
உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!
உமிழ்நீரில் என்னவெல்லாம் இருக்கும்?
உமிழ்நீரில், 98 சதவிகிதம் நீரால் ஆன ஒரு திரவம் இருக்கிறது. இதுதவிர, வைட்டமின்கள், மினரல்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உள்பட பல்வேறு பொருள்கள் நிறைந்திருக்கும்.

எவ்வளவு சுரக்கும்?
ஒரு நாளில் ஒருவருக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை உமிழ்நீர் சுரக்கிறது.

எப்படிச் செயல்படும்?
உமிழ்நீர்ச் சுரப்பிகளின் இயக்கம் முழுவதும், நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில், அனிச்சையாகச் செயல்படும்

* உணவில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியும் இதற்கு உண்டு.

* உமிழ்நீரில் உள்ள என்சைம்கள், உண்ணும் உணவில் உள்ள சத்துகள், ஸ்டார்ச் மற்றும் கொழுப்பை உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்ற உதவும்.

* வாயில் கலக்கும் விஷத்தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றும்.

* நாம் உண்ணும் உணவுப் பொருள்களுடன் சேர்ந்து, உணவைக் குழைவாக்கி, எளிதாக விழுங்கவும் செரிமானம் சீராக நடைபெறவும் உதவும்.

* வாய் சுகாதாரத்தைக் காப்பதுடன், வாயைத் தூய்மையாக வைத்திருக்கவும் இது உதவும்.

* வாய் எப்போதும் ஈரமாக இருக்கவும் தடை எதுவும் இல்லாமல் பேசவும் உதவும்

* இது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும். உமிழ்நீர் இல்லாமல் வாய் உலர்ந்து போகும்போது பற்கள், ஈறுகள் பாதிப்படையும்
* வாயில் அமில, காரத்தன்மையைச் (PH) சமநிலையில் பராமரிக்க உதவும்.

* உமிழ் நீர்ச் சுரப்பியில் இருந்து சுரக்கும் கார்போனிக் ஆன்ஹைட்ரேஸ் (Carbonic anhydrase) சுவையை அறிய உதவும்.

* பற்குழி, பற்சொத்தை போன்றவற்றில் இருந்து காக்கும் நல்ல பாக்டீரியா, அமிலங்கள் வாயிலேயே தங்கி இருக்கவும் இது உதவும்
தொகுப்பு: ஜி.லட்சுமணன், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது
தகவல்: சிவராம கண்ணன், பொது மருத்துவர்