<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சூ</strong></span>ன்ய முத்திரை என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதாவது, வெற்றிடத்தைக் குறிப்பது என்று அர்த்தம். இந்த ஏதுமற்ற வெற்றிடமே அனைத்துப் பொருட்களுக்கும் இருப்பிடத்தைத் தருகிறது. இந்த வெற்றிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது உடலின் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> எப்படிச் செய்வது?</strong></span><br /> <br /> ஆகாயத்தைக் குறிக்கும் நடுவிரலை மடக்கி, உள்ளங்கை நடுப்பகுதியைத் தொட வேண்டும். கட்டை விரலால் நடு விரலை அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.<br /> <br /> வெறும் வயிற்றோடு செய்யவேண்டிய முத்திரை இது. தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்தோ, நாற்காலியில், கால்களைத் தரையில் பதித்தோ, ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.<br /> <br /> உடல்நலத்தில் குறைபாடு இருப்பவர்கள் மட்டும் இதைச் செய்யலாம். ஆனால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பலன்கள்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்னைகளைப் போக்கும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கடுமையான காது இரைச்சல், காதுக்குள் ஏதோ ஒலி கேட்பது, யாரோ பேசுவதுபோல் தோன்றுவது ஆகிய தொந்தரவுகளுக்கு 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>`வெர்டிகோ’ (Vertigo) எனப்படும் தலைச்சுற்றல் சில நாட்களிலேயே கட்டுப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>வயோதிகம் காரணமாக அல்லது இடையில் ஏதேனும் சில காரணங்களால் காது கேளாமை, பிறவியிலேயே காது கேளாமை ஆகிய பிரச்னை இருப்பவர்கள் செய்துவர, மாற்றங்கள் தெரியும். காதில் சீழ், புண் ஆகியவை குணமாகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>பயணங்களின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை வராமல் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்து வருவது நல்லது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>தீவிர காய்ச்சல், நாட்பட்ட நோய்கள் ஆகியவை படிப்படியாகக் குறையும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>உடலில் ஏற்படும் மதமதப்பு தீரவும், நீண்ட நாட்களாக இருந்த தொண்டை வலி நீங்கவும் உதவும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கட்டியாக உதிரம் வெளியேறுதல், நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு, மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்து பலனடையலாம்.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ப்ரீத்தி, <br /> <br /> படம்: தே.அசோக் குமார்</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சூ</strong></span>ன்ய முத்திரை என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதாவது, வெற்றிடத்தைக் குறிப்பது என்று அர்த்தம். இந்த ஏதுமற்ற வெற்றிடமே அனைத்துப் பொருட்களுக்கும் இருப்பிடத்தைத் தருகிறது. இந்த வெற்றிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது உடலின் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> எப்படிச் செய்வது?</strong></span><br /> <br /> ஆகாயத்தைக் குறிக்கும் நடுவிரலை மடக்கி, உள்ளங்கை நடுப்பகுதியைத் தொட வேண்டும். கட்டை விரலால் நடு விரலை அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.<br /> <br /> வெறும் வயிற்றோடு செய்யவேண்டிய முத்திரை இது. தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்தோ, நாற்காலியில், கால்களைத் தரையில் பதித்தோ, ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.<br /> <br /> உடல்நலத்தில் குறைபாடு இருப்பவர்கள் மட்டும் இதைச் செய்யலாம். ஆனால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பலன்கள்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்னைகளைப் போக்கும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கடுமையான காது இரைச்சல், காதுக்குள் ஏதோ ஒலி கேட்பது, யாரோ பேசுவதுபோல் தோன்றுவது ஆகிய தொந்தரவுகளுக்கு 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>`வெர்டிகோ’ (Vertigo) எனப்படும் தலைச்சுற்றல் சில நாட்களிலேயே கட்டுப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>வயோதிகம் காரணமாக அல்லது இடையில் ஏதேனும் சில காரணங்களால் காது கேளாமை, பிறவியிலேயே காது கேளாமை ஆகிய பிரச்னை இருப்பவர்கள் செய்துவர, மாற்றங்கள் தெரியும். காதில் சீழ், புண் ஆகியவை குணமாகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>பயணங்களின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை வராமல் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்து வருவது நல்லது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>தீவிர காய்ச்சல், நாட்பட்ட நோய்கள் ஆகியவை படிப்படியாகக் குறையும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>உடலில் ஏற்படும் மதமதப்பு தீரவும், நீண்ட நாட்களாக இருந்த தொண்டை வலி நீங்கவும் உதவும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கட்டியாக உதிரம் வெளியேறுதல், நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு, மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்து பலனடையலாம்.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ப்ரீத்தி, <br /> <br /> படம்: தே.அசோக் குமார்</strong></span></p>