<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பது வெறும் ஆகாரம் மட்டுமல்ல... ஆரோக்கிய பானமும்கூட. முகப்பொலிவு, கூந்தல் பராமரிப்புக்கும்கூட உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்.</p>.<p>கஞ்சியின் சிறப்புகள் குறித்து விளக்குகிறார் அவர்.</p>.<p><br /> <br /> ``சாதம் வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்தும் சிறிதளவு இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இனோசிட்டால், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. `கிளைசெமிக் இண்டெக்ஸ்’ அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி சாதத்தில் செய்யப்பட்ட கஞ்சியில், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. </p>.<p>ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருப்பவர்கள் கஞ்சி குடித்ததும், அதற்கேற்ப உடல் உழைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். பருமனாக இருப்பவர்களும் கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். திரவ உணவாக இருப்பதால் மென்று சாப்பிட வாய்ப்பில்லாமல் அப்படியே விழுங்குவோம்; அது மிக விரைவாக செரிமானமாகிவிடும். மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே சாதம் வடித்த கஞ்சியை அருந்த வேண்டும். உடனடி எனர்ஜி கிடைக்கும். கஞ்சியைப் புளிக்கவைத்து மறுநாள் சாப்பிட்டால், அது கூடுதல் நன்மைகளைத் தரும். ரசாயனம் தெளிக்கப்படாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில் வடித்த கஞ்சியைத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும். இந்தக் கஞ்சியை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.’’<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இரா.செந்தில் குமார் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பது வெறும் ஆகாரம் மட்டுமல்ல... ஆரோக்கிய பானமும்கூட. முகப்பொலிவு, கூந்தல் பராமரிப்புக்கும்கூட உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்.</p>.<p>கஞ்சியின் சிறப்புகள் குறித்து விளக்குகிறார் அவர்.</p>.<p><br /> <br /> ``சாதம் வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்தும் சிறிதளவு இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இனோசிட்டால், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. `கிளைசெமிக் இண்டெக்ஸ்’ அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி சாதத்தில் செய்யப்பட்ட கஞ்சியில், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. </p>.<p>ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருப்பவர்கள் கஞ்சி குடித்ததும், அதற்கேற்ப உடல் உழைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். பருமனாக இருப்பவர்களும் கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். திரவ உணவாக இருப்பதால் மென்று சாப்பிட வாய்ப்பில்லாமல் அப்படியே விழுங்குவோம்; அது மிக விரைவாக செரிமானமாகிவிடும். மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே சாதம் வடித்த கஞ்சியை அருந்த வேண்டும். உடனடி எனர்ஜி கிடைக்கும். கஞ்சியைப் புளிக்கவைத்து மறுநாள் சாப்பிட்டால், அது கூடுதல் நன்மைகளைத் தரும். ரசாயனம் தெளிக்கப்படாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில் வடித்த கஞ்சியைத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும். இந்தக் கஞ்சியை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.’’<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இரா.செந்தில் குமார் </strong></span></p>