Published:Updated:

கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு!

மாரடைப்பு

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்த நிலையில் அவர் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

Published:Updated:

கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு!

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்த நிலையில் அவர் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

மாரடைப்பு

குஜராத்தில், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பால் 45 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட்!
கிரிக்கெட்!

குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த 45 வயதான மயூர் என்பவர், தன் நண்பர்களுடன் சாஸ்திரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாட்டின்போது பதற்றமாகக் காணப்பட்டவர், கீழே அமர்ந்த நிலையில், நிலை தடுமாறி நிலத்தில் சாய்ந்திருக்கிறார்.

உடனே, அவருடன் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்கள் பதறிப்போனார்கள். அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்த நிலையில் அவர் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என அறிவித்துள்ளார்.

Death (Representational Image)
Death (Representational Image)

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நண்பர், கண்முன்னே மாரடைப்பால் இறந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பால் இறந்துபோன நிகழ்வு எட்டாவது முறையாக நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் மயூர்தான் என்றும், அவருக்கு எந்த விதமான போதைப்பழக்கமும் இல்லை என்றும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.