Published:Updated:

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தடுப்பூசிகள் உள்ளனவா?

தடுப்பூசி
News
தடுப்பூசி

நிமோனியா பாதிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை வரலாம். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது அது குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பது மட்டுமன்றி, அவர்களது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்கவும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் இருக்கின்றன.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தடுப்பூசிகள் உள்ளனவா?

நிமோனியா பாதிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை வரலாம். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது அது குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பது மட்டுமன்றி, அவர்களது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்கவும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் இருக்கின்றன.

தடுப்பூசி
News
தடுப்பூசி

Doctor Vikatan : குழந்தைகளுக்கும் ஃப்ளூ தடுப்பூசி அவசியமா.... தடுப்பூசிகளின் மூலம் அவர்களது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க முடியுமா?

சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா

குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா | சென்னை
குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா | சென்னை

எல்லாக் குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதங்களில் முதல் டோஸ் போடப்பட வேண்டும். ஒரு மாதம் கழித்து, அதாவது 7-வது மாதத்தில் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் ஒரு டோஸ் என குழந்தையின் 5 வயது வரை இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். ஏனென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அடிக்கடி நோய்வாய்ப் படுவார்கள்.

அடுத்து நிமோனியா பாதிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை வரலாம். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது அது குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பது மட்டுமன்றி, அவர்களது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்கவும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் இருக்கின்றன. குழந்தை பிறந்த 6, 10, மற்றும் 14 வாரங்களில் போடப்படும். பிறகு ஒன்றரை வயதில் பூஸ்டர் டோஸ் போடப்படும். பிறகு 6 மற்றும் 7 வயதில் போடப்படும். இந்தத் தடுப்பூசியானது மழைக்காலத்தில் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளிலிருந்தும் குழந்தைகளைக் காக்கும்.

நிமோனியா
நிமோனியா
மாதிரிப்படம்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தீர்வாகாது. அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். சரிவிகித உணவுப்பழக்கத்தைப் பழக்க வேண்டும். எல்லா சூழலுக்கும் அவர்கள் பழக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். அதைத் தவிர்த்து அவர்களைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையுமே தவிர, கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.