பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஹெல்த் ஸ்பெஷல் : இயற்கையில் இருக்கு எல்லாம்!

ஹெல்த் ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் ஸ்பெஷல்

டாக்டர் விக்ரம்குமார், சித்த மருத்துவர்

ஹெல்த் ஸ்பெஷல்
ஹெல்த் ஸ்பெஷல்

ளி, இருமல் போன்றவை நம் உடல்நலம் உண்டாக்கும் எதிர்வினைகளே. அப்படி ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மருந்து, மாத்திரைகளை நாடுவதைவிட, இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி எளிய மருந்துகள் தயாரித்து நோய் போக்கிய மரபு நம்முடையது. இன்று, சாதாரண சளி, இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரைகூட இல்லாமல் மாத்திரைகளை வாங்கி விழுங்குபவர்கள் பலர்.

இயற்கையில் இருக்கு எல்லாம்!
இயற்கையில் இருக்கு எல்லாம்!

இதன் பக்க விளைவு என்ன தெரியுமா? நோயிலிருந்து வெளிவர தன்னைத் தானே உடல் செப்பனிடும் செயல்பாட்டுக்கு இந்த மாத்திரைகள் முட்டுக்கட்டைபோட, அதனால் ஏற்படும் விளைவுகளும், பக்க விளைவுகளும் பல. எளிய ஆரோக்கியப் பிரச்னைகளுக்கு வீரிய மருந்துகளை நாடாமல், இயற்கையின் கொடைகளைப் பயன்படுத்துவோம். சில அடிப்படைப் பரிந்துரைகள் இங்கே...

சீரகம் இன், செரிமானக் கோளாறு அவுட்!

  • வயிறு மந்தமாக இருப்பின் சீரகம் போட்டுக் காய்ச்சிய குடிநீரைப் பருகலாம். சோம்பு கொண்டு தயாரிக்கப்படும் சோம்புத் தேநீரும் நல்லது.

சீரகம் இன், செரிமானக் கோளாறு அவுட்!
சீரகம் இன், செரிமானக் கோளாறு அவுட்!
  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் உதவியுடன் தயாரிக்கப்படும் ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’ செரிமானக் கருவிகளைத் துடிப்புடன் செயல்படவைக்கும் கூர்மையான ஆயுதம். தேனில் குழைத்தும் பஞ்ச தீபாக்கினி சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

சளி, இருமலுக்குத் திரிகடுகும் மிளகும் போதும்!

  • தொண்டை லேசாகக் கரகரக்கும்போதே சிற்றரத்தை அல்லது சிறிய அதிமதுரத் துண்டை வாயில் போட்டுச் சுவைக்க, குணம்பெறுதல் ஆரம்பமாகிவிடும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூலிகைகளின் துணையுடன் தயாரிக்கப்படும் சித்த மருந்தான `திரிகடுகு சூரணம்’ சளி, இருமலுக்கான அற்புத மருந்து. லேசான உடல் சோர்வு, மூக்கில் நீர்வடிதல் போன்ற குறிகுணம் தோன்றும்போது திரிகடுகு சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

சளி, இருமலுக்குத் திரிகடுகும் மிளகும் போதும்!
சளி, இருமலுக்குத் திரிகடுகும் மிளகும் போதும்!
  • கிருமிகளை விரட்டியடிக்கும் மிளகுக் கஷாயம், வெப்பத்தை அளித்துக் கோழையை வெளியேற்றும் கொள்ளு ரசம், கபத்தைத் தகர்க்கும் முசுமுசுக்கை அடை, தொட்டுக்கொள்ள தூதுவளைச் சட்னி, சிற்றுண்டியாக கற்பூரவல்லி பஜ்ஜி… இதுபோன்ற உணவுகளே அடிப்படையான கப நோய்களைத் துரத்திவிடும்.

  • நீரில் துளசி இலை, மிளகு, கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி அருந்துவது, பாலில் மிளகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துப் பருகுவது சளியை விரட்டும்.

  • வெற்றிலையில் மிளகை வைத்து மென்று சாப்பிட கோழை வெளியேறும். மிளகைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். ஆடாதோடை கொண்டு தயாரிக்கப்படும் ஆடாதோடை மணப்பாகு மற்றும் ஆடாதோடை குடிநீர், கப நோய்களுக்கான சிறந்த மருந்து.

பசி, கோபம், தண்ணீர்... மற்றும் தலைவலி!

  • தலைவலி என்பது உடலில் ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. தலைவலிக்கான அடிப்படையைக் கண்டறிவது முக்கியம். தற்காலிகமாகத் தலைவலி ஏற்படுவதற்கு உறக்கமின்மை, தேவையான அளவு தண்ணீர் பருகாதது (நீர்த்துவம் குறைதல்), பசி, அதிக கோபம் போன்றவை முக்கிய காரணங்கள். மேலும், சில காய்ச்சல் நிலைகளில் தலைவலி ஏற்படலாம். நீண்ட நாள்களாகத் தலைவலி இருப்பின் மூளைப்புற்றுகூட காரணமாக இருக்கலாம் என்பதால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

பசி, கோபம், தண்ணீர்... மற்றும் தலைவலி!
பசி, கோபம், தண்ணீர்... மற்றும் தலைவலி!
  • நீர்கோத்து தலை பாரமாக இருப்பின் வேதுபிடித்தல் அற்புதமான பலனைக் கொடுக்கும். கொதிக்கின்ற தண்ணீரில் நொச்சி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை போன்ற ஆவியாகக்கூடிய, எண்ணெய்ச் சத்து நிறைந்த மூலிகைகளைப் போட்டு வேது பிடிக்கும்போது, தலைபாரம் படிப்படியாக இறங்குவதை உணரலாம்.

  • நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை, இஞ்சிச் சாற்றில் குழைத்து நெற்றி, மூக்குப் பகுதிகளில் பற்றுப்போடுவதாலும் தலைபாரம் குறையும். சுக்கைப் பால்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம்.

  • பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி நுரையீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி!

  • `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இஞ்சி ரசம், இஞ்சித் துவையல், இஞ்சித் தேன் முதன்மையான மருந்து.

  • மருத்துவர் ஆலோசனையோடு சீந்தில் சூரணம், அதிமதுரச் சூரணம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஒற்றைத் தலைவலியின் தீவிரம் குறையும்.

ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி!
ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி!
  • வேனிற்காலங்களில் நீர்ச்சத்து மிக்க நமது பாரம்பர்ய பானங்களான மோர், இளநீர், பானகம், நன்னாரி சர்பத் போன்றவை போதும், வெப்பத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்க!

டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன் வெர்சஸ் கற்றாழை!

  • எந்நேரமும் செல்போன் என்றாகிவிட்டது. கண்களுக்கு அருகில் உமிழப்படும் அந்த அதிக வெளிச்சம், குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கண்களைப் பாதுகாக்க, நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி.

  • கண்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க கற்றாழைத் துண்டுகளைத் துணியில் முடிந்து கண்களின் மேல் வைக்கலாம். ஈரத் துணியைக் கண்களின் மீது போடலாம். கண் தசைகளுக்கு பலம் அளிக்கும் கண்களுக்கான பிரத்யேக யோகப் பயிற்சி முறைகளைத் தொடர்ந்து செய்துவரலாம்.

  • தற்போதைய காலத்தின் கட்டாயம் ஒருங்கிணைந்த மருத்துவம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எளிய உபாதைகளுக்குக்கூட மாத்திரைகளை நாடுவது மிகப்பெரிய மருத்துவப் பிழை என்பதை மனதில் வைப்போம்!