<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மூ</span></strong>ளைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால்தான், ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்ற பழமொழியே உருவானது. ஆயுர்வேதத்தின்படி, ஞாபகசக்தியை மூன்று நிலைகளாகக் கூறலாம். அவை, தகவலை உள்வாங்கிக்கொள்ளுதல் (Receiving), அவற்றை மூளையில் சரியாகப் பதிவுசெய்தல் (Recording), தேவையான நேரத்தில் அவற்றை நினைவுகூர்தல் (Recalling). இந்த மூன்று நிலைகளுக்கும் வல்லாரை உதவிபுரியும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பலன்கள்:</span></strong><br /> <br /> ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நரம்பு சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வல்லாரை மிக நல்லது. தேர்வுக்காலத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த ரெசிபியாக வல்லாரை சர்பத்தைப் பரிந்துரைக்கலாம். நன்னாரி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மைகொண்டது என்பதால், வெயில் நேரத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்கலாம். வல்லாரையின் துவர்ப்புச் சுவையைக் குறைப்பதற்காக ரெசிபியில் நன்னாரி மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கப்பட்டிருக்கிறது.</p>.<p>வெயில் நேரத்தில், வியர்வையின் காரணமாக சைனஸ் அதிகமாகலாம். வல்லாரை, சைனஸ் பிரச்னையைக் கட்டுப்படுத்த உதவும். தேனும் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும் தன்மைகொண்டது. பொதுவாக, ஒருவர் அளவுக்கதிகமாக யோசித்தால், உடலில் சூடு அதிகரிக்கக்கூடும். இந்த ரெசிபியில், குளிர்ச்சி நிறைந்த நன்னாரியும் இருப்பதால் அந்தப் பிரச்னை ஏற்படாது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் அதிகரிக்கும் உடல்சூட்டைத் தணிக்க, அந்த நாள்களில் அவர்கள் இதைப் பருகலாம்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">தேவையானவை:</span></strong><br /> <br /> <strong>வல்லாரை : ஒரு கைப்பிடி<br /> <br /> நன்னாரி வேர் : சிறு துண்டு<br /> <br /> தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை : தேவையான அளவு<br /> <br /> எலுமிச்சைப் பழச்சாறு : அரை டீஸ்பூன்<br /> <br /> தண்ணீர் : ஒன்றரை கப்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செய்முறை:</span></strong><br /> <br /> வல்லாரையைக் கழுவி சுத்தம் செய்யவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் வல்லாரை இலை, நன்னாரி வேர் போட்டு, மறுபடியும் நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் ஒரு கப்பாக வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியவுடன் வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துப் பருகவும்.</p>.<p><strong>- ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா<br /> </strong></p>.<p><strong>படங்கள்: தே.அசோக்குமார்</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மூ</span></strong>ளைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால்தான், ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்ற பழமொழியே உருவானது. ஆயுர்வேதத்தின்படி, ஞாபகசக்தியை மூன்று நிலைகளாகக் கூறலாம். அவை, தகவலை உள்வாங்கிக்கொள்ளுதல் (Receiving), அவற்றை மூளையில் சரியாகப் பதிவுசெய்தல் (Recording), தேவையான நேரத்தில் அவற்றை நினைவுகூர்தல் (Recalling). இந்த மூன்று நிலைகளுக்கும் வல்லாரை உதவிபுரியும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பலன்கள்:</span></strong><br /> <br /> ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நரம்பு சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வல்லாரை மிக நல்லது. தேர்வுக்காலத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த ரெசிபியாக வல்லாரை சர்பத்தைப் பரிந்துரைக்கலாம். நன்னாரி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மைகொண்டது என்பதால், வெயில் நேரத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்கலாம். வல்லாரையின் துவர்ப்புச் சுவையைக் குறைப்பதற்காக ரெசிபியில் நன்னாரி மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கப்பட்டிருக்கிறது.</p>.<p>வெயில் நேரத்தில், வியர்வையின் காரணமாக சைனஸ் அதிகமாகலாம். வல்லாரை, சைனஸ் பிரச்னையைக் கட்டுப்படுத்த உதவும். தேனும் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும் தன்மைகொண்டது. பொதுவாக, ஒருவர் அளவுக்கதிகமாக யோசித்தால், உடலில் சூடு அதிகரிக்கக்கூடும். இந்த ரெசிபியில், குளிர்ச்சி நிறைந்த நன்னாரியும் இருப்பதால் அந்தப் பிரச்னை ஏற்படாது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் அதிகரிக்கும் உடல்சூட்டைத் தணிக்க, அந்த நாள்களில் அவர்கள் இதைப் பருகலாம்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">தேவையானவை:</span></strong><br /> <br /> <strong>வல்லாரை : ஒரு கைப்பிடி<br /> <br /> நன்னாரி வேர் : சிறு துண்டு<br /> <br /> தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை : தேவையான அளவு<br /> <br /> எலுமிச்சைப் பழச்சாறு : அரை டீஸ்பூன்<br /> <br /> தண்ணீர் : ஒன்றரை கப்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செய்முறை:</span></strong><br /> <br /> வல்லாரையைக் கழுவி சுத்தம் செய்யவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் வல்லாரை இலை, நன்னாரி வேர் போட்டு, மறுபடியும் நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் ஒரு கப்பாக வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியவுடன் வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துப் பருகவும்.</p>.<p><strong>- ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா<br /> </strong></p>.<p><strong>படங்கள்: தே.அசோக்குமார்</strong></p>