சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல். எனவே, காயங்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.</p>.<p><span style="color: #ff0000"><strong>மாதுளை: </strong></span>சுருக்கங்களைக் குறைத்து, புதிய செல்கள் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தின் முதுமையைத் தாமதப்படுத்துகிறது. உலர் சருமத்தினர் மாதுளை சாற்றைத் தொடர்ந்து தடவிவந்தால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். சருமம், பொலிவும் மென்மையும் அடையும்.</p>