<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சா</strong></span>லை ஓரங்களில், காலி இடங்களில் புதர் போல மண்டி வளர்ந்திருக்கும் நாயுருவியை நாம் தினமும் கடந்து் செல்கிறோம். ஆனால், அது மிகச்சிறந்த மூலிகை என்பது தெரியாது. நாயுருவிக்கு `சிறு கடலாடி’, `மாமுனி’, `நாய்க்குருவி’, `நாயரஞ்சி’ எனப் பல பெயர்கள் உள்ளன. <br /> <br /> நாயுருவியின் இன்னொரு வகை செந்நாயுருவி. ‘இது, உடலைத் தேற்றுவதற்கும், சிறுநீரைப் பெருக்குவதற்கும், முறைச்சுரம் அகற்றுவதற்கும் உதவும்’ என்கிறது, சித்த மருத்துவம்.<br /> <br /> இதன் இலைக்கு, கழிச்சல், ரத்தக்கழிச்சல், வெள்ளைப்படுதல் அதிக வியர்வை ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இதன் முழுச் செடியை அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் அழுக்குத்தடைகளை போக்குவதற்குப் பயன்படுத்தினார்கள்.<br /> <br /> உடலில் ஏற்படும் வீக்கம், ரத்தக்குறைவு, காமாலை போன்றவற்றைப் போக்குவதோடு, மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் தன்மையும் நாயுருவிக்கு உண்டு.</p>.<p>நாயுருவி இலைச்சாற்றை அருந்திவந்தால், வயிற்று வலி நீங்கும். சொறி ஏற்பட்ட இடங்களில் தடவிவர குணம் கிடைக்கும்.<br /> <br /> இதன் இலைகளை வெல்லத்தோடு சேர்த்து அரைத்தோ அல்லது மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தோ சாப்பிட்டுவர, காய்ச்சல் குணமாகும்.<br /> <br /> சிறு பூச்சிக்கடிகளால் ஏற்படும் நஞ்சை முறிக்க, நாயுருவி இலைகளைத் தண்ணீர்விட்டு அரைத்துப் பூசலாம். <br /> <br /> நாயுருவி வேரை நன்றாகக் கழுவி, சுத்தம்செய்து, காயவைத்து, சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்துப் பொடித்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட, இருமல் குணம் ஆகும்.<br /> <br /> நாயுருவி வேரைச் சுட்டு சாம்பலாக்கி, அதனுடன் 325 மி.கி வெல்லத்தைச் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.<br /> <br /> நாயுருவி விதைகளை எடுத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ள மூல நோய் குணமாகும்.<br /> <br /> இதன் பச்சை வேரால் பல் துலக்கிவர, பல்லில் உள்ள கறைகள் நீங்கும். </p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- பு.விவேக் ஆனந்த்</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சா</strong></span>லை ஓரங்களில், காலி இடங்களில் புதர் போல மண்டி வளர்ந்திருக்கும் நாயுருவியை நாம் தினமும் கடந்து் செல்கிறோம். ஆனால், அது மிகச்சிறந்த மூலிகை என்பது தெரியாது. நாயுருவிக்கு `சிறு கடலாடி’, `மாமுனி’, `நாய்க்குருவி’, `நாயரஞ்சி’ எனப் பல பெயர்கள் உள்ளன. <br /> <br /> நாயுருவியின் இன்னொரு வகை செந்நாயுருவி. ‘இது, உடலைத் தேற்றுவதற்கும், சிறுநீரைப் பெருக்குவதற்கும், முறைச்சுரம் அகற்றுவதற்கும் உதவும்’ என்கிறது, சித்த மருத்துவம்.<br /> <br /> இதன் இலைக்கு, கழிச்சல், ரத்தக்கழிச்சல், வெள்ளைப்படுதல் அதிக வியர்வை ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இதன் முழுச் செடியை அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் அழுக்குத்தடைகளை போக்குவதற்குப் பயன்படுத்தினார்கள்.<br /> <br /> உடலில் ஏற்படும் வீக்கம், ரத்தக்குறைவு, காமாலை போன்றவற்றைப் போக்குவதோடு, மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் தன்மையும் நாயுருவிக்கு உண்டு.</p>.<p>நாயுருவி இலைச்சாற்றை அருந்திவந்தால், வயிற்று வலி நீங்கும். சொறி ஏற்பட்ட இடங்களில் தடவிவர குணம் கிடைக்கும்.<br /> <br /> இதன் இலைகளை வெல்லத்தோடு சேர்த்து அரைத்தோ அல்லது மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தோ சாப்பிட்டுவர, காய்ச்சல் குணமாகும்.<br /> <br /> சிறு பூச்சிக்கடிகளால் ஏற்படும் நஞ்சை முறிக்க, நாயுருவி இலைகளைத் தண்ணீர்விட்டு அரைத்துப் பூசலாம். <br /> <br /> நாயுருவி வேரை நன்றாகக் கழுவி, சுத்தம்செய்து, காயவைத்து, சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்துப் பொடித்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட, இருமல் குணம் ஆகும்.<br /> <br /> நாயுருவி வேரைச் சுட்டு சாம்பலாக்கி, அதனுடன் 325 மி.கி வெல்லத்தைச் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.<br /> <br /> நாயுருவி விதைகளை எடுத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ள மூல நோய் குணமாகும்.<br /> <br /> இதன் பச்சை வேரால் பல் துலக்கிவர, பல்லில் உள்ள கறைகள் நீங்கும். </p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- பு.விவேக் ஆனந்த்</strong></span></p>